டிடிவி தினகரன் கட்சி பெயரில் ஏன் திராவிடம் இல்லை.. சி.ஆர்.சரஸ்வதி சொன்ன 'அசத்தல்' விளக்கம்
Recommended Video

சென்னை: 'அம்மா' என்ற பெயரில் கட்சி ஆரம்பித்த பிறகு திராவிட சொல்லுக்கு தேவையில்லை என்று டிடிவி தினகரன் அணியை சேர்ந்த சி.ஆர்.சரஸ்வதி தெரிவித்தார்.
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற பெயரில் தனி கட்சியை சமீபத்தில் ஆரம்பித்தார் டிடிவி தினகரன். உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ள வசதியாக இதுபோன்ற தனி கட்சியை அவர் துவங்கியதாக கூறப்பட்டது.
இருப்பினும் திராவிடம் மற்றும் அண்ணா ஆகியோர் பெயர்கள் அந்த கட்சியில் குறிப்பிடப்படவில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன.

நாஞ்சில் சம்பத் விலகல்
இந்த நிலையில், தினகரனின் நம்பிக்கைக்குரிய நபர்களில் ஒருவராக இருந்த நாஞ்சில் சம்பத், தினகரன் அணியில் இருந்து விலகியுள்ளார். அண்ணா, திராவிடம் ஆகிய பெயர்கள் கட்சியில் இல்லை என்பதுதான், தான் விலக காரணம் என கூறியுள்ளார். இனி இலக்கிய கூட்டங்களில் மட்டும் பார்க்க முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.

சி.ஆர்.சரஸ்வதி பேட்டி
இதுகுறித்து சி.ஆர்.சரஸ்வதி அளித்த பேட்டியொன்றில் கூறியதாவது: நாஞ்சில் சம்பத் ஏன் அதிருப்தியடைந்தார் என்பது எங்களுக்கு தெரியவில்லை. இதற்கு முன்பு ஜெயலலிதா இருந்தபோது அவர் எடுத்த முடிவுக்கு யாராவது எதிர்ப்பு தெரிவித்துள்ளார்களா? தலைமை எந்த முடிவை எடுத்தாலும் அதற்கு உடன்பட்டுதான் போக வேண்டும்.

சமூக நீதி காத்த வீராங்கணை
2014ல் தனியாக தேர்தலில் போட்டியிடுவதாக கூறிய ஜெயலலிதா சாதித்து காட்டினார். எனவேதான் நாங்கள் ஜெயலலிதா எந்த முடிவை எடுத்தாலும் அதற்கு எதிர்த்து பேசுவதேயில்லை. ஜெயலலிதா ஒரு திராவிட தலைவி. ஜெயலலிதா சமூக நீதி காத்த வீராங்கணை என திராவிடர் கழக தலைவர் கி.வீரமணியால் பெயர் பெற்றவர் ஜெயலலிதா.

ஜெயலலிதா பெயர் போதும்
ஜெயலலிதா ஒரு திராவிட தலைவியாக வாழ்ந்தவர் என்பதால் திராவிடர் என்ற சொல்லை கட்சியில் சேர்க்க தேவை எழவில்லை. அம்மா என்ற சொல்லே திராவிடத்தையும் குறிக்கும். அவர் மக்கள் முன்னேற்றத்திற்காக பாடுபட்டவர் என்பதால், அம்மா என்ற பெயரில் கட்சி ஆரம்பித்துள்ளோம். அதிமுக என பெயரில் திராவிடம் மற்றும் அண்ணாவை வைத்துக்கொண்டு மதவாத சக்திகளுக்கு அடிமையாக இருக்கிறார்களே. அது சரியா? இவ்வாறு சி.ஆர்.சரஸ்வதி கூறினார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications