மகாராஷ்டிராவில் நாளை தப்புமா உத்தவ் தாக்கரே அரசு? 46 எம்.எல்.ஏக்கள் ஆதரவு வாபஸால் ஆட்சி கவிழும்?
மும்பை: மகாராஷ்டிராவில் நாளை ஆளும் சிவசேனா கூட்டணி அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. ஆளும் கூட்டணி அரசுக்கான ஆதரவை 46 எம்.எல்.ஏக்கள் வாபஸ் பெற்றிருப்பதால் முதல்வர் உத்தவ் தாக்கரே பதவி தப்புமா? என்பது பெரும் எதிர்பார்ப்பு.
மகாராஷ்டிராவில் ஆளும் சிவசேனா கூட்டணி அரசுக்கு எதிராக சிவசேனா எம்.எல்.ஏக்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் எம்.எல்.ஏக்கள் போர்க்கொடி தூக்கினர். மொத்தம் 50க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏக்கள் ஆதரவு தமக்கு இருக்கிறது என்கிறார் ஏக்நாத் ஷிண்டே.

இதனால் மகாராஷ்டிரா அரசியலில் பெரும் குழப்பம் நிலவி வருகிறது. இந்த நிலையில் மகாராஷ்டிரா சட்டசபையின் சிறப்பு கூட்டம் நாளை காலை 11 மணிக்கு கூடுகிறது; அதில் முதல்வர் உத்தவ் தாக்கரே அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுகிறது; உத்தவ் தாக்கரே அரசு தமது பெரும்பான்மையை நாளை மாலை 5 மணிக்குள் நிரூபிக்க வேண்டும் என்று ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி உத்தரவிட்டுள்ளார்.
மகாராஷ்டிரா சட்டசபையில் மொத்தம் 288 எம்.எல்.ஏக்கள். சிவசேனா எம்.எல்.ஏ. ரமேஷ் லட்கே, கடந்த மாதம் காலமானதால் தற்போதைய நிலையில் மொத்த இடங்கள் 287. உத்தவ் தாக்கரே அரசு பெரும்பான்மையை நிரூபிக்க தேவை 144 எம்.எல்.ஏக்கள் ஆதரவு.
சிவசேனா எம்.எல்.ஏக்கள் போர்க்கொடி தூக்குவதற்கு முன்பாக மகாராஷ்டிரா சட்டசபை பலம்:
- ஆளும் கூட்டணி: 152
- சிவசேனா- 55
- தேசியவாத காங்கிரஸ்- 53
- காங்கிரஸ் -44
- எதிர்க்கட்சியான பாஜக- 106
- இதர கட்சிகள், சுயேட்சைகள் 29
சிவசேனா எம்.எல்.ஏக்கள் 39, இதர கட்சிகள், சுயேட்சைகள் 7 பேர் என மொத்தம் 46 போர்க்கொடி தூக்கிய நிலையில்...
- ஆளும் கூட்டணி: 113
- சிவசேனா - 16
- தேசியவாத காங்கிரஸ்- 53
- காங்கிரஸ்- 44
போர்க்கொடி தூக்கிய 46 எம்.எல்.ஏக்கள், பாஜகவை ஆதரித்தால் பலம் என்ன?
- பாஜக+அதிருப்தி கோஷ்டி: 152
- பாஜக- 106
- அதிருப்தி (சிவசேனா, இதர கட்சிகள்-சுயேட்சைகள்) 46
- பெரும்பான்மைக்கு தேவை- 147
சிவசேனாவின் பெரும்பான்மை எம்.எல்.ஏக்கள் பாஜகவை ஆதரிக்கும் நிலையில் கட்சித் தாவல் சட்டம் பாயாது; ஆகையால் 39 சிவசேனா எம்.எல்.ஏக்கள், பாஜகவை உறுதியாக ஆதரித்தால் உத்தவ் தாக்கரே தலைமையிலான கூட்டணி அரசு கவிழ்ந்து பாஜக தலைமையில் புதிய அரசு அமையும் என கூறப்படுகிறது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications