For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

முதல் முறையாக குழந்தைகளை போட்டோ சூட் எடுத்த நமீதா.. இப்படியா பண்ணுவாங்க..!! அலட்டிக்கும் ரசிகர்கள்

Google Oneindia Tamil News

சென்னை: ரசிகர்களை மச்சான் சென்று அழைத்து பிரபலமான நமீதா தற்போது திருமணத்திற்கு பிறகு ஆளே மாறிவிட்டார்.

இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக மாறி இருக்கும் நமீதா தற்போது எடுத்த போட்டோ சூட் சமூக வலைத்தளத்தில் ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது.

தன்னுடைய இரட்டை குழந்தைகளை முதல் முறையாக போட்டோ சூட் எடுத்து இருக்கும் நேரத்தில் இப்படியா செய்வாங்க என்று ரசிகர்கள் பலர் அழுத்து கொள்கிறார்கள்.

சுற்றுலா சென்ற இடத்தில் ராஜா ராணி சீரியல் கதாநாயகன் வெளியிட்ட மகிழ்ச்சி பதிவு.. வாழ்த்தும் ரசிகர்கள்சுற்றுலா சென்ற இடத்தில் ராஜா ராணி சீரியல் கதாநாயகன் வெளியிட்ட மகிழ்ச்சி பதிவு.. வாழ்த்தும் ரசிகர்கள்

மாடலிங் மூலமாக அறிமுகம்

மாடலிங் மூலமாக அறிமுகம்

மாடலிங் மூலமாக 17 வயதில் மிஸ் சூரத் பட்டத்தை பெற்ற நமீதா அதற்குப் பிறகு பல விளம்பரங்களில் நடித்துள்ளார். அதுவும் அருண் ஐஸ் கிரீம், ஹிமானி கிரீம், சோப்பு போன்றவற்றில் இவர் நடித்து வந்துள்ளார். அந்த நேரத்தில் தான் நமீதாவிற்கு தெலுங்கில் முதல் முறையாக சொந்தம் எனும் திரைப்படம் மூலமாக திரையுலகில் அறிமுகமானார். அதற்குப் பிறகு தமிழ் திரையுலகில் இவருடைய உயரத்தை பார்த்து அசந்து போன இயக்குனர்கள் விஜயகாந்த், சத்யராஜ், அர்ஜுன், பார்த்திபன், சுந்தர் சி, சரத்குமார் போன்றவர்களுடன் ஜோடியாக நடிக்க இவருக்காகவே பல கதைகளை எழுதி விட்டார்கள்.

ரசிகர்களை கவர்ந்த மச்சான்

ரசிகர்களை கவர்ந்த மச்சான்

பல திரைப்படங்களில் கதாநாயகியாகவும், துணை கதாநாயகியாகவும் நடித்து வந்தாலும் நமீதாவிற்கு என்று தமிழ் திரை உலகில் பெரிய அளவில் ரசிகர்கள் கூட்டம் இருந்து வந்ததனர். தன்னுடைய கவர்ச்சியான நடிப்பு மட்டுமல்லாமல் ஆட்டத்தின் மூலமாகவும் ரசிகர்களை கவர்ந்து வந்த இவர் தன்னுடைய ரசிகர்களை செல்லமாக மச்சான் என்று தான் அழைத்து வந்தார். செல்லும் இடம் எல்லாம் இவர் அவருடைய ரசிகர்களை மச்சான் என்று அழைப்பதால் இவர் தன்னை அப்படி அழைக்க மாட்டாரா? என ஏங்கிப் போய் இவர் எங்கெல்லாம் செல்கிறார்களோ அங்கெல்லாம் ஒரு கூட்டம் இவரை பின்தொடர்ந்து வந்துள்ளனர்.

காதல் திருமணம்

காதல் திருமணம்

அஜித்,விஜய் போன்ற முன்னணி கதாநாயகர்களுடன் இவர் நடித்திருந்தாலும் இவருக்கு எதிர்பார்த்த அளவிற்க்கு திரைப்படங்களில் வாய்ப்பு கிடைக்கவில்லையாம். அதனாலே சின்னத்திரையின் பக்கம் திரும்பி பல நிகழ்ச்சிகளுக்கு நடுவராக இருக்கிறார். அது மட்டும் அல்லாமல் அரசியல் தளத்திலும் அட்டெண்டன்ஸ் போட்டு இருக்கிறார். நீண்ட நேரத்தில் தான் இவர் 2017 ஆம் ஆண்டு வீரேந்திர சௌத்ரி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

குழந்தைகளோடு போட்டோ சூட்

குழந்தைகளோடு போட்டோ சூட்

வாழ்க்கை மகிழ்ச்சியாக சென்று கொண்டிருக்கும் நேரத்தில் தற்போது இந்த வருடம் தான் இவருக்கு அழகான இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்துள்ளது. குழந்தைகள் பிறந்து ஒரு சில மாதங்களே ஆன நிலையில் நமீதா தற்போது ஃபோட்டோ ஷூட் எடுத்திருக்கிறார். குழந்தைகளின் முகங்களை சரியாக காட்டாமல் நமீதா எடுத்த போட்டோ ஷூட் வீடியோவை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதை பார்த்த இவருடைய தீவிரமான ரசிகர்கள் குழந்தையின் புகைப்படத்தை காட்டலாம், நாங்களும் பார்க்க ஆசையாக இருக்கிறோம் என்று கூறி வருகிறார்கள்.ரசிகர்கள் குழந்தைகளுக்கு ஆசிர்வாதங்களை கூறி வந்தாலும், முகத்தை காட்ட வில்லை என்று வருத்தத்தையும் சேர்ந்து பதிவிட்டு வருகிறார்கள்.

English summary
Namitha is blessed with two beautiful boys. Namitha has done a photo shoot just a few months after the birth of the children. Namitha shared the photo shoot video on her Instagram page in which the children's faces were not shown properly. Seeing this, his ardent fans are saying that they can show the child's photo and we are also eager to see it.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X