அனிதாவிற்குள் இப்படி ஒரு மாற்றமா? இதை எதிர்பார்க்கலையே ரசிகர்கள்..இதற்கான காரணம் இதுதானாம்
சென்னை: பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கும் அனிதாவின் நடவடிக்கைகளில் இவ்வளவு மாற்றமா என ரசிகர்கள் கேள்விகளை எழுப்பி இருக்கின்றனர்.
ஏற்கனவே பிக்பாஸ் நான்காவது சீசனில் கலந்து கொண்டதற்கும் தற்போது இருப்பதற்கு அனிதாவிற்குள் பல வித்தியாசங்கள் ஏற்பட்டிருப்பதாக ரசிகர்கள் கணித்து வருகிறார்கள்.

அதிகமான சென்டிமென்ட் சீன்கள்
ரசிகர்கள் ஆர்வத்தோடு எதிர்பார்த்திருந்த பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக அறிமுகமாகியிருக்கும் அனிதா சம்பத் ஏற்கனவே ஒரு செய்தியாளராக பலருக்கும் தெரிந்திருந்தாலும், ஒரு பிக் பாஸ் போட்டியாளராக விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசனில் கலந்து கொண்டு நன்கு பரிச்சயமாகி இருந்தார். இவருடைய துணிச்சலான கேரக்டரை பார்த்து ரசிகர்கள் பலர் இவருக்கு ஆதரவு கொடுத்து இருந்தாலும், பல நேரங்களில் இவருடைய அழுகாச்சி சென்டிமென்ட் சீன்கள் பலருக்கும் வெறுப்பாகி இருந்ததாகக் கூறி வந்தனர்.

அதிர்ச்சி தந்த இழப்பு
நான்காவது சீசனில் கலந்துகொண்ட பிறகு தன்னுடைய வாழ்க்கையில் பல முக்கியமான தருணங்களை அனிதா சம்பத் சந்தித்துள்ளார். அந்த சீசனில் இவர் வெளியேறிய ஒரு சில நாட்களில் இவருடைய பாசத்திற்கு உரிய தந்தையின் மரணம் இவரை அதிகமாக பாதித்திருக்கிறது. தந்தையின் மரணத்திற்கு பிறகு மீண்டும் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக அறிமுகமாகி இருந்தார். அப்போதே இவரிடத்தில் சில மாற்றங்கள் தெரிவதாக ரசிகர்கள் கூறிவந்தனர். ஆனாலும் தனக்கு தைரியத்தை கொடுத்து வந்த தந்தையின் இழப்பு இவருக்கு பெரிய அதிர்ச்சியாகவும் ,வருத்தத்தை கொடுத்ததாகவும் இருந்துள்ளது.

லைக்குகளை அள்ளிய பிரஸ் மீட்டிங்
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இவர் ஒரு சில திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்தாலும் விஜய் டிவியில் மீண்டும் பிக் பாஸ் டான்ஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இவர் வெற்றியும் பெற்றிருக்கிறார். ஒரு சில வருடங்களில் இவருடைய வாழ்க்கையில் நடந்த பல நிகழ்வுகள் மற்றும் வெற்றி தோல்விகள் இவருக்கு மனதில் வலிமைகளை கொடுத்திருப்பதாக இவர் கூறியிருக்கிறார். அது போலத்தான் தற்போது கூட பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவர் நடந்து வருகிறார் என்று ரசிகர்கள் கூறிவருகின்றனர். ஏற்கனவே நடந்து முடிந்த பிரஸ் மீட்டிங்கில் டாஸ்கில் கூட இவருடைய பங்களிப்பு ரசிகர்களை அதிகமாக கவர்ந்துள்ளது.

என்னது விஷ பாட்டிலா
பிக்பாஸ் அல்டிமேட் இந்நகழ்ச்சியில் தற்போது நீ யார் என்று எனக்கு தெரியும் எனும் டாஸ்க்கு நடைபெற்று வருகிறது. அதில் போட்டியாளர்கள் தங்களுடைய மனதில் இருக்கும் கருத்துக்களுக்கு ஏற்ப்ப பிற போட்டியாளர்களுக்கு பட்டங்களை கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது அனிதாவிற்கு விஷ பாட்டில் டைட்டில் கொடுக்கப்பட்டிருக்கிறது. இவருக்கு நான்கு போட்டியாளர்கள் இந்த ஓட்டு போட்டு இருக்கிறார்கள். ஆனால் இதை சகஜமாக எடுத்துக் கொண்டு என்னையும் பார்த்து 4 பேர் பயப்படுகிறார்கள் என்று இந்த பட்டத்தை மகிழ்ச்சியோடு வாங்கியிருக்கிறார். இதைப்பார்த்த ரசிகர்கள் இதே பழைய அனிதாவாக இருந்திருந்தால் அழுது இங்கே பிரச்சனை பண்ணியிருப்பார் என்று கூறி வருகின்றனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications