நாங்க போட்டா மட்டும் கைதா? முதல்வர் போட்டோவை எடிட் செய்து சீண்டிய பாஜக நிர்வாகி.. தூக்கிய போலீஸ்!
கரூர்: முதல்வர் ஸ்டாலினுக்கு எதிராக அவதூறு பரப்பும் வகையில் புகைப்படம் ஒன்றை எடிட் செய்து பதிவிட்ட பாஜக நிர்வாகியை போலீசார் கைது செய்துள்ளனர்.
தமிழ்நாட்டில் சமூக வலைத்தளங்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. முன்னதாக சமூக வலைதளங்கள் மூலம் சாதி, மத மோதல்கள் ஏற்படுத்த நினைப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினும் ஆட்சியர்கள், போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்ட கூட்டத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன் பேசி இருந்தார்.
தலைவர்கள் பற்றி அவதூறு கருத்துக்கள் பரப்ப கூடாது. சாதி, மோதல்களை சட்டம் - ஒழுங்கு பிரச்சினையாக மட்டும் பார்க்க வேண்டாம். அதை சமூக ரீதியான ஒழுக்கப் பிரச்சினையாக பார்க்க வேண்டும் என்றும் அவர் எச்சரித்து இருந்தார்.

எச்சரிக்கை
இது போக சமூக வலைதள பதிவுகளை கண்காணிக்க புதிய மையம் அமைக்கப்படும் என்றும் நிதியமைச்சர் பிடிஆர் கடந்த பட்ஜெட்டில் அறிவித்தார். சமூக வலைத்தளங்கள் மூலம் பரப்பப்படும் வதந்திகள், அவதூறுகள், வெறுப்பு கருத்துக்களை கண்காணிக்கும் விதமாக இந்த மையம் அமைக்கப்படும். சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பப்படும் நபர்கள் இதில் கண்காணிக்கப்படுவார்கள். அதன் மூலம் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்து இருந்தார்.

முதல்வர் ஸ்டாலின்
இந்த நிலையில்தான் முதல்வர் ஸ்டாலினுக்கு எதிராக அவதூறு பரப்பும் வகையில் புகைப்படம் ஒன்றை எடிட் செய்து பதிவிட்ட பாஜக நிர்வாகியை போலீசார் கைது செய்துள்ளனர். கரூர் பாஜக இளைஞர் அணி நிர்வாகி S.A விக்னேஷ் சமூகவலைதளத்தில் தலைவர்களை ஆபாசமாக சித்தரித்து பதிவிட்டது பெரிய சர்ச்சையானது. முதல்வர் ஸ்டாலின் படத்தையும் அவர் எடிட் செய்து பதிவிட்டார். அதேபோல் அமைச்சர் பிடிஆர், சில செய்தியாளர்கள் படத்தையும் அவர் எடிட் செய்து பதிவிட்டார்.

எடிட் செய்து போட்டோ
இப்படி செய்ததோடு இல்லமால்.. நாங்கள் எடிட் செய்து போட்டோ போட்டால் அதில் என்ன தவறு. திமுகவினர் பிரதமர் மோடியை விமர்சிப்பது போலத்தான் இதுவும். நாங்க போட்டா மட்டும் கைது செய்வீர்களா என்று கேள்வி எழுப்பி இருந்தார். இதையடுத்து இது தொடர்பாக கரூர் மாவட்ட திமுக ஐடி விங் நிர்வாகி தீபக் கரூர் காவல்நிலைய ஆய்வாளரிடம் புகார் அளித்தார். அதில் முதல்வர் ஸ்டாலின் புகைப்படத்தை இவர் ஆபாசமாக சித்தரித்துள்ளார்.

எச்சரிக்கை
அவரின் போஸ்ட் வெறுப்பை பரப்பும் வகையில் உள்ளது. அவர் வன்முறையை தூண்டும் வகையில் பதிவிட்டு இருக்கிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் முதல்வர் ஸ்டாலினுக்கு எதிராக அவதூறு பரப்பும் வகையில் புகைப்படம் ஒன்றை எடிட் செய்து பதிவிட்ட பாஜக நிர்வாகி விக்னேஷை போலீசார் கைது செய்துள்ளனர். இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
-
சிங்கம் களம் இறங்கிருச்சு.. சிங்காநல்லூரில் களம் காணும் அண்ணாமலை? அக்கா தமிழிசை எங்கே தெரியுமா? -
அண்ணாமலைக்கு சீட் கொடுக்க கூடாது.. எடப்பாடி எடுத்த முடிவு.. பாஜக தொகுதி பங்கீட்டில் என்ன நடந்தது? -
தேர்தலில் போட்டியில்லை.. டெல்லிக்கு கடிதம் எழுதிய அண்ணாமலை.. பாஜகவில் டிவிஸ்ட் -
அண்ணாமலை சட்டமன்றம் செல்ல வேண்டும்.. அதுவே என் விருப்பம்.. வானதி சீனிவாசன் சொன்ன வார்த்தை! -
அதிமுக வேட்பாளர்கள் யார்? 146 வேட்பாளர்களை எப்போது அறிவிப்பார் எடப்பாடி! உச்சகட்ட டென்ஷனில் ர.ர.கள்! -
குமரியில் காலியாகும் அதிமுகவின் அடித்தளம்.. 4 தொகுதிகளை கைப்பற்றிய பாஜக.. சோர்வடைந்த தொண்டர்கள்! -
14 அமைச்சர்களிடம் நேருக்கு நேர் மோதல் இல்லை.. பாஜக, அமமுகவை கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிசாமி! -
நடிகை கவுதமியை மீண்டும் ஏமாற்றிய அதிமுக – பாஜக.. ராஜபாளையம் ஜான் பாண்டியனுக்கு ஒதுக்கியதன் பின்னணி -
அதிவேகத்தில் அதிமுக.. ஏரியா பிரித்த எடப்பாடி! அதிமுக கூட்டணியில் யார்? எங்கே போட்டி? உத்தேச லிஸ்ட்! -
சென்னையில் 16 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் 13 தொகுதிகள் விவரம்.. 3ல் கூட்டணி கட்சிகள் போட்டி -
எடப்பாடி சாமர்த்தியசாலியா.. அமித்ஷா சாமர்த்தியசாலியா.. அதிமுக கூட்டணியில் நடக்கும் எதார்த்தம் என்ன -
2021 vs 2026.. அதிமுக கூட்டணியில் யாருக்கு லாபம்.. பாஜக, பாமக அமமுக வாக்கு சதவீதம் என்ன?












Click it and Unblock the Notifications