திருமலையில் ஈஸியா சுற்றி வரலாம்.. கூகுள் மேப் வசதியுடன் க்யூ ஆர் கோடு ஸ்கேன்.. தேவஸ்தானம் அசத்தல்
திருமலை: திருமலையில் உள்ள இடங்களை பக்தர்கள் எளிமையாக தெரிந்து கொள்ளும் வகையில் 'க்யூ ஆர் கோடு ஸ்கேன்' வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பிரம்மோற்சவத்தில் பரிசோதனை முறையில் இந்த புதிய திட்டம் செயல்படுத்தப்படும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து தினமும் லட்சக்கணக்கில் பக்தர்கள் வருகின்றனர். பிரம்மோற்சவ விழா இன்னும் சில நாட்களில் தொடங்க உள்ளதால் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
திருமலைக்கு ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் தங்கும் அறைகள் உள்ள இடத்துக்கு செல்லவும் விரும்பிய பகுதிகளை பார்க்கவும், சுவாமி தரிசனம், லட்டு பிரசாதம், உணவு கூடம் போன்றவற்றுக்கு செல்ல வழி தெரியாமல் தவிக்கின்றனர்.

க்யூ ஆர் கோடு வசதி
இதையடுத்து பக்தர்கள் வசதிக்காக திருமலை-திருப்பதி தேவஸ்தான பொறியாளர்கள், மக்கள் தொடர்புத்துறையினர் இணைந்து 'க்யூ ஆர் கோடு ஸ்கேன்' உருவாக்கியுள்ளனர். திருமலையில் உள்ள தனது அலுவலகத்தில் செயல் அதிகாரி தர்மா இந்த புதிய திட்டத்தை தொடங்கி வைத்தார்.

கூகுள் மேப்
இதன்படி, திருமலைக்கு வரும் பக்தர்கள் ஆன்ட்ராய்டு போன் இருந்தால் யாரிடமும் கேட்காமல் எளிதாக ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்லும் விதமாக இந்த க்யூ ஆர் கோடு ஸ்கேன் செய்தால் உரிய இடத்தை கூகுள் மேப் வசதியுடன் செல்லும் விதமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வழி காட்டும் வசதி
திருமலையில் உள்ள தேவஸ்தானத்துக்கு தொடர்பான 40 துறைகள், விருந்தினர் இல்லங்கள், பக்தர்கள் ஓய்வறை, வைகுண்டம் காம்பளக்ஸ், லட்டு கவுண்டர்கள், மருத்துவமனை, காவல் நிலையங்கள், விஜிலென்ஸ் அலுவலகங்கள் போன்ற வழித்தடங்களை வழங்கவும் திருமலை பஸ் நிலையத்தில் இறங்கும் பக்தர்கள் அந்த பகுதியில் வைக்கப்பட்ட க்யூ ஆர் கோடில் அவர்கள் செல்ல விரும்பும் இடத்தை ஸ்கேன் செய்தால் கூகுள் மேப் வசதியுடன் சுலபமாக வழி காண்பிக்கும்.

பிரம்மோற்சவம்
இந்த சேவை பக்தர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். திருமலையில் ஸ்ரீவாரி சேவா திட்டத்தில் சேவை செய்ய பல்வேறு மாநிலங்களில் இருந்து வரும் தன்னார்வலர்களுக்கும் இந்த க்யூ ஆர் கோடு ஸ்கேன் வசதி பயனுள்ளதாக இருக்கும். எனவே, பிரம்மோற்சவத்தில் பரிசோதனை முறையில் இந்த புதிய திட்டம் செயல்படுத்தப்படும் என்று செயல் அதிகாரி தர்மா தெரிவித்துள்ளார்.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications