பெங்களுரு குண்டு வெடிப்பு வழக்கில் தேடப்பட்டவர்... 6 ஆண்டுகளுக்குப் பின் கேரளாவில் கைது
திருவனந்தபுரம்: பெங்களுரு குண்டு வெடிப்பு வழக்கில் 6 ஆண்டுகளாக தேடப்பட்டவரை கேரள போலீசார் தற்போது கைது செய்துள்ளனர்.
கடந்த 2008ம் ஆண்டு ஜூலை 25ம் தேதி பெங்களூரில் அடுத்தடுத்து 8 இடங்களில் குண்டு வெடித்தது. இது தொடர்பாக பெங்களுரு போலீசார் நடத்திய விசாரணையில், இந்த குண்டு வெடிப்பில் கேரள மாநிலம் கண்ணூரை சேர்ந்த நசீர், ரெய்சல் உள்பட சிலருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது.
இதுகுறித்து பெங்களுரு போலீசார் கேரள போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்படி நசீரை கேரள போலீசார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் எர்ணாகுளம் மாவட்டம் பெரும்பாவூர் அருகே குரும்பம்பெருங்குடியில் உள்ள வெடிபொருள் கடையில் இருந்து அமோனியம் நைட்ரேட் வெடிபொருளை திருடியது தெரியவந்தது. இந்த வெடிபொருளைதான் பெங்களுரு குண்டு வெடிப்பில் தீவிரவாதிகள் பயன்படுத்தியுள்ளனர்.
கடையில் இருந்து நசீருக்கு வெடிபொருளை திருடி கொடுத்த கண்ணூரை சேர்ந்த ரெய்சல் என்பது தெரிய வந்தது. இதையடுத்து ரெய்சலை கேரள போலீசார் தேடி வந்தனர். அவர் கத்தார் நாட்டுக்கு தப்பி சென்றது தெரிய வந்தது.
இந்த நிலையில் ரெய்சல் கேரளாவுக்கு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதை தொடர்ந்து கோழி்க்கோடு, கொச்சி விமான நிலையத்தில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். காலை கோழிக்கோடு விமான நிலையம் வந்த ரெய்சலை போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட ரெய்சலை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை சென்டரல் ரயில்நிலையத்தில் நடந்த குண்டு வெடிப்பிலும் அவருக்கு தொடர்பு இருக்குமா என்று கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications