For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பிக் பாஸ் தமிழ் 5:கண்கலங்கி அழுத ராஜுவின் தாய்...! அந்த நொடியிலும் ராஜுவின் செயல் !

Google Oneindia Tamil News

சென்னை: பிக்பாஸ் ஐந்தாவது சீசனில் ராஜூ வெற்றி பெற்றதை பார்த்ததும் அவருடைய தாய் ஆனந்தக் கண்ணீர் சிந்தியுள்ளார்.

'ஒன்இந்தியாதமிழ்' திருப்பாவை, திருவெம்பாவை பாடல் போட்டி: குவிந்த வீடியோக்கள்! 3 பேருக்கு முதல் பரிசு'ஒன்இந்தியாதமிழ்' திருப்பாவை, திருவெம்பாவை பாடல் போட்டி: குவிந்த வீடியோக்கள்! 3 பேருக்கு முதல் பரிசு

அவருடைய அம்மா அழுது கொண்டிருக்கும் போது, ராஜூ செய்த செயல் பலருடைய கருத்துக்களை பெற்றுள்ளது.

முயற்சிக்கு கிடைத்த வெற்றி

முயற்சிக்கு கிடைத்த வெற்றி

ஈன்ற பொழுதிலும் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக் கேட்ட தாய்..என்னும் திருக்குறளின் படி தற்போது ராஜூ டைட்டில் ஜெயித்ததும் அவருடைய தாய் பெருமையில் பூரித்துள்ளார். இதுவரைக்கும் பல போராட்டங்களை சந்தித்து வந்த ராஜு தற்போது வெற்றிபெற்ற தருணத்தை தன்னுடைய தாயைப் பார்த்து தன்னுடைய மகிழ்ச்சியை வழிகாட்டியுள்ளார். பல நேரங்களில் ரசிகர்கள் மட்டுமல்லாமல் உறவினர்களும் அதிகமாக ராஜூவுக்கு சப்போர்ட் கொடுத்து இருந்ததற்கு தற்போது வெற்றி கிடைத்துள்ளது.

அந்த ஒரு தருணம்

அந்த ஒரு தருணம்


பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஐந்தாவது சீசனின் ஆரம்பத்திலிருந்து ஜெயிக்கப்போவது ராஜூதான் என்று ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்துக் கொண்டிருந்தனர். அதுபடியே தற்போது நடந்து விட்டது. பிரமண்டமாக நடைபெற்ற ஐந்தாவது சீசனின் கிராண்ட் பினாலே நிகழ்ச்சியில் முடிவுகள் ஏற்கனவே சமூக வலைத்தளத்தில் வெளியாகி இருந்த நிலையில் ராஜூ வெற்றி பெறும் தருணத்தை பார்ப்பதற்காக பல ரசிகர்கள் விஜய் டிவியில் நிகழ்ச்சியை பார்த்து ரசித்துக் கொண்டிருந்தனர். இந்த நிலையில் ராஜூ வெற்றி பெறும்போது தங்கள் வீட்டில் உள்ளவர்கள் வெற்றி பெற்றது போல ரசிகர்களும் கொண்டாடி வந்துள்ளனர்.

காத்திருந்த ரசிகர்கள்

காத்திருந்த ரசிகர்கள்

வழக்கமாக ஒவ்வொரு சீசனிலும் நடப்பது போன்ற இந்த சீசனில் கிராண்ட் பினாலே லைவ்வாக நடக்கவில்லை என்றாலும், சனிக்கிழமை நிகழ்ச்சி நடைபெற்று முடிக்கப்பட்டு அந்த நிகழ்ச்சியை ஞாயிற்றுக் கிழமை ஒளிபரப்பப்பட்டு உள்ளது. இந்த நிலையில் இது சிலருக்கு சுவாரசியம் இல்லை என்று கூறிக் கொண்டிருந்தாலும் ராஜூ வெற்றி பெற்றது மகிழ்ச்சியை கொடுத்துள்ளது என்று கூறிவருகின்றனர். இந்த ஒரு தருணத்தை பார்ப்பதற்காக பலர் பொறுமையாக காத்திருந்ததாகவும் கூறிவருகின்றனர்.

இந்த நிலையிலும் இப்படியா? ?

இந்த நிலையிலும் இப்படியா? ?

கமல்ஹாசன் ஐந்தாவது சீசனின் வெற்றியாளராக ராஜுவை அறிவித்ததும் ராஜீவின் தாயார் கண்கலங்கியதைப்பார்த்த ராஜு அழக்கூடா...து என்று ஆறுதலையும் கிண்டலாக கூறியிருக்கிறார். இதைப் பார்த்து பலர் இப்ப கூட இப்படியா ராஜூ செய்கிறார் என்று கலாய்த்து வருகின்றனர். எந்த சூழ்நிலையிலும் தன்னுடைய காமெடியை வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் ராஜு, உணர்ச்சி பூர்வமான இவ்வளவு நாள்கள் இந்த ஒரு தருணத்திற்காக போராடிக்கொண்டிருந்த நேரத்திலும் இவருடைய நக்கல் நையாண்டி தனம், தனி தான் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

English summary
Bigg Boss Grand Finale 5 :Raju mother tears of joy when she sees Raju win in the fifth season of Bigg Boss.While his mother is crying, Raju's action has received many comments.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X