ஒவ்வொரு கட்டமாக ரயில் நிலைய டிக்கெட் கவுன்ட்டர்கள் திறப்பு- இன்று முதல் முன்பதிவு தொடக்கம்
டெல்லி: ரயில் நிலைய டிக்கெட் கவுன்ட்டர்கள் படிப்படியாக திறக்கப்பட்டு இன்று முதல் வழக்கம் போல முன்பதிவு செய்யப்படும் என்று ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது.
கொரோனா லாக்டவுனால் சரக்கு ரயில்கள் மட்டும் அத்தியாவசியப் பொருட்களை கொண்டு செல்வதற்காக இயக்கப்பட்டன. பயணிகள் ரயில் போக்குவரத்து முதல் முறையாக 2 மாத காலத்துக்கும் மேலாக நிறுத்தப்பட்டது.

இடம்பெயர் தொழிலாளர்கள்
கடந்த மே 1-ந் தேதி முதல் இடம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. மாநில அரசுகளின் ஏற்பாட்டில் இந்த ரயில்கள் இயக்கப்பட்டன, இதன் மூலம் சுமார் 20 லட்சத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்பினர்.

200 ரயில்கள்
இதனையடுத்து ஜூன் 1-ந் தேதி முதல் 200 பயணிகள் ரயில்கள் இயக்கப்பட உள்ளது. இந்த ரயில்களுக்கான கால அட்டவணை நேற்று வெளியிடப்பட்டது. இதில் தமிழகத்துக்கு ஒரு ரயில் கூட இல்லை என்பது சர்ச்சை. இந்த ரயில்களுக்கான டிக்கெட்டுகள் ஆன்லைன் மூலம் மட்டுமே முன்பதிவு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

3 மணிநேரத்தில் அமோகம்
வியாழன்று காலை முன்பதிவு தொடங்கிய முதல் 3 மணிநேரத்தில் 76 ரயில்களில் 1,78,990 டிக்கெட்டுகள் பதிவு செய்யப்பட்டன. மொத்தம் 4,23,538 பயணிகள் பயணிக்க உள்ளனர் . இந்த நிலையில் ரயில் நிலையங்களிலும் டிக்கெட் கவுன்ட்டர்கள் படிப்படியாக திறக்கப்பட்டு இன்று வெள்ளிக்கிழமை முதல் செயல்படும். இந்த டிக்கெட் கவுன்ட்டர்களில் வழக்கம் போல முன்பதிவு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
|
கொரோனா முன்னெச்சரிக்கை
இந்த டிக்கெட் கவுன்ட்டர்களில் பின்பற்ற கட்டுப்பாடுகள் தொடர்பான வழிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளன. கொரோனா பரவாமல் தடுக்க சமூக இடைவெளியை பின்பற்றுதல் உள்ளிட்ட முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை அனைத்து ரயில் நிலைய கவுன்ட்டர்களும் பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications