2 லெட்டர்.. ஒரு புதிய பெயர்.. ஆட்சி அமைக்க காங். வகுத்த 3 பிளான்கள்.. இன்றே செயல்படுத்த திட்டம்!
லோக்சபா தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிந்த பின் ஆட்சி அமைப்பதற்காக பாஜக மூன்று முக்கிய திட்டங்களை வகுத்துள்ளது.
Recommended Video
டெல்லி: லோக்சபா தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிந்த பின் ஆட்சி அமைப்பதற்காக பாஜக மூன்று முக்கிய திட்டங்களை வகுத்துள்ளது.
லோக்சபா தேர்தல் முடிவுகள் இன்று காலை வெளியாகிறது. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்க உள்ளது.
இன்று மாலைக்குள் இந்தியாவின் அடுத்த பிரதமர் யார் என்று தெரிந்தவிடும். இந்த நிலையில் லோக்சபா தேர்தலுக்காக காங்கிரஸ் கட்சி முக்கிய திட்டங்களை போட்டு வைத்துள்ளது.
என்ன திட்டம்
இந்த நிலையில் இந்த லோக்சபா தேர்தலில் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி அதிக இடங்களை வெல்லும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஆனால் தேசிய ஜனநாயக கூட்டணி மற்ற பெரும்பான்மை பெற வாய்ப்பில்லை என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கருதுகிறது. இதனால் 22 எதிர்க்கட்சிகள் ஒன்றாக சேர்ந்து ஆட்சி அமைக்க திட்டமிட்டுள்ளது.
திட்டம் 1
இதற்காக காங்கிரஸ் மூன்று திட்டங்களை வைத்துள்ளது. தற்போது நட்பாக இருக்கும் 21 கட்சிகளை மட்டுமில்லாமல் புதிய கட்சிகளையும் கூட்டணியில் சேர்க்க ராகுல் திட்டமிட்டுள்ளார். இதனால் காங்கிரஸ் கட்சியின் கூட்டணிக்கு தேசிய முற்போக்கு கூட்டணி என்ற பெயருக்கு பதிலாக வேறு பெயர் வைக்க இருக்கிறார்கள்.
திட்டம் இரண்டு
இதன் மூலம் கொள்கை மாறுபாடு உள்ள கட்சிகளையும் கூட்டணியில் சேர்க்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. அதன்பின் 25+ கட்சிகள் சேர்ந்து ஆட்சி அமைக்க கடிதம் அளிக்க உள்ளனர். குடியரசுத் தலைவரிடம் இன்று மாலை இதற்காக கடிதம் அளிக்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.
திட்டம் மூன்று
அடுத்த மூன்றாவதாக இன்று இரவு குடியரசுத் தலைவரிடம் காங்கிரஸ் இன்னொரு கடிதம் வழங்கும். அது பிரதமரை தேர்வு செய்து, இவருக்குத்தான் எங்கள் ஆதரவு என்று ஆதரவு கடிதமாக அளிக்கப்படும் என்று கூறப்படுகிறது. ஆட்சியை அமைப்பதற்காக காங்கிரஸ் மூத்த அபிஷேக் சிங்வி இந்த திட்டத்தை வகுத்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.