அரிய சந்திர கிரகணம்... பனியையும் பொருட்படுத்தாமல் மொட்டை மாடியில் குவிந்த மக்கள்!
150 ஆண்டுகளுக்குப் பிறகு வானில் தோன்றிய அரிய சந்திர கிரகணத்தை மக்கள் ஆர்வத்துடன் கண்டுகளித்தனர்.
சென்னை: 150 ஆண்டுகளுக்குப் பிறகு வானில் தோன்றிய அரிய சந்திர கிரகணத்தை மக்கள் ஆர்வத்துடன் கண்டுகளித்தனர்.
150 ஆண்டுகளுக்குப் பிறகு சூப்பர் மூன், ப்ளு மூன், பிளட் மூன் என்ற அரிய சந்திர கிரகணம் இன்று வானில் தோன்றியது. இதனை காண மாலை 5 மணி முதலே மக்கள் தயாராகி விட்டனர்.
பெரும்பாலான தொலைக்காட்சிகள் இந்த அபூர்வ சந்திர கிரகணத்தை நேரலை செய்தன. இந்த சந்திர கிரகணத்தை மக்கள் வெறும் கண்களாலேயே பார்க்கலாம் என அறிவிக்கப்பட்டது.
இதானல் எந்த அச்சமும் இன்றி மக்கள் சந்திர கிரகணத்தை கண்டு ரசித்தனர். ஏராளமான மக்கள் பனியையும் பொருட்படுத்தாமல் தங்களின் வீட்டு மொட்டை மாடிகளில் நின்று குடும்பம் சகிதமாக சந்திர கிரகணத்தை கண்டுகளித்தனர்.
சந்திர கிரகணத்தை காண சென்னை மெரினா, பெசன்ட் நகர், ஈசிஆர் கடற்பகுதிகளிலும் மக்கள் திரண்டிருந்தனர். அவர்கள் இயற்கையின் இந்த அபூர்வ கண்கொள்ளா காட்சியை உற்சாகத்துடன் கண்டு ரசித்தனர்.