மோடி பிரதமரானால் பேரழிவு ஏற்படும் என்பதா?: மன்மோகன்சிங்குக்கு பாஜக தலைவர்கள் கடும் கண்டனம்!
டெல்லி: டெல்லி: குஜராத் முதல்வர் நரேந்திர மோடி நாட்டின் பிரதமரானால் பேரழிவு ஏற்படும் என்று பிரதமர் மன்மோகன்சிங் தெரிவித்த கருத்துக்கு பாரதிய ஜனதா கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய மன்மோகன்சிங், நரேந்திர மோடியை கடுமையாக விமர்சித்திருந்தார்.

இதற்கு பதிலடி தரும் விதமாக பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் செய்தியாளர்களிடம் பேசினார் அப்போது அவர் கூறியதாவது:
நரேந்திர மோடி பிரதமரானால் நாட்டுக்குப் பேரழிவு என்று பிரதமர் மன்மோகன்சிங் கூறுகிறார். இத்தகைய கருத்துகள் நகைப்புக்குரியன. 2002ஆம் ஆண்டு குஜராத்தில் நிகழ்ந்த சம்பவங்கள் துயரமானவைதான். ஆனால் அது தொடர்பான சிறப்பு புலனாய்வுக் குழுவின் விசாரணையில் மோடி குற்றமற்றவர் என்று தெரிவிக்கப்பட்டுவிட்டது.
அச்சம்பவத்தில் மோடிக்கு தொடர்பில்லை என சிறப்பு புலனாய்வு குழுவும், நீதிமன்றங்களும் கூறிய பின்பும் நாட்டின் உயர் பதவியை வகிக்கும் ஒருவர் இவ்வாறு கூறுவது துரதிர்ஷ்டவசமானது என்றார். மேலும் மன்மோகன்சிங்கின் இந்த கருத்தை நான் வன்மையாக கண்டிக்கிறேன் என்றார்.
அருண் ஜெட்லி அட்டாக்
பிரதமர் மன்மோகன்சிங் அளித்த பேட்டி கேலிக்கூத்தாக இருக்கிறது என்றும், இன்று நடந்தது அவருக்கு வழியனுப்பு பிரஸ் மீட் என்றும் பா.ஜ.க ராஜ்யசபா எதிர்கட்சி தலைவர் அருண் ஜெட்லி கூறியுள்ளார். மேலும், விலைவாசியை உயர்வை கட்டுப்படுத்த முடியவில்லை என்பதை பிரதமர் ஒப்புக் கொண்டுள்ளார். பிரதமர் மன்மோகன் சிங் தம்மை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.. 2ஜி, நிலக்கரி ஊழலை தடுக்க பிரதமர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அருண் ஜெட்லி குற்றம் சாட்டினார்.
ஷா நவாஸ் ஹூசைன்
குஜராத்தை தனது பதவிக் காலத்தில் "முன் மாதிரி மாநிலம்" என்று உயர்த்திக்காட்டிய மோடியை இவ்வாறு விமர்சித்தது தவறானது. "மோடி பிரதமரானால் நாட்டிற்கு அழிவு ஏற்படும் என்று பிரதமர் கூறியுள்ளார். ஆனால் பிரதமரின் இந்த 10 ஆண்டு கால ஆட்சியில் நாடு மிகப்பெரிய பேரழிவுகளை சந்தித்துள்ளது என்று கூறுவதே மிகப்பொருத்தமாக இருக்கும்" என்று பா.ஜனதா கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ஷா நவாஸ் ஹுசைன் டுவிட்டரில் தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.
-
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications