டிரம்புக்கு வார்னிங்.. ஈரானுக்குள் கால் வைத்தால் சவப்பெட்டியில் தான் போவீங்க.. முற்றிய மோதல்
டெஹ்ரான்: ஈரான் மீது தரைவழி தாக்குதலை அமெரிக்க நடத்த திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில் தான் ஈரான் மீது அமெரிக்கா தரைவழி தாக்குதல் நடத்தினால் அமெரிக்க வீரர்கள் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும். நரகத்துக்கு வருக எனவும் ஈரான் மண்ணில் காலடி வைக்கும் அமெரிக்க படை வீரர்கள் சவப்பெட்டியில் தான் திரும்பி செல்வார்கள் என்று அந்த நாட்டின் ஆங்கில நாளிதழான "டெஹ்ரான் டைம்ஸ்" முதல் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளது.
ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் போர் புரிந்து வருகிறது. ஒரு மாதத்தை இந்த போர் கடந்து விட்டது. இன்னும் போர் முழுவதுமாக முடியவில்லை. ஈரான் சரணடைய வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறி வருகிறார். ஆனால் ஈரான், டிரம்பை மதிக்கவில்லை.

ஈரான் ஒருபோதும் சரணடையாது. முடிந்தவரை தாய்நாட்டை காக்க படை வீரர்கள் போராடுவார்கள். ஈரானை தாக்கியோரை சும்மா விடமாட்டோம் என்று கூறி பதிலடி தாக்குதல்களை தொடர்ந்து வருகிறது. இதனால் ஈரான் போர் முடிவுக்கு வருவதில் பிரச்சனை உள்ளது.
தரைவழி தாக்குதலுக்கு ரெடியாகும் டிரம்ப்?
இதற்கிடையே தான் அமெரிக்கா தனது படை வலிமையை மத்திய கிழக்கில் அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. கூடுதலாக 10,000 வீரர்களை மத்திய கிழக்கிற்கு அனுப்ப அமெரிக்கா திட்டமிட்டு வருவதாக அமெரிக்காவின் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதுமட்டுமின்றி அமெரிக்க வீரர்கள் ஈரானுக்குள் நுழைந்து தரைவழி தாக்குதல் நடத்தி போரை முன்னெடுக்கலாம் எனவும், இதற்கு டொனால்ட் டிரம்ப் இன்னும் அனுமதி வழங்கவில்லை. டிரம்ப் அனுமதி கொடுக்கும் பட்சத்தில் ஈரானுக்குள் அமெரிக்க வீரர்கள் நுழைந்து தாக்குதல் நடத்தலாம் என்றும் கூறப்பட்டு வருகிறது.
அமெரிக்க பத்திரிகை சொன்ன தகவல்
இதுதொடர்பாக அமெரிக்காவின் 'தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல்' பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில், ''பிப்ரவரி 28 அன்று ஈரான் மீது அமெரிக்கா-இஸ்ரேல் தாக்குதல்கள் தொடங்கியது. இந்த தாக்குதலை தொடர்ந்து மத்திய கிழக்கில் பல ராணுவ வியூகங்களை மேற்கொள்ளும் நோக்கத்தில் அமெரிக்க கூடுதல் படைகளை மத்திய கிழக்கிற்கு அனுப்ப முடிவு செய்துள்ளது.
ஏற்கனவே மத்திய கிழக்கிற்கு ஆயிரக்கணக்கான பாராசூட்டில் பறந்து தாக்குதல் நடத்தும் வீரர்களும், கடற்படை வீரர்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுடன் கூடுதல் படை வீரர்கள் விரைவில் இணைய உள்ளனர்'' என கூறப்பட்டுள்ளது. டிரம்பின் இந்த நடவடிக்கை என்பது ஈரான் மீதான தரைவழி தாக்குதலை சாத்தியமாக்கலாம் என்ற அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
சவப்பெட்டியில் தான் போவீர்கள்
இந்நிலையில் தான் ஈரானின் ஆங்கில நாளிதழான 'டெஹ்ரான் டைம்ஸ்' முதல் பக்கத்தில் அமெரிக்காவுக்கு வார்னிங் செய்து செய்தி வெளியிட்டுள்ளது. அதில், "நரகத்துக்கு வருக" என்ற தலைப்பில் வெளியாகி உள்ள செய்தியில், ''ஈரான் மண்ணில் காலடி வைக்கும் அமெரிக்க படை வீரர்கள் சவப்பெட்டியில் மட்டுமே திரும்பி செல்வார்கள்'' என வார்னிங் செய்துள்ளது.
