Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நான் வெளியே வந்ததற்கு வருத்தப்படவில்லை..ரசிகர்களும் வருத்தப்பட வேண்டாம்..ஆறுதல் கூறிய இசைவாணி

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய பிறகு தன்னுடைய ரசிகர்களுக்காக இசைவாணி பேசிய வீடியோ வைரலாக பரவி வருகிறது.

எனக்கு இதுவரைக்கும் வாக்களித்து ஆதரவு கொடுத்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

பலர் இவர் வெளியே வந்து விட்டதால் இனி அந்த நிகழ்ச்சியை பார்க்க மாட்டோம் என்று கூறியதாகவும் அதற்கு அப்படி செய்யாதீர்கள் என அவர்களுக்கு அறிவுரை கூறி இருக்கிறாராம் இசைவாணி.

ரசிகர்களின் எதிர்பார்ப்பு

ரசிகர்களின் எதிர்பார்ப்பு

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒருசில போட்டியாளர்களின் வெளியேற்றம் ரசிகர்களின் மனதை அதிகமாக காயப்படுத்தி விடும். அந்த மாதிரிதான் தற்போதைய சீசனில் இசை வாணியின் வெளியேற்றம் ரசிகர்கள் பலரையும் அதிர்ச்சி அடைய வைக்கிறது. இந்த வீட்டில் இவர் இன்னும் அதிக நாட்கள் இருக்க வேண்டும் என்று இவருக்கு ஆதரவு கொடுத்து வந்த ரசிகர்கள் கருத்து தெரிவித்து கொண்டிருந்தனர். இவர் விளையாட்டை நன்றாக விளையாட வேண்டும் என்று அவ்வப்போது அறிவுரைகளையும் வழங்கி வந்தனர்.

தொடர்ந்து வந்த பிரச்சனைகள்

தொடர்ந்து வந்த பிரச்சனைகள்

ரசிகர்களின் எதிர்பார்ப்பு படியே ஆரம்பத்தில் நன்றாக விளையாட வேண்டும் என்று தொடங்கிய இசைவாணி அந்த பிக்பாஸ் வீட்டிற்குள் ஒரு சில பிரச்சினைகளால் இவருடைய முடிவுகளை சரியாக எடுக்க விடாமல் தடுத்துக் கொண்டிருந்தது என்று கூறியிருக்கிறார். இந்த வீட்டிற்குள் வருவதற்கு முன்பு வரைக்கும் நான் நன்றாகத் தான் இருந்தேன். ஆனால் இங்கேதான் என்னால் என்னுடைய கேரக்டரில் இருக்க முடியவில்லை என அவ்வபோது இவரும் கூறிக் கொண்டுதான் இருந்தார். இதை ரசிகர்கள் பார்த்து கொண்டு இருந்ததால் இவருக்கு பல நேரங்களில் ஆதரவாக ரசிகர்கள் கமெண்டுகளை அனுப்பி வந்து கொண்டிருந்தனர்.

பாடலை மறந்து விட்டாரோ??

பாடலை மறந்து விட்டாரோ??

சாதாரண குடும்பத்தில் பிறந்து தற்போது கானா பாடலால் இந்தியாவின் தலைசிறந்த பெண்கள் எனும் வரிசையில் இவருடைய பெயரும் இடம் பெற்றிருப்பது ரசிகர்கள் பலருக்கும் இவர் மீது நல்ல அபிப்ராயத்தை ஏற்படுத்தி இருந்தது. அதனால் தான் இவருக்கு இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்து. இருந்தாலும் இவருடைய பாடலை உலகமெங்கும் ஒலிக்க செய்வார் என்று அவருடைய ரசிகர்கள் ரொம்பவே எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். ஆனால் இவருக்கும் ஒரு சிலரோடு பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இவருடைய பாடலை மறந்து போய் விட்டார் என்று பலர் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இசை வாணியின் அறிவுரை

இசை வாணியின் அறிவுரை

இவருடைய விளையாட்டை இவர் சரியாக விளையாடிக் கொண்டிருந்த நேரத்தில் கமல் இவருக்கு கொடுத்த அட்வைஸ் தான் இவரை வேறுமாதிரியாக விளையாட்டை திசைதிருப்பி விட்டது என்று பலர் கூறிவருகின்றனர். ஆரம்பத்தில் அண்ணாச்சி உடன் இவருக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இவருடைய முடிவுகளில் தடுமாறிக் கொண்டிருந்தவர், கடைசியாக தாமரைச்செல்வி உடன் ஏற்பட்ட தகராறால் ரசிகர்கள் ஒரு சிலர் இவரை வெறுக்க தொடங்கி விட்டனர். அதனாலேயே இவருக்கு இந்த கடைசி வாரத்தில் வாக்குகள் குறைந்துவிட்டது போல. ஆனாலும் வெளியே வந்த இசைவாணி தான் சந்தோஷமாக தான் இந்த நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்துள்ளேன் என்று கூறியிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் தன்னுடைய ரசிகர்கள் ஒரு சிலர் இவர் இல்லாத பிக் பாஸ் இனி பார்க்க மாட்டோம் என்று கூறி இருக்கிறார்களாம். அதனால் அவர்களுக்கு அறிவுரை கூறியிருக்கிறார். இப்படியெல்லாம் செய்யாதீர்கள் என்று அறிவுரையும் கூறியிருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+