திருச்செந்தூரில் திக்குமுக்காடிப் போன தாமரைச்செல்வி... அலைகடலென அன்பு காட்டிய ரசிகர்கள்
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய தாமரைச்செல்வி முதல்முறையாக திருச்செந்தூர் சென்றுள்ளார்.
Recommended Video
குடும்பத்தோடு கோவிலுக்கு சென்ற தாமரை செல்வி ரசிகர்களின் அன்பை பார்த்து உணர்ச்சிவசப்பட்டு உள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் அறிமுகம்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ரியாலிட்டி ஷோவான பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஐந்தாவது சீசனில் ஒரு போட்டியாளராக அறிமுகமான தாமரைச்செல்வி இந்நிகழ்ச்சியில் வருவதற்கு முன்பு ஒரு நாடக கலைஞராக இருந்துள்ளார் .ஒரு நாடக கலைஞராக தான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் அறிமுகமாகி தற்போது பட்டிதொட்டியெல்லாம் பிரபலம் அடைந்து விட்டார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் மூலமாக பலருடைய வாழ்க்கை மாறி உள்ளது. அந்த வகையில் தாமரைச் செல்வியின் வாழ்க்கையும் அவர் எதிர்பார்க்காத வகையில் வளர்ச்சி அடைந்துள்ளது என்று அவரே கூறியுள்ளார்.

திருச்செந்தூரில் தரிசனம்
பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் கடந்த வாரம்தான் முடிவடைந்த நிலையில் போட்டியாளர்கள் அனைவரும் தங்களுடைய வழக்கமான பணிகளை செய்யத் தொடங்கிவிட்டனர். இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களை இது வரைக்கும் தொடர்ந்து பார்த்து வந்த ரசிகர்கள் தற்போது அவர்களை பார்க்க முடியவில்லையே என்று ஏங்கி போயிருக்கின்றனர். இந்த நிலையில் தான் இதுவரைக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவ்வளவு பெரிய வெற்றி அடைந்ததற்கு திருச்செந்தூர் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக தாமரைச்செல்வி திருச்செந்தூர் சென்றுள்ளார் .

திணற வைத்த அன்பு
பிக்பாஸ் நிகழ்ச்சிக்குள் தாமரைச்செல்வி இருக்கும்போது அவருக்கு அதிகமான ஆதரவு கிடைத்தது. இதை அவர் வெளியே வந்த பிறகுதான் தெரிந்து கொண்டு ரசிகர்களுக்கு நன்றி கூறியிருந்தார். தற்போது வெளியே சென்ற இடத்தில் தங்களக்கு கிடைத்த ஆதரவை பார்த்து அவரும் அவருடைய குடும்பத்தினரும் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். அதில் தாமரைச்செல்வி உணர்ச்சிவசப்பட்டு பேச வார்த்தையின்றி ரசிகர்களுக்கு நன்றி கூறி அவர்களோடு செல்பி எடுத்து விட்டு வந்து இருக்கிறார்.

ரசிகர்களின் அறிவுரை
தாமரைச்செல்வி பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு முதல்முறையாக வெளியே சென்ற இந்த வீடியோ தற்போது அவருடைய ரசிகர்களால் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பலர் தாமரைச்செல்விக்கு அறிவுரைகளையும் கூறி வருகின்றனர். இந்த காலகட்டத்தில் வெளியே செல்லும் போது மாஸ்க் அணிந்து செல்லுமாறும், ரசிகர்களுடன் இருக்கும் போதும் மாஸ்க்கை கழற்றமல் இருந்தால் நல்லது என்றும் பலர் இவருக்கு அறிவுரை கூறி வருகின்றனர். பல ரசிகர்கள் இவர் இன்னும் அதிக தூரம் வெற்றி பெற வேண்டும் என்று இவருக்கு வாழ்த்துக்களையும் கூறி வருகின்றனர்.
-
இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் விநியோகம் செய்ய தயார்.. போர் பதற்றத்துக்கு மத்தியில் ரஷ்யா அறிவிப்பு! -
சவுதிக்கு விழுந்த அடி! ஹார்முஸ் ஜலசந்திக்கு பதில் செங்கடல்.. அடிமடியில் கைவைத்த ஈரானால் ரூட் மாற்றம் -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? மானியம் வங்கி கணக்கிற்கு வராமல் போவது ஏன்? சமையலறையில் டிஜிட்டல் மர்மம் -
மீடியாவில் பேசாதீங்க.. தடுக்கப்படும் சங்கீதா.. விஜய் தரப்பில் 'மூவ்'? கோடிகளில் எகிறும் சமாதான தூது? -
தேனியில் ஓ பன்னீர்செல்வம் நினைத்தே பார்க்காதது.. கூண்டோடு விலகிய ஆதரவாளர்கள் எடுத்த முடிவு -
பயிர் கடன் ரத்து, உயர் கல்வி ஏற்பு .. விவசாயிகளுக்கான தவெக வாக்குறுதிகளை வெளியிட்ட விஜய் -
நெருப்பு வளையத்தில் இந்தியா! மோடி எடுத்த முடிவால்! போருக்குள் இழுக்க பார்க்கும் இஸ்ரேல்! கையை மீறுது -
ராஜ்யசபா எம்.பி ஆகும் 6 பேர் யார் யார்? திமுக, அதிமுக, தேமுதிக, பாமக இன்று அறிவிக்க திட்டம்! -
சிறகடிக்க ஆசை: விஜயாவிடம் நறுக்குன்னு ஸ்ருதி கேட்ட கேள்வி.. அண்ணாமலை எடுத்த முடிவு! மீனாவின் விபரீத செயல் -
5 ஸ்டார் ஹோட்டல் மாதிரி சில்லென்ற சொகுசு: சென்னை டூ நெல்லை ரயில் பயணிகளுக்கு ரூ.25ல் பெரிய சர்ப்ரைஸ் -
கருணாஸ் காட்டில் மழை தான்.. கடைக்கண் பார்வையை திருப்பிய ஸ்டாலின்! கண்டிப்பா அங்க தான் போட்டியாம்! -
ஈரானை பார்த்து நடுங்கிய டிரம்ப்! அவசரமாக இந்தியா கையில் எடுத்த வெட்டுக்கிளி ஆயுதம்! ரெடியான சேஷ்நாக்












Click it and Unblock the Notifications