டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு.. கார்த்தி சிதம்பரத்தின் ரூ.22 கோடி சொத்துக்கள் முடக்கம்.. அதிரடி!

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கார்த்தி சிதம்பரத்துக்கு சொந்தமான ரூ.22 கோடி சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி இருக்கிறது.

Google Oneindia Tamil News

டெல்லி: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கார்த்தி சிதம்பரத்துக்கு சொந்தமான ரூ.22 கோடி சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி இருக்கிறது.

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு மீண்டும் வேகம் எடுத்து இருக்கிறது. தற்போது காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரமின் மகன் கார்த்தி சிதம்பரம் காங்கிரஸ் வேட்பாளராக சிவகங்கை தொகுதியில் போட்டியிடுகிறார்.

தேர்தலை பரபரப்பில் இருக்கும் இவருக்கு எதிராக அமலாக்கத்துறை தற்போது நடவடிக்கை எடுத்துள்ளது. இது கார்த்தி சிதம்பரத்திற்கு அதிர்ச்சி அளித்துள்ளது.

தேர்தல்.. தமிழகத்தில் எங்கு அதிக பேர் போட்டி.. எத்தனை பெண்கள் போட்டி.. ஆச்சர்ய புள்ளிவிவரம்! தேர்தல்.. தமிழகத்தில் எங்கு அதிக பேர் போட்டி.. எத்தனை பெண்கள் போட்டி.. ஆச்சர்ய புள்ளிவிவரம்!

என்ன வழக்கு

என்ன வழக்கு

ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனமானது இந்திராணி முகர்ஜி, பீட்டர் முகர்ஜி ஆகியோருக்கு சொந்தமானதாகும். இது மும்பையை சேர்ந்த நிறுவனம். இது தொடர்பான வழக்கில் ப. சிதம்பரமும், கார்த்தி சிதம்பரமும் விசாரிக்கப்பட்டு வருகிறார்கள்.

வழக்கு பதிவு

வழக்கு பதிவு

2007ம் ஆண்டு, மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் இருந்தபோது, ரூ.305 கோடி வெளிநாட்டு நிதியைப் பெறுவதற்கு வெளிநாட்டு முதலீட்டு ஊக்குவிப்பு வாரியம் அனுமதி வழங்கியதில் முறைகேடு நடந்துள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.ஐஎன்எக்ஸ் மீடியா கருப்பு பண முறைகேடு தொடர்பாக கார்த்தி சிதம்பரம் மீது வழக்கு பதியப்பட்டு இருக்கிறது.

குற்றப்பத்திரிக்கை தாக்கல்

குற்றப்பத்திரிக்கை தாக்கல்

இதில் 307 கோடி வரை முறைகேடு நடைபெற்று இருக்கலாம் என்று கணக்கிடப்பட்டு உள்ளது. இது தொடர்பான வழக்கில் சிபிஐ கார்த்தி சிதம்பரத்திற்கு நோட்டிஸ் அனுப்பி இருந்தது. அதேபோல் கார்த்தி சிதம்பரம் சிபிஐயால் பல முறை விசாரிக்கப்பட்டார். இந்த வழக்கில் ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் இருவர் மீதும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது.

முடக்கியது

முடக்கியது

இந்த நிலையில்தான் தற்போது ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கார்த்தி சிதம்பரத்துக்கு சொந்தமான ரூ.22 கோடி சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி இருக்கிறது.தேர்தல் நேரத்தில் இந்த நடவடிக்கை எடுக்கபபட்டு இருப்பது கார்த்தி சிதம்பரத்திற்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

English summary
NX Media Case: Enforcement Department freezes Karti Chidambaram's Rs.22 Cr properties.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X