கொஞ்சம் கொஞ்சமா ஊசி போடுங்க.. ஏன் தெரியுமா.. பாஜக முதல்வர் சொன்ன ஐடியா.. அப்படியே மிரண்டு போன மக்கள்
ஹரியானா முதல்வரின் சர்ச்சை கருத்து சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது
சண்டிகர்: ஹரியானாவில் நிறைய தடுப்பூசிகள் கையிருப்பில் இருக்கிறதாம்.. இதைவிட முக்கியம், அம்மாநில முதல்வர் சொன்ன காரணம்தான் பெரும் மலைப்பை ஏற்படுத்தி வருகிறது!
இந்தியாவில் தொற்று பரவல் அதிகமாக இருக்கிறது.. அதிலும் 2வது பரவல் படுபயங்கரமாக இருக்கிறது... தொற்று பாதிப்பும், பலி எண்ணிக்கையும் நாளுக்கு நாள் பெருகி கொண்டே இருக்கிறது..
இதற்கெல்லாம் இப்போதைக்கு ஒரே நம்பிக்கையாக தடுப்பூசிகள்தான்.. எந்த அளவுக்கு தடுப்பூசியை மக்களுக்கு செலுத்திவிடுகிறோமோ, அந்த அளவுக்கு தொற்றில் இருந்து காப்பாற்றி கொள்ளலாம் என்று உலக சுகாதார அமைப்பும் தொடர்ந்து சொல்லி வருகிறது..

கொள்முதல்
அதனால்தான் மாநில அரசுகள் தங்கள் மக்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தும் பணியை வேகமாக நடத்தி வருகின்றன. ஆனால் நம் நாட்டில் மக்கள் தொகை அதிகம் என்பதால், தடுப்பூசிகள் போதாமல் உள்ளன.. மத்திய அரசும், தடுப்பூசிகளை கொள்முதல் செய்யவில்லை.. இதனால் தடுப்பூசி தட்டுப்பாடுகள் எழுந்து வருவதால், உடனடியாக தடுப்பூசிகளை கொள்முதல் செய்து மாநில அரசுகளுக்கு வழங்க வேண்டும் என்று மாநில முதல்வர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றன.

பினராயி கடிதம்
கடந்த வாரம் அரவிந்த் கெஜ்ரிவால், தடுப்பூசியை கொள்முதல் செய்ய 24 மணி நேரம் கெடுவும் வைத்திருந்தார்.. இந்நிலையில்தான், தடுப்பூசிகளை கொள்முதல் செய்து மாநிலங்களுக்கு வழங்க மத்திய அரசுக்கு எல்லா மாநில அரசுகளும் சேர்ந்து அழுத்தம் தர வேண்டும் என்று பினராயி விஜயன் கேட்டுக் கொண்டுள்ளார். இது சம்பந்தமாக 11 மாநில முதல்வருக்கும் அவர் லெட்டர் எழுதியிருந்தார்.

அரவிந்த் கெஜ்ரிவால்
அதேபோல, கெஜ்ரிவாலும், தங்களிடம் தடுப்பூசி இருப்பில் இல்லை... உடனே மத்திய அரசு தடுப்பூசிகளை கொடுத்து மக்களை காப்பாற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார். அரவிந்த கெஜ்ரிவால் இப்படி சொன்னதுமே, ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார், ஒரு கருத்தை சொல்லி உள்ளார்..

ஆச்சரியம்
"டெல்லியில் ஒருநாளைக்கு 2 லட்சம் பேருக்கு தடுப்பூசிகளை வேகம் வேகமாக போட்டு முடித்துவிட்டனர்.. அதனால்தான் அங்கு தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது... ஆனால், ஹரியானாவில் அப்படி இல்லை.. 50 முதல் 60 ஆயிரம் வரையே ஒருநாளைக்கு தடுப்பூசி போடுகிறோம்.. அதனால், எங்களுக்கு தடுப்பூசிகள் கையிருப்பு உள்ளது" என்றார். பாஜக மூத்த தலைவர், அதுவும் ஒரு மாநில முதல்வரே இப்படி பேசுகிறாரே என்று ஆச்சரியமும், அதிர்ச்சியும் கலந்த விவாதங்கள் கிளம்பி உள்ளன.
-
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி! -
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும் -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்! -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம்












Click it and Unblock the Notifications