ஹவுதிகளை இறக்கும் ஈரான்
அதேபோல் ஈரான் ராணுவ அதிகாரி ஒருவர் கூறுகையில்,''ஈரான் மீது தரைவழி தாக்குதல் நடத்தப்பட்டால் ஏமனில் உள்ள ஹவுதி கூட்டாளிகளை நாங்கள் தாக்குதல் நடத்தும்படி கூறுவோம். ஹவுதிகள் செங்கடலில் கப்பல் போக்குவரத்தை முடக்குவார்கள். அந்த வழியாக செல்லும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்துவார்கள். இது போரை இன்னும் வலுப்படுத்தும்'' என வார்னிங் செய்துள்ளனர். இதனால் தற்போது ஈரான் - அமெரிக்கா இடையேயான மோதல் அதிகரித்து போர் தீவிரமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
அமெரிக்கா ஈரானை அடித்த அடி.. ஏழைகள் வயிற்றில் விழுது! கிடைக்காத கேஸ் சிலிண்டர்.. கடைகளுக்கு பூட்டு! -
அமெரிக்காவால் ஏன் ஈரான் போரில் ஜெயிக்க முடியவில்லை.. உலகத்தையே முடக்கிய இஸ்ரேலின் தவறு -
ஒரு வழியாக டிரம்ப் எடுத்த முடிவு.. ஈரான் போரில் மாபெரும் ட்விஸ்ட்.. சஸ்பென்ஸ் வைக்கும் அமெரிக்கா! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
நிலவில் மீண்டும் கால் வைக்கும் மனிதர்கள்.. 53 ஆண்டுக்கு பிறகு மற்றொரு சரித்திரம் படைக்கும் அமெரிக்கா -
சொந்த செலவில் சூனியம்.. 2022க்கு பிறகு அமெரிக்காவில் நடந்த அதிர்ச்சி! டிரம்புக்கு எதிராக மக்கள் -
“இந்தப் போரால் ஒரே ஒரு நல்லது நடக்கும்”.. ஈரான் - இஸ்ரேல் போர் பற்றி வைரமுத்து கவிதை! -
"ஹார்முஸை திறக்கவில்லை என்றால்.. பேரழிவு நிச்சயம்!" ஈரானுக்கு இறுதி எச்சரிக்கை விடுத்த டிரம்ப்! -
துபாய்க்கு இப்போ தான் உசுரே வந்துருக்கு..ஈரானை முடக்கிய அமெரிக்கா? டிரம்ப் சொன்ன வார்த்தை.. அடுத்து? -
"விட்டால் போதும்.." கையை பிசையும் டிரம்ப்.. ஈரான் போரை முடிக்க முடியாமல் திணறும் அமெரிக்கா! -
ஹார்முஸில் இந்திய கப்பல்களுக்கு ஆபத்து? LPG பிரச்சனை தீராது போலயே! மிக முக்கிய தகவல் -
நேட்டோவில் இருந்து விலகும் அமெரிக்கா? உலக நாடுகளுக்கே அதிர்ச்சி கொடுத்த டிரம்ப்.. இப்படி ஆகிடுச்சே -
ரூபாய் மதிப்பு 100-ஐ தாண்டுமா? ஆர்பிஐ களத்தில் இறங்கியும் பலன் கிடைக்காத நிலை! -
வளைகுடாவில் அமெரிக்காவுக்கு இன்னொரு தலைவலி.. ஈராக்கில் சர்வதேச செய்தியாளர் கடத்தல்.. ஷாக் வீடியோ -
இந்தியர்களுக்கு பெரிய ஆப்பு.. H-1B விசா ரூல்ஸை மொத்தமாக மாற்றும் டிரம்ப்! இது தேவையில்லாத வேலையாச்சே














Click it and Unblock the Notifications