For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அப்பாவின் அன்பு ஒரு காவியம் என்பதை காட்டிய குழந்தை.. குவியும் வாழ்த்துக்கள்

Google Oneindia Tamil News

சென்னை: ஆனந்தமாக இருக்க அறிவு தேவை இல்லை அன்பு போதும் என்று தற்போது நீயா நானா நிகழ்ச்சியும் ஒரு குழந்தை நிரூபித்துள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சியில் நடந்த நெகிழ்ச்சியான நிகழ்வு தான் தற்போது சமூக வலைத்தளத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.

கணவனை மனைவி ஏளனப்படுத்தி சிரித்தாலும் அவருடைய குழந்தை தனது அப்பாவின் தியாகத்தை புரிந்து கொண்டது தான் தற்போது பலரையும் வியக்க வைத்துள்ளது.

போதும் இத்தோடு முடித்துக் கொள்ளலாம்.. இனி மகாலட்சுமி பேச்சை எடுக்காதீங்க.. ரவீந்தருக்கு என்னாச்சு?போதும் இத்தோடு முடித்துக் கொள்ளலாம்.. இனி மகாலட்சுமி பேச்சை எடுக்காதீங்க.. ரவீந்தருக்கு என்னாச்சு?

சிந்திக்க வைக்கும் நிகழ்ச்சி

சிந்திக்க வைக்கும் நிகழ்ச்சி

சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் ஒரு சில நிகழ்ச்சிகள் திடீரென்று ரசிகர்களை யோசிக்கவும், சிந்திக்கவும் வைத்து விடும். அந்த வகையில் ஒரு நிகழ்ச்சியாக நீயா நானா நிகழ்ச்சியும் பல நேரங்களில் நிரூபித்து வருகிறது. ஏற்கனவே ஒரு சில வாரங்களுக்கு முன்புதான் வீட்டுக்கு வேலைக்கு அமர்த்திய பணிப்பெண்கள் மற்றும் வேலைக்கு அமர்த்திய குடும்பப் பெண்கள் இருவர்களுக்கும் உள்ள உரையாடல்கள் சமூக வலைத்தளத்தில் பரபரப்பு ஏற்படுத்தி சமுதாயத்தில் இன்னும் இருக்கும் ஏற்றத்தாழ்வுகளையும், பாகுபாடுகளையும் தோலுரித்து காட்டியிருந்தது. இந்த நிலையில் தற்போது ஒரு பாசமான நிகழ்வும் பலருடைய கவனத்தை ஈர்த்து வருகிறது.

உணர்ச்சிகரமான நிகழ்வு

உணர்ச்சிகரமான நிகழ்வு

ஒரு சில இடங்களில் இப்படித்தான் நடக்கிறது என்பதை சமூக வலைத்தளத்தின் மூலமாக தான் தெரிந்து கொள்ள முடிகிறது. நீயா நானா நிகழ்ச்சியில் அதிகமாக சம்பளம் வாங்கும் மனைவிகள் மற்றும் குறைவாக சம்பளம் வாங்கும் கணவர்களுக்கு இடையே நடக்கும் விவாதங்கள் தான் நடந்து வருகிறது. இதில் யாரும் எதிர்பார்க்காத வகையில் உணர்ச்சிகரமான ஒரு செயல் நடைபெற்று அனைவரையும் சிந்திக்க வைத்துள்ளது. என்னதான் படித்து பெரிய நிலையில் இருந்தாலும் தனது கணவரை இளக்காரமாக பார்க்கும் பெண்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் என்பதை தற்போது காட்டியுள்ளது என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

மட்டம் தட்டும் மனைவி

மட்டம் தட்டும் மனைவி

அரசு துறைகளில் பெண்களுக்கு அதிகமான இட ஒதுக்கீடு கொடுப்பதால் ஆண்களின் கனவு வாழ்க்கை பறிபோகிறது என்று தற்போது சமூக வலைத்தளத்தில் ஆண்கள் போர் கொடியை தூக்கிக் கொண்டிருக்கும் நேரத்தில், ஆண்களுக்கு மேலும் ஒரு வலு சேர்க்கும் மாதிரி தற்போதைய நீயா நானா நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. அதில் ஒரு மனைவி படித்து வேலையில் இருப்பவராக இருக்கிறார். அவருடைய கணவர் படிக்காதவராக இருக்கிறார். இந்த நிலையில் பல பேர் பார்க்கும் ஒரு நிகழ்ச்சியில் தன்னுடைய கணவருக்கு படிக்க தெரியாது, குழந்தையின் பிராக்ரஸ் கார்டில் கையெழுத்து போடுவதற்கு ஒரு மணி நேரமாக பார்த்துக் கொண்டிருக்கிறார் என்று கணவரை மட்டம் தட்டிக் கொண்டிருக்கிறார்.

சூப்பர் அப்பா

சூப்பர் அப்பா

நடுநிலையாக தீர்ப்பு சொல்லும் கோபிநாத் இந்த நிகழ்வுக்கு என்ன சொல்ல போகிறார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில், அந்த கணவரிடம் நீங்கள் எதற்காக அவ்வளவு நேரம் பார்த்துக் கொண்டிருக்கிங்க என்று கேட்டிருக்கிறார். அப்போது அந்த கணவர் நான் வாங்காத மார்க்கை என்னுடைய மகள் வாங்கி இருக்கிறார். அவர் ஆசைப்பட்டதை நான் படிக்க வைக்க வேண்டும் என்று உருக்கமாக பேசியிருக்கிறார். இந்த நிலையில் நிகழ்ச்சியில் கடைசியில் கொடுக்கும் பரிசினை அந்த ஆணிற்கு கோபி நாத் கொடுக்கிறார். அதை அவருடைய குழந்தையின் கையில் கொடுத்து இருக்கிறார். அப்போது கோபிநாத் சூப்பர் அப்பாவுக்கு நீ பரிசு கொடு என்று பரிசை கொடுக்க வைத்திருக்கிறார் .

குழந்தையின் அறிவான பேச்சு

குழந்தையின் அறிவான பேச்சு

மகளின் கையால் பரிசை வாங்கிய மகிழ்ச்சியில் அந்த தந்தை தனது மகளின் கன்னத்தில் முத்தங்களை பொழிந்து இருக்கிறார். இதை பார்க்கும் போதே பலருடைய கண்களிலும் கண்ணீர் எட்டிப் பார்க்கத் தொடங்கி விட்டதாம். அது மட்டுமல்லாமல் அதற்கு அடுத்து உன்னுடைய தந்தை தோற்றுப் போய்விட்டார்கள் என்று எல்லோரும் சொல்லிக் கொண்டு இருக்காங்க, உங்க அப்பா ஒரு பெரிய வெற்றியாளர் என்று கோபிநாத் சொன்னதும், அந்தப் போட்டியாளரின் மகள் அவர் நிஜமாகவே தோக்கல என்று கண்ணீரோடு கூறியிருக்கிறார். அப்போது கோபிநாத் அந்த குழந்தையை கட்டி அணைத்து, ஏன்? அப்பா தோற்கல.!!? என்று கேட்டிருக்கிறார். அவரு எனக்காக தான் எல்லாமே கஷ்டப்படுகிறார். என்று மழலை மொழியில் குழந்தை சொல்லும் போது அரங்கத்தில் இருந்தவர்களுக்கு மட்டுமல்லாமல் அந்த வீடியோவை பார்ப்பவர்களுக்கும் கண்ணீர் வருகிறதாம்.

English summary
A child reveals his love for his father to Gopinath's questions on Vijay TV's show Neeya Nana. Now more and more wishes for the child are increasing on social media.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X