Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கண்ணீரை சிந்தி காதலை காட்டும் போட்டியாளர்கள்...பங்கமாக கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இன்றும் காதலர் தினம் கொண்டாட்டம் தொடர்ந்து கொண்டாடப்பட்டு வருகிறது.

நிகழ்ச்சி தொடங்கி 16 நாட்களுக்குள் இவ்வளவு அழுகை சீன்களா என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள்.

பிக்பாஸ் அல்டிமேட் தொடக்கம்

பிக்பாஸ் அல்டிமேட் தொடக்கம்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் வெற்றியை தொடர்பு பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் 14 போட்டியாளர்கள் அறிமுகமாகி இருந்தனர். தற்போது அதில் இரண்டு போட்டியாளர்கள் எலிமினேஷன் ஆகியிருக்கின்றனர். மீதமிருக்கும் 12 போட்டியாளர்களும் தற்போது 16 வது நாட்களில் காலடி எடுத்து வைத்திருக்கின்றனர். ஒவ்வொரு நாட்களும் போட்டியாளர்கள் உள்ளே என்ஜாய் பண்ணி கொண்டும் டாஸ்க்களில் கவனத்தை செலுத்திக் கொண்டும் இருந்து வருகின்றனர்.

 அதிகரிக்கும் போட்டிகள்

அதிகரிக்கும் போட்டிகள்

ஏற்கனவே ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் அந்த நிகழ்ச்சியில் தாங்கள் இழந்த பெயரையும் தாங்கள் நிரூபிக்க முடியாமல் வெளிக்காட்ட முடியாமல் போன தங்களுடைய திறமைகளை ரசிகர்களிடம் காட்டுவதற்காகவே மீண்டும் இந்த அல்டிமேட் நிகழ்ச்சியில் களம் இறங்கியிருக்கின்றனர். இதில் சுரேஷ் சக்ரவர்த்தி மற்றும் சுஜாதா அதிரடியாக வெளியேற்றப்பட்டு இருந்தாலும் போட்டியாளர்கள் ஒருவருக்கொருவர் சளைத்தவர்களல்ல என்று தான் போட்டி போட்டு வருகின்றனர்.

பக்குவமான நடவடிக்கைகள்

பக்குவமான நடவடிக்கைகள்

ஜூலி, அனிதா, வனிதா போன்ற ஒருசில போட்டியாளர்கள் இதற்கு முன்பு கலந்து கொண்ட போது இருந்ததற்கும் இப்போது இருப்பதற்கும் நிறையவே மாற்றம் இருக்கிறது என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் யார் என்பது பலருடைய எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது. அதில் தற்போது யாருடைய பெயரையும் முடிவாக கூற முடியவில்லை. அந்த அளவிற்கு ஒவ்வொரு போட்டியாளர்களும் தங்களுடைய தனித் திறமைகளையும் விளையாட்டையும் விளையாடி வருகின்றனர்.

அதிர்ச்சி அடைந்த அனிதா

அதிர்ச்சி அடைந்த அனிதா

காதலிக்கும் காதலர்களுக்கு பிப்ரவரி மாதம் முழுக்கவே காதலர் தினம்தான் அந்தவகையில் நேற்று தொடங்கிய காதலர் தினம் கொண்டாட்டம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்றும் தொடங்கியிருக்கிறது. போட்டியாளர்களின் உறவினர்கள் ஒவ்வொருவரும் இன்று போட்டியாளர்கள் இடம் பேசி வருகின்றனர். இதைப்பார்த்ததும் போட்டியாளர்கள் பலர் கதறி அழுவதை வைத்து நெட்டிசன்கள் சமூக வலைத்தளத்தில் கலாய்த்து வருகின்றனர். சும்மாவே காதல் என்று சொன்னால் அனிதா மணிக்கணக்கில் பேசுவார் என்பது பலரும் கூறும் குற்றச்சாட்டாக இருந்தாலும், தற்போது அவருடைய கணவர் அவரிடம் காதலை கூறியுள்ளார். தான் எப்போதும் உறுதுணையாக இருப்பதாக கூறியிருக்கிறார். அதை சற்றும் எதிர்பார்க்காத அனிதா தன்னுடைய மொத்த எக்ஸ்பிரஸனையும் முகத்தில் காட்டியிருக்கிறார்.

தொடரும் அழுகை சீன்கள்

தொடரும் அழுகை சீன்கள்

இதுவரைக்கும் நெகட்டிவ் கமெண்டுகளை மட்டுமே பெற்றிருந்த ஜூலி தற்போது பாசிட்டிவ் கமெண்டுகள் பெற்றுவரும் நிலையில் அவருடைய தம்பியும் அவருடைய அன்பான பாசத்தை ஜூலி இடம் வெளிக்காட்டி இருக்கிறார். அதுபோல வனிதாவின் மகள் அவருக்கு ஆறுதல் கூறி தங்களுடைய காதலையும், பாசத்தையும் வெளிக்காட்டி இருக்கின்றார். இப்படி ஒவ்வொரு போட்டியாளர்களும் தங்களுடைய உறவினர்களின் வீடியோவை பார்த்ததும் தேம்பி தேம்பி அழுது வருகின்றனர். இதைப்பார்த்த நெட்டிசன்கள் விஜய் டிவியில் தான் இப்படி நடக்கிறது என்றால் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் இப்படித்தானா என்று கேள்விகளை எழுப்பி இருக்கின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+