ரோஜா சீரியல் நடிகைக்கு குழந்தை பிறந்தாச்சு..மகிழ்ச்சியில் ரசிகர்கள்..என்ன குழந்தை தெரியுமா??
சென்னை: ரோஜா சீரியலின் வில்லி ஷாம்லிக்கு குழந்தை பிறந்த மகிழ்ச்சியில் ரசிகர்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
தன்னுடைய குழந்தையின் வருகையால் மகிழ்ச்சியில் ஷாமிலியின் குடும்பம் உள்ளது.
தனக்கு குழந்தை பிறந்த மகிழ்ச்சியான செய்தியை ரசிகர்களிடம் பகிர்ந்த ஷாமிலிக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

ரசிகர்களை கவர்ந்த கேரக்டர்
சீரியலாக இருந்தாலும் சரி சினிமாவாக இருந்தாலும் சரி அதில் ஹீரோவாக நடிக்கும் நடிகர்களை ஹீரோவாக பார்க்கும் ரசிகர்களும், வில்லியாகவும், வில்லன்களாகவும் நடிக்கும் நடிகர்களை அதே கேரக்டரில் பார்க்கும் ரசிகர்கள் இப்ப வரைக்கும் இருந்து வருகின்றனர். ஆனால் என்னதான் சீரியலில் வில்லியாக நடித்து கொண்டிருந்தாலும் நிஜத்தில் குழந்தை மனம் மாறாத ஒரு சாதாரண பெண்ணாகத்தான் இருந்து வருகிறார் என்று ஷாமிலி நிரூபித்து வருகிறார்.

ரோஜா சீரியலின் அனு
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரோஜா சீரியலில் மூலமாக அனுப்பி அதில் வில்லத்தனத்தில் அனைத்து பெண் ரசிகர்களின் திட்டுக்களையும் வாங்கிக்கொண்டிருந்த ஷாம்லி இந்த சீரியலின் மூலமாக அனுவாகவே ரசிகர்களின் மத்தியில் வாழ்ந்து வந்தார். இந்த சீரியலின் ஆரம்பத்திலிருந்து இந்த கேரக்டரில் இவரை பார்த்த ரசிகர்கள் அனுவாகவே இவரை ஏற்றுக்கொண்டனர். அதிகமாக இவரை திட்டி தீர்க்கும் ரசிகர்கள் தான் இருக்கின்றனர். ரோஜாவை இவர் பழிவாங்க நினைப்பதால் இவரை பிடிக்காமல் கண்டமேனிக்கு பலர் திட்டி வந்தனர்.

திடீர் விலகல்
இவருக்கு திருமணம் முடிந்து பல வருடங்களுக்கு பிறகு இவர் கர்ப்பமாக இருந்த காரணத்தால் இந்த சீரியலில் இவரால் தொடர்ந்து நடிக்க முடியவில்லை. தனக்கு கிடைத்த வாய்ப்பை இவரால் விட்டுவிட முடியாமல் இவரும் ஒரு சில மாதங்கள் இந்த சீரியலில் நடித்துக் கொண்டிருந்தார். ஆனால் ரசிகர்கள் அதிகமாக திட்டுவதை ஏற்றுக்கொள்ள முடியாமல் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் அதிகமாக சோர்வு ஏற்படவே இந்த சீரியலில் இருந்து விலகி விட்டார். ஆனால் இவர் நடித்த கதாபாத்திரத்தில் இவர் இல்லை என்பதை ரசிகர்களால் இப்ப வரைக்கும் ஏற்றுக்கொள்ள முடியாமல் தான் இருந்து வருகிறது. இவர்தான் அனு கேரக்டரில் கச்சிதமாக பொருந்தி உள்ளார் என்று பலர் கூறி வருகின்றனர்.

மகிழ்ச்சியான செய்திதான்
ரோஜா சீரியலில் இருந்து இவர் விலகிய பிறகும் இவர் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக தான் இருந்துவருகிறார். தன்னுடைய ரீல்ஸ் வீடியோக்களின் மூலமாக இவரை தேடிக் கொண்டிருக்கும் ரசிகர்களுடன் நெருக்கமாக தான் இருந்து வருகிறார். இவருக்கு எப்போது குழந்தை பிறக்கும் என்று ரசிகர்கள் பலர் ஆர்வமாக இவரிடம் கேட்டுக்கொண்டிருந்தனர். இந்த நிலையில் இன்று காலை அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. தனக்கு பெண் குழந்தை பிறந்த செய்தியை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுக்கு தெரியப்படுத்தியுள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் இவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
-
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ்












Click it and Unblock the Notifications