வெளிநாட்டு பயண மோகம்! வீடு வீடாக கைவரிசை காட்டிய பலே ஆசாமி! பொறிவைத்து பிடித்த திருச்சி தனிப்படை!
திருச்சி: வெளிநாட்டு பயண மோகத்தில் திருச்சியில் பல இடங்களில் கைவரிசை காட்டி வந்த மணிகண்டன் என்ற இளைஞரை தனிப்படை டீம் பொறிவைத்து பிடித்துள்ளது.
சிங்கப்பூர் செல்வதற்காக பயண ஏற்பாடுகளை செய்து வந்த மணிகண்டன் அங்கு செலவு செய்வதற்காக திருச்சியில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது.
கொள்ளையன் மணிகண்டனை மடக்கிப்பிடித்த தனிப்படை காவல் ஆய்வாளர் ஷியாமளா தேவியை திருச்சி மாநகர தெற்கு சரக துணை ஆணையர் ஸ்ரீதேவயும், மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயனும் பாராட்டியிருக்கிறார்கள்.

திருச்சியில் கொள்ளை
திருச்சியில் கொலை கொள்ளை உள்ளிட்ட குற்றச் செயல்களை தடுக்க மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு தீர்வு வழங்க வேண்டும் என்பதில் மிக உறுதியாக உள்ள அவர் அதற்கான பணிகளை துறைரீதியாக தொடர்ந்து முன்னெடுத்து வருகிறார். இந்நிலையில் திருச்சியில் அடுத்தடுத்து 3 இடங்களில் நடைபெற்ற கொள்ளைச் சம்பவம் அவருக்கு பெரும் சவாலை கொடுத்திருக்கிறது.

களமிறங்கிய தனிப்படை
இதையடுத்து செசன்ஸ் கோர்ட் காவல் நிலைய குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் ஷியாமளா தேவி தலைமையில் தனிப்படை அமைத்து கொள்ளையனை பிடிக்க உத்தரவிட்டார் திருச்சி மாநகர தெற்கு சரக துணை ஆணையர் ஸ்ரீதேவி. இதையடுத்து தனது டீமோடு களமிறங்கிய காவல் ஆய்வாளர் ஷியாமளா தேவி, கொள்ளை நடந்த பகுதிகளில் சிசிடிவி கேமரா காட்சிகளை தீவிரமாக ஆய்வு செய்து அதனடிப்படையில் கொள்ளையன் மணிகண்டனை மடக்கிப் பிடித்திருக்கிறார்.

48 சவரன்
இதனிடையே மணிகண்டனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கோரிமேடு, கருமண்டபம் அசோக் நகர், கே.கே. நகரில் உள்ள நேரு தெரு, ஆகிய மூன்று இடங்களில் 48 சவரன் தங்க நகைகளை திருடியதை ஒப்புக் கொண்டுள்ளார். சிங்கப்பூர் செல்ல திட்டமிட்டிருந்ததாகவும் அங்கு பயணச் செலவுக்கு தன்னிடம் பணமில்லாததால் நகைகளை திருடியதாகவும் தெரிவித்துள்ளார். 2 மாத காலமாக தொடர்ந்து பின் தொடர்ந்து தனிப்படை காவல் ஆய்வாளர் ஷியாமளா தேவி வைத்த பொறியில் சிக்கிய மணிகண்டன் பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டி வந்ததும் விசாரணையில் தெரிய வந்தது.

நகைகள் மீட்பு
கொள்ளையன் மணிகண்டனிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை மீட்ட காவல்துறையினர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதனிடையே தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்த மணிகண்டனுடன் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications