Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இந்த மாதிரி வார்த்தையை யாராவது சொல்லுவாங்களா?? பணத்துக்காக அப்படி பண்ணல.. கதறி அழுத கூல் சுரேஷ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் கூல் சுரேஷ் உருக்கமாக கதறி அழுத படி பேசிய வீடியோ தற்போது ரசிகர்கள் பலரால் பகிரப்பட்டு வருகிறது.

சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் கூல் சுரேஷ் இப்படி செய்துவிட்டாரே என்று பலரும் ஆறுதல் கூறி வருகிறார்கள்.

எப்போதும் நக்கல் நையாண்டித்தனத்தோடு அடுத்தவர்களை சிரிக்க வைத்துக் கொண்டிருக்கும் கூல் சுரேசுக்குள் இப்படி ஒரு சோகமா? ? என்று தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

கடின உழைப்பு

கடின உழைப்பு

சிம்பு நடித்து வெளியான வெந்து தணிந்தது காடு திரைப்படம் தற்போது வெற்றிகரமாக தியேட்டரில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த திரைப்படத்தின் வெற்றிக்கு சிம்புவின் கடின உழைப்பு மட்டுமல்லாமல் அவருடைய தீவிரமான ரசிகரான கூல் சுரேஷின் பங்களிப்பும் உள்ளது என்று ரசிகர்கள் அதிக அளவில் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். செல்லும் இடம் எல்லாம் அங்கே வெந்து தணிந்தது காடு என்று வாசகத்தை ஒலித்து இந்த திரைப்படத்திற்கு அதிக அளவிற்கு பிரமோஷன் செய்தவர் கூல் சுரேஷ் தான். அவர் தற்போது உருக்கமாக பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

உடைந்து போன கார்

உடைந்து போன கார்

வெந்து தணிந்தது காடு திரைப்படம் வெளியான அன்று இவருடைய கார் ரசிகர்களால் உடைக்கப்பட்டது குறித்து சமூக வலைத்தளத்தில் பல வதந்திகள் பரவி வந்ததாகவும் அதைக் குறித்து நெட்டிசன்கள் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வந்துள்ளனர். அதனால் வேதனை அடைந்த கூல் சுரேஷ் நெட்டிசன்களுக்கு அறிவுரை கூறி வேண்டுகோள் விடுத்துள்ளார். தன்னுடைய உழைப்பால் வாங்கிய கார் அது அந்த காரை யாரும் அடித்து உடைக்கவில்லை. ரசிகர்கள் என்னை கட்டிப்பிடித்து எனக்கு வரவேற்பு கொடுக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் காரில் ஏறி விட்டனர். அதனால் தான் கார் உடைந்து விட்டது என்று கூறி இருக்கிறார்.

பணம் முக்கியம் இல்லை

பணம் முக்கியம் இல்லை

கார் உடைந்ததால் பலர் சந்தோஷமாக கருத்துக்களை பதிவிட்டு வந்துள்ளார்கள். அதனைக் குறித்து வருத்தத்தோடு கூல் சுரேஷ் பேசி இருக்கிறார். அது மட்டுமல்லாமல் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் வெற்றிக்கு காரணம் கூல் சுரேஷ் உண்டு என்று பலர் கூறி வருவதாகவும், அதனால கூல் சுரேஷுக்கு பணம் வழங்க வேண்டும் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். அதனை மறுத்து கூல் சுரேஷ் அப்படியெல்லாம் எனக்கு எதுவும் தேவையில்லை. நான் எல்லாமே என்னுடைய தலைவன் சிம்புக்காக தான் பண்ணுனேன். பணம் எனக்கு முக்கியமில்லை என்று ஐசரி கணேசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கண்ணீரோடு நன்றி கூறிய கூல் சுரேஷ்

கண்ணீரோடு நன்றி கூறிய கூல் சுரேஷ்

சிம்பு கூட சொன்னார் எனக்கு கூட தியேட்டருக்கு போனா இந்த மாதிரி வரவேற்பு இருக்குமா? ? என்று தெரியாது. ஆனால் உனக்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைத்திருக்கிறது. இதை தக்க வைத்து கொள் என்று சொன்னார். இந்த மாதிரி ஒரு ஹீரோ, யார பார்த்து சொல்லுவார். யாராவது இந்த மாதிரி ஒரு வார்த்தைய சொல்லுவாங்களா? எனக்காக சொல்லி இருக்கிறார். ஒருத்தங்க முன்னுக்கு வரது பிடிக்காமல் அவனை எப்படியாவது ஒழிக்கணும் என்று தான் யாரும் நினைப்பாங்க. ஆனால் என்னுடைய தலைவர் சிம்பு எனக்காக குரல் கொடுத்திருக்கிறார். எனக்காக நன்றி தெரிவித்திருக்கிறார். இந்த மாதிரி ஒரு ஹீரோ யாருக்காக கிடைப்பாரா? நான் இதுவரைக்கும் எத்தனையோ தியேட்டருக்கு வந்திருக்கேன். யாருக்கெல்லாமோ ப்ரமோஷன் பண்ணி இருக்கேன். ஆனா இதுவரைக்கும் எந்த ஹீரோவோ, டைரக்டரோ, ப்ரொடியூசரோ ஒரு வார்த்தை கூட சொன்னது இல்லை. என்னோட தலைவன் மட்டும் தான் சொல்லி இருக்கிறார் என்று கண்ணீரோடு சிம்புவுக்கு நன்றி கூறியிருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+