திருச்செந்தூரில் திக்குமுக்காடிப் போன தாமரைச்செல்வி... அலைகடலென அன்பு காட்டிய ரசிகர்கள்
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய தாமரைச்செல்வி முதல்முறையாக திருச்செந்தூர் சென்றுள்ளார்.
Recommended Video
குடும்பத்தோடு கோவிலுக்கு சென்ற தாமரை செல்வி ரசிகர்களின் அன்பை பார்த்து உணர்ச்சிவசப்பட்டு உள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் அறிமுகம்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ரியாலிட்டி ஷோவான பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஐந்தாவது சீசனில் ஒரு போட்டியாளராக அறிமுகமான தாமரைச்செல்வி இந்நிகழ்ச்சியில் வருவதற்கு முன்பு ஒரு நாடக கலைஞராக இருந்துள்ளார் .ஒரு நாடக கலைஞராக தான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் அறிமுகமாகி தற்போது பட்டிதொட்டியெல்லாம் பிரபலம் அடைந்து விட்டார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் மூலமாக பலருடைய வாழ்க்கை மாறி உள்ளது. அந்த வகையில் தாமரைச் செல்வியின் வாழ்க்கையும் அவர் எதிர்பார்க்காத வகையில் வளர்ச்சி அடைந்துள்ளது என்று அவரே கூறியுள்ளார்.

திருச்செந்தூரில் தரிசனம்
பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் கடந்த வாரம்தான் முடிவடைந்த நிலையில் போட்டியாளர்கள் அனைவரும் தங்களுடைய வழக்கமான பணிகளை செய்யத் தொடங்கிவிட்டனர். இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களை இது வரைக்கும் தொடர்ந்து பார்த்து வந்த ரசிகர்கள் தற்போது அவர்களை பார்க்க முடியவில்லையே என்று ஏங்கி போயிருக்கின்றனர். இந்த நிலையில் தான் இதுவரைக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவ்வளவு பெரிய வெற்றி அடைந்ததற்கு திருச்செந்தூர் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக தாமரைச்செல்வி திருச்செந்தூர் சென்றுள்ளார் .

திணற வைத்த அன்பு
பிக்பாஸ் நிகழ்ச்சிக்குள் தாமரைச்செல்வி இருக்கும்போது அவருக்கு அதிகமான ஆதரவு கிடைத்தது. இதை அவர் வெளியே வந்த பிறகுதான் தெரிந்து கொண்டு ரசிகர்களுக்கு நன்றி கூறியிருந்தார். தற்போது வெளியே சென்ற இடத்தில் தங்களக்கு கிடைத்த ஆதரவை பார்த்து அவரும் அவருடைய குடும்பத்தினரும் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். அதில் தாமரைச்செல்வி உணர்ச்சிவசப்பட்டு பேச வார்த்தையின்றி ரசிகர்களுக்கு நன்றி கூறி அவர்களோடு செல்பி எடுத்து விட்டு வந்து இருக்கிறார்.

ரசிகர்களின் அறிவுரை
தாமரைச்செல்வி பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு முதல்முறையாக வெளியே சென்ற இந்த வீடியோ தற்போது அவருடைய ரசிகர்களால் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பலர் தாமரைச்செல்விக்கு அறிவுரைகளையும் கூறி வருகின்றனர். இந்த காலகட்டத்தில் வெளியே செல்லும் போது மாஸ்க் அணிந்து செல்லுமாறும், ரசிகர்களுடன் இருக்கும் போதும் மாஸ்க்கை கழற்றமல் இருந்தால் நல்லது என்றும் பலர் இவருக்கு அறிவுரை கூறி வருகின்றனர். பல ரசிகர்கள் இவர் இன்னும் அதிக தூரம் வெற்றி பெற வேண்டும் என்று இவருக்கு வாழ்த்துக்களையும் கூறி வருகின்றனர்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications