திருவிளக்கில் ஒளிரும் மகாலட்சுமி - எந்த திசையில் தீபம் ஏற்றினால் என்ன பலன்
விளக்கில்லாமல் எந்த வழிபாடும் நடக்காது. இந்துக்கள் எண்ணெய் ஊற்றி விளக்கேற்றினால் கிறித்துவர்கள் மெழுகுவர்த்தி ஏற்றுகின்றனர். தீபம் மத நல்லிணக்கத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. தீபம் ஏற்றுவதை முறையாக
Recommended Video

சென்னை: விளக்கேற்றி வழிபடுவதன் மூலம் இறைவனின் அருளை எளிதில் பெறலாம். தீபங்கள் நமது கர்ம வினையை நீக்குகின்றன. தெய்வங்களை அமைதிபடுத்தக்கூடியவை. விளக்கேற்றை முறையாக ஏற்ற வேண்டியது அவசியம்.
தீபம் எற்றுவதற்கு உகந்த நேரமாக கருதப்படுவது அதிகாலை பிரம்ம முகூர்த்தமான நான்கு மணி முதல் ஆறு மணி வரையும் மாலை ஆறு மணி முதல் ஏழு மணி வரை தீபம் ஏற்றி வழிபடலாம்.
காலையில் ஏற்றி வழிபட்டால் அனைத்து செயல்களும் நன்மையைத் தரும், மற்றும் பெரும் புண்ணியம் உண்டாகும். முன்வினைப் பாவம் விலகும். மாலையில் 4.30-6க்கு இடையே உள்ள பிரதோஷ வேளை சிவபெருமானுக்கும், நரசிம்ம மூர்த்திக்கும் மிகவும் உகந்தவை. இவ்வேளையில் தீபமேற்றினால் திருமணத்தடை, கல்வித்தடை நீங்கும் என்பது ஐதீகம் மற்றும் வீட்டில் லெட்சுமி வாசம் செய்வாள்.
மண்ணால் செய்யப்பட்ட விளக்கில் தீபம் ஏற்றினால் பீடை விலகும். வெள்ளி விளக்கில் தீபம் ஏற்றினால் திருமகள் அருள் கிடைக்கும். பஞ்ச லோக விளக்கில் தீபம் ஏற்றினால் தேவதை வசியம் உண்டாகும். வெண்கல விளக்கில் தீபம் ஏற்றினால் ஆரோக்கியம் உண்டாகும். இரும்பு விளக்கில் தீபம் ஏற்றினால் சனி கிரக தோஷம் விலகும்.

குல தெய்வ அருள்
பசு நெய்யில் தீபம் ஏற்றினால் மோட்சம் கிடைக்கும். பாவங்கள் தீரும். மகாலட்சுமி அருள் கிடைக்கும். விளக்கெண்ணையில் தீபம் ஏற்றினால் குடும்ப சுகம் சகல சவுபாக்கியமும் கிடைக்கும். இலுப்பை எண்ணெய் தீபத்தினால் குல தெய்வ அருள் கிடைக்கும். முன்னோர் சாபங்கள், முற்பிறவிப் பாவங்கள் நீங்கும். நல்லெண்ணெய் தீபத்தினால் கடன்கள் தீரும். நோய்கள் நீங்கும். தேங்காய் எண்ணெய் தீபத்தினால் திருமணத்தடை நீங்கும்.

மூன்று வகை எண்ணெய்கள்
முக்கூட்டு எண்ணெய் எனப்படும் பசு நெய், விளக்கெண்ணெய், இலுப்பை எண்ணெய் ஆகியவைகளை சமஅளவில் கலந்து தீபம் ஏற்றுவதால் தேவஆகர்ஸ்ணம் குடும்பத்தில் அமைதி உண்டாகும். செல்வம் சேரும். கடலை எண்ணை, கடுகு எண்ணை, பாமாயில் போன்றவைகளைக் கொண்டு ஒருபோதும் விளக்கேற்றவே கூடாது. மனக்கவலையையும், தொல்லைகளையும், பாவங்களையுமே பெருக்க வல்லவை இந்த எண்ணையின் தீபங்கள்.

ஐஸ்வர்யம் தரும் 5 முக தீபம்
ஒரு முக தீபம் ஏற்றினால் நினைத்த செயல்கள் நடக்கும். இரு முக தீபம் ஏற்றினால் குடும்ப ஒற்றுமை கிட்டும். முன்று முக தீபம் ஏற்றினால் புத்திரதோஷம் நீங்கும். நான்கு முகம் ஏற்றினால் பசு,பூமி,செல்வம், சர்வபீடை நிவர்த்தி ஆகும். ஐந்து முகம் ஏற்றினால் சகலநன்மையும்,ஐஸ்வர்யம் பெருகும்.

முன்னோர் சாபம் நீங்கும்
திரிகள் புதிதாகவும், கெட்டியானதாகவும் இருக்க வேண்டும். திரிகளும்,பயன்களும் குத்துவிளக்கிற்கு பயன்படுத்தும் திரிகளாலும் பயன்கள் மாறுபடுகின்றன. பருத்திப் பஞ்சு வைத்து தீபம் ஏற்றினால் குடும்பம் சிறக்கும், நற்செயல்கள் நடக்கும். வாழைத் தண்டின் நாரில் தீபம் ஏற்றினால் முன்னோர் சாபம், தெய்வ குற்றங்கள் நீங்கி அமைதி உண்டாகும். தாமரைத்தண்டு நூலில் தீபம் ஏற்றினால் முன்வினைப் பாவங்கள் நீங்கி, நிலைத்த செல்வம் கிடைக்கும். வெள்ளை எருக்கம்பட்டையில் தீபம் ஏற்ற செல்வம் பெருகும். புதிய மஞ்சள் துணியில் தீபம் ஏற்ற நோய்கள் குணமாகும்.
புதிய சிவப்பு வண்ண துணியில் தீபம் ஏற்ற குழந்தையின்மை தொடர்பான தோஷம் நீங்கும். புதிய வெள்ளை துணி திரியில் தீபம் ஏற்ற அனைத்து நற்பலன்களும் கிடைக்கும்.

கிழக்கு திசை விளக்கு
கிழக்கு திசை நோக்கி விளக்கேற்றுவது துன்பம் நீங்குதல், குடும்ப அபிவிருத்தி ஏற்படும். மேற்கு திசையில் விளக்கேற்றுவது கடன், தோஷம் நீங்கும்.
வடக்கு நோக்கி தீபம் ஏற்றினால் திருமணத்தடை அகலும். தெற்கு நோக்கி விளக்கேற்றக்கூடாது அப்படி ஏற்றினால் மரண பயம் ஏற்படும்.
பொதுவாக தீபம் ஏற்றினால் எண்ணெய் முழுவதும் தீர்ந்து, தீபம் தானாக அணையும் வரை விட்டு விடக் கூடாது. இது கெடுதலைக் கொடுக்கும்.
பூவால் குளிர்விக்கலாம் அல்லது குச்சியால் குளிர்விக்க வேண்டும்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications