For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

என் மகனே என்னை வெறுக்கிறான்...டீம் மேட்ஸ்களை கண்கலங்க வைத்த தாமரை

Google Oneindia Tamil News

சென்னை: கலகலப்பாக சிரித்துக்கொண்டிருக்கும் தாமரைக்குள் இவ்வளவு வேதனையா என ரசிகர்கள் பீல் பண்ணி வருகின்றனர்.

Recommended Video

    4 மாதம் மகனை பார்க்கவில்லை கண் கலங்கிய Thamarai Selvi | Bigg Boss 5 Tamil

    நான் இங்கு வந்ததற்கு காரணமே இதுதான் என்று தாமரை பேசியதும் ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக தான் இருந்திருக்கிறது.

    கோவில்பட்டி ஓட்டலில் பரோட்டா சாப்பிட்ட தாய்-மகள் அடுத்தடுத்து மர்ம மரணம்.. என்ன நடந்தது? கோவில்பட்டி ஓட்டலில் பரோட்டா சாப்பிட்ட தாய்-மகள் அடுத்தடுத்து மர்ம மரணம்.. என்ன நடந்தது?

    இங்கே தான் நான் சந்தோஷமாக இருக்கிறேன் என்று இவர் இவ்வளவு நாளாக சொல்லும்போது தெரியவில்லை.ஆனால், இப்போது தான் தெரிகிறது என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

    வெகுளித்தனமான குணம்

    வெகுளித்தனமான குணம்

    பிக்பாஸ் ஐந்தாவது சீசனில் பல புதுமுகங்கள் அறிமுகமாகி இருந்தாலும் இந்த நிகழ்ச்சியில் தற்போது பலரும் ரசிகர்களுக்கு பரிச்சயமான நபர்களாக மாற தொடங்கி விட்டார்கள். அதில் ஒருவராக தாமரைச்செல்வி இருந்து வருகிறார். தன்னுடைய வெகுளித்தனமான பேச்சாலும், கலகலப்பான குணத்தாலும் அனைவரையும் கவர்ந்து இழுத்தவர். ஒரு வாரத்திற்குள் ரசிகர்களின் மனதில் ஆழமாக பதிந்து விட்டார். இவருடைய குழந்தை தனத்தை பார்த்து பலர் இவருக்கு ரசிகர்களாக மாரி இவருடைய பெயரில் ஃபேன்ஸ் பேஜ்களையும் தொடங்கிவிட்டனர்.

    கண்ணீரோடு, உருகும் கதை

    கண்ணீரோடு, உருகும் கதை

    ரசிகர்களின் மத்தியில் அதிகமான நன்மதிப்பை பெற்று வரும் ஒருவராக இவர் வலம் வந்து கொண்டிருக்கிறார். இந்த நிலையில் இந்த வார இந்த வீட்டின் தலைவராகவும் இவர் பொறுப்பேற்று இருக்கிறார். முதல் டாஸ்க்கில் இவர் வெற்றி பெற்றதை தொடர்ந்து இவருக்கு இந்த பதவி கொடுக்கப்பட்டிருக்கிறது. பதவி கிடைத்த பிறகும் தன்னுடைய அதே குணத்தாலும் அனைவரையும் கவர்ந்து இழுத்து வரும் இவர், இன்றைய கதை சொல்லும் பகுதியில் அனைவரையும் கலங்க வைத்துவிட்டார். தன்னுடைய கதையை கேட்டால் எல்லோரும் அசந்து போய் விடுவீர்கள் என்று இதுவரைக்கும் கூறிக் கொண்டிருந்தவர்கள் இப்போது அழ வைத்துவிட்டார்.

    முதல் ப்ரோமோ

    முதல் ப்ரோமோ

    போட்டியாளர்கள் அனைவரும் தங்களுடைய கடந்து வந்த கடினமான கதைகளை கூறிக்கொண்டிருக்கும் டாஸ்க்கில் இதுவரைக்கும் பலர் தங்களுடைய கதைகளை கூறிக் கொண்டிருக்கின்றனர். அதில் ஒரு சிலருடைய கதைகள் போட்டியாளர்களையும், ரசிகர்களின் மனதையும் கவர்ந்து விட்டது. அதற்கு தொடர்ந்து போட்டியாளர்களும் ரசிகர்களும் லைக்களையும் கொடுத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் இன்றைய எபிசோட்டின் முதல் ப்ரோமோவாக தாமரைச்செல்வி கூறிய கதை தான் ஒளிபரப்பாகி வருகிறது. அதில் ஒரு பாதியை கேட்டதுமே ரசிகர்கள் பீல் பண்ண தொடங்கிவிட்டனர்.

    பார்ப்போரை அழவைத்து விட்டார்

    பார்ப்போரை அழவைத்து விட்டார்

    என்ன நடந்தாலும் ஜாலியாக சிரித்து கொண்டிருக்கும் பிரியங்கா இவருடைய கதையை கேட்டு கண்ணீர் வடித்தது இவருடைய கதைக்கு கிடைத்த அங்கீகாரமாக தான் இருந்து வருகிறது. யாருடைய கதையாக இருந்தாலும் சரி அதில் அவர்களுடைய மனசை தேற்றி ஒரு ஜாலியான மூவ்மெண்ட் கொடுத்துவிடும் பிரியங்காவே இந்த கதைக்கு கண்ணீர் சிந்தி இருப்பது ரசிகர்களின் மத்தியில் சிறு குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அது மட்டுமல்லாமல் தன்னுடைய மகன் மீது இவர் வைத்திருக்கும் பாசத்தையும் அவருக்காகத்தான், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன் அவர் என்னுடன் வந்து விடவேண்டும் என்று இவர் கதறி அழுதது பார்ப்போரை கண் கலங்க வைத்திருக்கிறது.

    English summary
    It has been a habit for all the contestants to tell their past stories on Bigg Boss, and while they are continuing with the same show this season, many contestants have told their stories, a few of which have deeply ingrained in the minds of the fans and now the fans are peeling off the story of Lotus Selvi.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X