சிறகடிக்க ஆசையில் அடுத்த வாரம்! கிரிஷை கடத்திய பிஏ! ரோகிணி பற்றிய உண்மையை சொல்லும் மீனா! மனோஜ் பாவம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்த வாரம் என்ன நடக்கப்போகிறது என்ற ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் ரோகிணியின் மகன் கிரிஷை ரோகினியின் பழைய பிஏ கடத்தி இரண்டு லட்சம் பணம் கேட்கிறார். ஆனால் ரோகினி தன்னிடம் பணம் இல்லை என்று சொல்லி மனோஜிடம் பணம் கேட்டு மிரட்ட சொல்லி பிரச்சனையில் சிக்குகிறார்.
சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகிணி பற்றிய உண்மைகள் மீனாவிற்கு மட்டும் தெரிந்து இருக்கிறது. ரோகிணியின் நிஜப்பெயர் கல்யாணி என்றும் கிரிஷ் அவருடைய பையன் தான் என்ற உண்மையையும் தெரிந்தது. நான் இந்த உண்மையை வீட்டில் சொல்லப் போகிறேன் என்று மீனா கிளம்பினார். ஆனால் ரோகிணி நீங்க உண்மைய சொன்னா நாங்க தற்கொலை செஞ்சுக்குவோம் என்று தன்னுடைய மகனோடு மிரட்டி இருந்தார்.

இதனால் வேறு வழி இல்லாமல் மீனாவும் உண்மையை சொல்லாமல் மறைத்துக் கொண்டிருக்கிறார். ஆனால் மீனா உண்மையை மறைக்க மறைக்க தினமும் குடும்பத்திற்கு பிரச்சினைதான் வந்திருக்கிறது. வீட்டிற்குள் நடக்கும் சம்பவங்களை பார்க்கும் போது முத்துவுக்கு சந்தேகம் வருகிறது. இதுவரைக்கும் முத்து மற்றும் மீனா மீது பாசமாக இருந்த கிரிஷ் இப்போ மனோஜ் தான் என்னுடைய டாடி என்று மனோஜ் பக்கம் சுத்தி கொண்டிருக்க அதை பார்த்து முத்து யோசித்துக் கொண்டிருக்கிறார்.
அதேபோல வீட்டில் நடக்கும் விஷயங்களைப் பற்றி கேட்கும் போது மீனாவும் உண்மையை சொல்லாமல் ஏமாற்றிக் கொண்டிருக்கிறார். இப்படியான சூழ்நிலையில் தான் அடுத்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அந்த ப்ரோமோவில் ரோகிணியின் பிஏ வழக்கம் போல ரோகிணிக்கு போன் செய்து பணம் கேட்டு மிரட்டுகிறார்.
Singapenne Serial: சிங்க பெண்ணே சீரியல் அன்புக்கு கல்யாணம்! மனைவி யார் தெரியுமா? இந்த விஜய் டிவி நடிகை தான்!
ஆனால் ரோகிணி என்னிடம் பணம் இல்லை என்று சொல்ல, உன்னுடைய மகன் கிரிஷ் எங்கிட்ட தான் இருக்கிறான். அவனை கடத்தி வைத்திருக்கிறேன் நீ பணம் தரவில்லை என்றால் அவனை கொன்னுருவேன் என்று மிரட்டுகிறார். உடனே பயந்து போன ரோகிணி என்கிட்ட பணம் இல்ல ஆனால் நான் ஒரு நம்பர் தருகிறேன் அந்த நம்பருக்கு போன் செய்து பணம் கேளு தருவாங்க என்று மனோஜ் நம்பரை கொடுக்கிறார்.
சிறகடிக்க ஆசை: ரோகிணி தான் கல்யாணி! உண்மையை உளறிய மனோஜ், விஜயா எடுத்த முடிவு! தவிக்கும் மீனா
மனோஜ் நம்பருக்கு போன் செய்து உங்க வீட்டில் இருக்கிற கிரிஷை நான் கடத்தி வைத்திருக்கிறேன் இரண்டு லட்சம் பணம் வேண்டும் என்று பிஏ மிரட்டுகிறார். அப்போது முத்துவும் பக்கத்தில் இருக்க இதை ஸ்பீக்கரில் போட்டு முத்துவும் கேட்கிறார். இந்த விஷயத்தை கேட்டு மீனா அதிர்ச்சியில் இருக்கிறார்.
இதனால் அடுத்த வாரம் கிரிஷை காப்பாற்றுவதற்காக முத்து முயற்சிகள் எடுப்பாரா? அப்போதுதான் ரோகிணி பற்றிய உண்மைகள் தெரியவர இருக்கிறது என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு வேலை மீனாவே இந்த உண்மையை சொல்லப் போகிறாரா? அல்லது வழக்கம்போல மீனா மறைக்க அதை முத்துவே கண்டுபிடிக்கிறாரா? என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.
-
Super Singer : சூப்பர் சிங்கர் அருணாவிற்கு கல்யாணம்.. மகிழ்ச்சியோடு வெளியிட்ட பதிவு! குவியும் வாழ்த்து -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
சிறகடிக்க ஆசை: அண்ணாமலை சொன்ன வார்த்தை! ஜெயிலுக்கு போகும் விஜயா.. மீனா செய்த உருப்படியான முடிவு -
குக் வித் கோமாளியில் சர்ப்ரைஸ்.. நீக்கப்பட்ட ரக்ஷன்.. புது போட்டியாளராக “பரிதாபங்கள்” டிராவிட்! செம சம்பவம் -
குக் வித் கோமாளியில் பஞ்சாயத்து மேல் பஞ்சாயத்து! மணிமேகலை இடத்தில் ஜோயா! புதிதாக வந்த ரோஜா! காரணம் இருக்கு! -
மாதம்பட்டி ரங்கராஜனின் சவால்! நான் இந்த இடத்தில் வந்து நிற்க காரணம்.. உருக்கமாக போஸ்ட் போட்ட ஜாய்! அடுத்த பஞ்சாயத்து -
பாண்டியன் ஸ்டோர் 2: கோமதியால் கதறி அழுத பாண்டியன்.. காந்திமதி சொன்ன விஷயம்! உடைந்த குடும்பம் -
Pandian Stores 2 serial update: பாண்டியன் செய்த முட்டாள்தனம்.. உயிருக்கு போராடும் கோமதி.. அரசி கேட்ட கேள்வி! -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது?












Click it and Unblock the Notifications