ஆஃப்ர் லெட்டர் போதாது வேலை வேண்டும்: ஹெச்.சி.எல்.லை கண்டித்து என்ஜினியர்கள் உண்ணாவிரதம்

ஹெச்.சி.எல். நிறுவனம் கடந்த 2011ம் ஆண்டு பல்வேறு பொறியியல் கல்லூரிகளுக்கு சென்று தேர்வு நடத்தி மாணவர்களை தேர்ந்தெடுத்தது. இறுதியாண்டில் இருந்த அவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.3.25 லட்சம் சம்பளம் என்று கூறி பணி நியமன கடிதத்தையும் அப்பொழுதே அளித்தது. அந்த மாணவ, மாணவியர் 2012ல் படித்து முடித்திவிட்ட பிறகு உறுதியளித்தபடி அவர்களுக்கு வேலை வழங்கப்படவில்லை.
சுமார் ஓராண்டுக்கு மேல் ஆகியும் அவர்களுக்கு வேலை கொடுக்கப்படவில்லை. பொறுத்துப் பொறுத்துப் பார்த்த மாணவர்கள் கடந்த வாரம் போராட்டத்தில் குதித்தனர். இந்நிலையில் கடந்த சனிக்கிழமை ஹெச்.சி.எல். நிறுவனத்தால் வேலை வழங்கப்படாமல் இழுத்தடிக்கப்படும் என்ஜினியர்களில் 50 பேர் பெங்களூரில் உள்ள சுதந்திர பூங்காவில் ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் இருந்தனர்.
இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் ஓசூர், சென்னை, ஹைதராபாத், அஸ்ஸாம் மற்றும் கர்நாடகாவின் பிற பகுதிகளில் இருந்தும் வந்த என்ஜினியர்கள் கலந்து கொண்டனர்.
ஒவ்வொரு முறையும் போராட முயலும் போது வேலை அளிப்பதாக ஹெச்.சி.எல். உறுதியளிக்கும். ஆனால் வாக்குறுதியை காப்பாற்றவில்லை. இந்நிலையில் சனிக்கிழமை அதிகாலை 3 மணிக்கு கூட வேலை அளிப்பதாக இமெயில் வந்தது. ஆனால் இம்முறையும் நம்பி ஏமாற விரும்பவில்லை அதனால் தான் போராட்டம் நடத்தினோம் என்றும் ஒரு என்ஜினியர் தெரிவித்தார்.
இந்நிலையில் ஹெச்.சி.எல். தலைவர் ஷிவ் நாடார் இந்தப் பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காணுமானு ஹெச்.ஆர். மேனேஜர்களுக்கு உத்தரவிட்டுள்ளதாகத் தெரிகிறது.
அண்மையில் ஹெச்.சி.எல். ஹெச்.ஆர். தலைவர் பிரித்வி ஷெர்கில் வெளியிட்ட யூடியூப் போஸ்ட்டில் 2012ம் ஆண்டு பேட்ச் மாணவர்களில் 1,000 பேர் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதமே வேலைக்கு எடுக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications