Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தன்னுடைய தோழியின் மறைவுக்கு... நிகழ்ச்சியில் கதறி அழுத யாஷிகா.. பீல் பண்ணும் ரசிகர்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்த வருடத்தில் தான் அனுபவித்த மோசமான நிகழ்வு பற்றி யாஷிகா ஆனந்த் நிகழ்ச்சி ஒன்றில் கதறி அழுதுள்ளார்.

தன்னுடைய நெருங்கிய தோழியின் இழப்பு அவருக்கு பெருத்த அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

சமூக வலைத்தளத்தில் ஆக்டிவ்

சமூக வலைத்தளத்தில் ஆக்டிவ்

யாஷிகா ஆனந்த் என்று சொன்னாலே சமூக வலைத்தளத்தில் இளைஞர்களின் மனது பட்டாம்பூச்சியாக பறந்துவிடும் அவருடைய பெயருக்கும் அவருடைய அழகுக்கும் ரசிகர்களின் மத்தியில் எப்போதுமே தனி வரவேற்பு இருந்துகொண்டிருக்கிறது. கிளாமர் போட்டோவில் ரசிகர்களின் மனதை கவர்ந்து இழுத்து எப்போதுமே கனவுக்கன்னியாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர் இந்த வருடத்தில் பெரிய இழப்புகளை சந்தித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் இறப்பின் நுனி வரை சென்று திரும்பிய இவர் பலருக்கும் ரோல் மாடலாக இருந்து வருகிறார். இவருடைய உயிர் தோழியின் பிரிவு அவரை அதிகமாக பாதித்துள்ளதாம்.

எதிர்பாராத விபத்து

எதிர்பாராத விபத்து

வெள்ளித்திரையிலும், சின்னத்திரையிலும் அதிகமாக கலக்கிக்கொண்டு பிஸியாக இருந்த யாஷிகா ஆனந்த் சமூக வலைத்தளத்தை விட்டுவைக்காமல் அடிக்கடி கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்தி இளைஞர்களை தன் வசத்தில் வைத்துக் கொண்டிருந்தார். எதிர்பாராத விதமாக இந்த வருடத்தில் இவருடைய வாழ்க்கையில் பெரிய மாற்றம் ஏற்பட்டுவிட்டது. தன்னுடைய நெருங்கிய தோழியோடு காரில் சென்று கொண்டிருக்கும் போது இவருக்கு ஏற்பட்ட விபத்தில் இவருக்கு உடல் அளவில் அதிக பாதிப்புகள் ஏற்பட்டு இருந்தது. அதே நேரத்தில் தன்னுடைய தோழியை இழந்துவிட்டார்.

கதறி அழுத யாஷிகா

கதறி அழுத யாஷிகா

அடிக்கடி நண்பர்களோடு சுற்றுலா சென்று வரும் இவர் இந்த ஒரு நினைவை மறக்க முடியாது என்றும் அதை இப்போது நினைத்தாலும் என்னால் தாங்கிக்கொள்ள முடியாது. நான் ஒவ்வொரு நாளும் என்னுடைய தோழியை கொன்றுவிட்டேன் என்று குற்ற உணர்ச்சியோடு வாழ்ந்து வருகிறேன். அவளை நினைக்கும் போதெல்லாம் எனக்கு பெரிய குற்ற உணர்ச்சி ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது என்று நிகழ்ச்சி ஒன்றில் யாஷிகா ஆனந்த் கதறி அழுது கொண்டிருக்கிறார். இதைப் பார்த்ததும் ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.

Recommended Video

    YASHIKA is BACK | First Exclusive Selfie Interview after Discharge, Yashika Anand
    கவலை அதிகரிக்கின்றது

    கவலை அதிகரிக்கின்றது

    பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக யாஷிகா ஆனந்த் கலந்து கொண்டதும் அவருடைய வாழ்க்கை இனி மாறிவிடும் என்று அதிகமாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்த பிறகு அதிகமாக இவருக்கு வாய்ப்புகள் வரவில்லை என்றாலும் கிடைத்த வாய்ப்புகளை விடாமல் தன்னுடைய திறமையை காட்டி வருகிறார். திரைப்படங்களில் மட்டும் தான் கவர்ச்சி இல்லை சமூக வலைத்தளத்திலும் அழகு பதுமையாக போட்டோஷீட்டில் பிஸியாக இருந்த இவர் சமீபகாலமாக உடல்நிலை குறையில்லாமல் இருந்ததால் இவர் மீது அனுதாபம் இந்த நிலையில் மீண்டும் தற்போது உடல்நிலை சரியானதும் தன்னுடைய பணியைத் தொடங்க ஆரம்பித்திருக்கிறார். இவருடைய தீவிரமான ரசிகர்கள் இவருக்கு ஆதரவு கொடுத்து வருகிறார்கள். ஆனால் நெட்டிசன்கள் இவரைப் பற்றி தற்போதும் கலாய்த்து வருகின்றனர். அதுவும் அதிகமாக கவலையை அதிகரித்து வருகிறது என்று கூறியிருக்கிறார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+