இந்தியா - அமெரிக்கா உறவு இயற்கையானது: அமெரிக்கா நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பெருமிதம் !
வாஷிங்டன்: ஜனநாயக நாடுகளான இந்தியா - அமெரிக்கா ஆகிய இரு நாடுகளிடையேயான உறவு இயற்கையானது என பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்க நாடாளுமன்றத்தில் உரையாற்றினார்.
மூன்று நாள் அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி அமெரி்க்க நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தில் உரை நிகழ்த்தினார். அப்போது அவர் பேசியதாவது: அமெரிக்க நாடாளுமன்றத்தில் உரையாற்றுவது பெருமை அளிக்கிறது. உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தை நீங்கள் கவுரவித்துள்ளீர்கள்.

மனிதர் அனைவரும் சமம் என்ற ஆபிரகாம் லிங்கத்தின் வார்த்தைகளுக்கு வடிவம் தந்த அவை இது. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் பிரதிநிதி என்ற முறையில் இந்த அவையில் பேசுவது பெருமை அளிக்கிறது.
மகாத்மா காந்தியின் அகிம்சை முறை மார்ட்டின் லூதர் கிங்கை ஈர்த்தது. பேச்சுரிமை, வழிப்பாட்டு உரிமை, சமத்துவ உரிமை ஆகியவற்றை எங்கள் நாட்டின் தலைவர்கள் எங்களுக்கு அளி்த்திருக்கிறார்கள். இந்தியா ஒன்றாக வாழ்கிறது, ஒன்றாக வளர்கிறது, ஒன்றாகவே கொண்டாடுகிறது. மற்ற நாடுகளைக் காட்டிலும் அமெரிக்காவுடன் இந்தியா நெருக்கமான உறவை கொண்டுள்ளது.

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கூறியது போல் இந்தியா - அமெரிக்கா இடையே இயற்கையாகவே நட்பு உள்ளது. தீவிரவாதிகள் மும்பையில் தாக்குதல் நடத்தியபோது அமெரிக்கா கண்டனம் தெரிவித்ததை இந்தியா மறக்காது. ஆசிய நாடுகளை தீவிரவாதம் அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது.
இந்தியா மேல் அமெரிக்கா நம்பிக்கை கொண்டுள்ளது எங்களுக்கு தெரியும். அமெரிக்க நாடாளுமன்றம் நல்லிணக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்திய நாடாளுமன்றத்திலும் நல்லிணக்கை உருவாக்க முயற்சி செய்து வருகிறோம்.
கடல் வழி வணிகத்தை பெருக்க வியாபார வழித்தடங்களை பாதுகாப்பானதாக உருவாக்க வேண்டும். இந்த முயற்சியில் அமெரிக்கா, இந்தியா இணைந்து செயலாற்றுவது அவசியமான ஒன்று. தீவிரவாதத்தை ஒழிக்கும் முயற்சியில் பல வீரர்களை நாம் இழந்துள்ளோம். தீவிரவாதத்திற்கு எதிரான போராட்டம் பல நிலைகளில் வலுப்பெற வேண்டும்.

தீவிரவாதத்தில் இருந்து மதத்தை பிரித்து பார்க்க வேண்டும். தீவிரவாதத்தை ஒழிக்க தீவிரவாதத்தில் சிக்கியிருக்கும் மக்களை மீட்பதில் அமெரிக்க படைகளுக்கு இந்தியா பெரிய அளவில் உதவி வருகிறது. இரு நாடுகளுக்கு இடையே நிலவும் நல்லுறவால் பல துறைகளில் முன்னேற்றம் அடைந்துள்ளோம். இந்தியா - அமெரிக்கா இடையே நட்புறவை வளர்ப்பதில் அமெரிக்கா மிகவும் உதவியிருக்கிறது. இவ்வாறு மோடி பேசினார்.
அமெரிக்க நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் உரை நிகழ்த்தும் 5 வது இந்திய பிரதமர் நரேந்திர மோடி என்பது குறிப்பிடத்தக்கது.
-
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகா புதிய முதலமைச்சராக இன்று பதவியேற்கிறார் டிகே சிவக்குமார் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications