போக்சோ கேஸ்களில் சர்ச்சை தீர்ப்பு.. புஷ்பா கணேடிவாலாவை நிரந்தர நீதிபதியாக்கும் பரிந்துரை நிராகரிப்பு
டெல்லி: போக்சோ சட்டம் தொடர்பாகப் பல சர்ச்சைக்குரிய தீர்ப்புகளை வழங்கிய மும்பை ஐகோர்ட் நீதிபதி புஷ்பா கணேடிவாலாவை நிரந்தர நீதிபதியாக்கும் பரிந்துரையை உச்ச நீதிமன்ற கொலீஜியம் 2ஆவது முறையாக நிராகரித்துள்ளது.
மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் கிளையில் நீதிபதியாக உள்ளவர் புஷ்பா கணேடிவாலா. இவர் கடந்த 2007இல் மாவட்ட நீதிபதியாகத் தனது பயணத்தைத் தொடங்கினார்.
கடந்த 2019 பிப்ரவரி 8ஆம் தேதி மும்பை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதியாகவும் இவர் நியமிக்கப்பட்டார். அடுத்தாண்டு பிப்ரவரி மாதத்துடன் இவர் மீண்டும் மாவட்ட நீதிபதி பதவிக்குத் திரும்ப உள்ளார்.

உச்ச நீதிமன்றம் நிராகரிப்பு
பொதுவாக உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்படுபவர் மீண்டும் மாவட்ட நீதிமன்றத்திற்குத் திரும்ப அனுப்பப்படுவது என்பது மிக மிக அரிதாகவே நடக்கும் நிகழ்வு. இருப்பினும், போக்சோ வழக்குகளில் சர்ச்சைக்குரிய தீர்ப்புகளை வழங்கியதால் புஷ்பா கணேடிவாலாவை நிரந்தர நீதிபதியாக்கும் பரிந்துரையை உச்ச நீதிமன்ற கொலீஜியம் நிராகரித்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் போக்சோ வழக்கு ஒன்றில் இவர் வழங்கிய தீர்ப்பு நாடு முழுவதும் சர்ச்சையைக் கிளப்பியது.

சர்ச்சை தீர்ப்பு
மகாராஷ்டிரா மாநிலத்தில் 12 வயது சிறுமியின் உடலை சீண்டியதாக இளைஞர் ஒருவர் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த புஷ்பா கணேடிவாலா, "குற்றம்சாட்டப்பட்ட நபர் சிறுமியின் ஆடைக்கு மேலே உடலைச் சீண்டினால், அது போக்சோ சட்டத்தின்கீழ் குற்றமாகாது. உடலுறவு கொள்வதைத் தவிர, தோலோடு தோல் தொடர்பு ஏற்பட்டால் மட்டுமே போக்சோ சட்டத்தின் கீழ் வரும்" என்று தீர்பு அளித்துப் பரபரப்பைக் கிளப்பினார்.

நிராகரிப்பு
அதேபோல அதற்கு முன்பும் மற்றொரு வழக்கில், சிறுமியின் கையைப் பிடித்திருப்பதும், பேன்ட் 'ஜிப்' திறந்திருப்பதும் போக்சோ சட்டத்தில் குற்றமாகாது என கூறியிருந்தார். இப்படி பெண் குழந்தைகளுக்கு எதிரான வழக்குகளில் தொடர்ந்து சர்ச்சைக்குரிய தீர்ப்புகளை வழங்கி வந்தார். இந்தச் சூழலில் புஷ்பா கணேடிவாலாவை நிரந்தர நீதிபதியாக்கும் பரிந்துரையை உச்ச நீதிமன்ற கொலீஜியம் நிராகரித்துள்ளது.

என்ன காரணம்
போக்சோ போன்ற முக்கிய வழக்குகளைக் கையாள்வது தொடர்பாக அவருக்குக் கூடுதலாகப் பயிற்சி தேவை என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. நீதிபதி புஷ்பா கணேடிவாலாவை நிரந்தர நீதிபதியாக்கும் பரிந்துரையை உச்ச நீதிமன்ற கொலீஜியம் நிராகரித்துள்ளது இது 2ஆவது முறையாகும். ஏற்கனவே ஜனவரி மாதமும் புஷ்பா கணேடிவாலாவை நிரந்தர நீதிபதியாக்கும் பரிந்துரையை உச்ச நீதிமன்ற கொலீஜியம் நிராகரித்திருந்தது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications