'கடன் தவணை அவகாசம்'.. 'நாங்கள் பொருளாதார நிபுணர்கள் அல்ல'.. தலையிட முடியாது.. உச்ச நீதிமன்றம்
டெல்லி: கொரோனா 2வது அலையை காரணம் காட்டி வங்கி மற்றும் நிதி நிறுவனங்களில் கடன் தவணை செலுத்த அவகாசம் வழங்க முடியாது.. உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
இந்த விவகாரத்தில் தலையிட உச்ச நீதிமன்றம் விரும்பவில்லை என்றும், தாங்கள் பொருளாதார நிபுணர்களும் கிடையாது,. எந்த உத்தரவும் பிறப்பிக்க விரும்பவில்லை என்றும் கூறி மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.
கொரோனா பரவலின் முதல் அலையின் போது முழு ஊரடங்கு நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்டது. இதன் காரணமாக மத்திய அரசு, வங்கி மற்றும் நிதி நிறுவனங்களில் வாங்கிய கடன்களின் தவணையை செலுத்த 6 மாதம் அவகாசம் அளித்தது. அந்த ஆறு மாத காலத்தில் கடன் கட்டாதவர்களின பட்டியல் சிபிலும் சேர்க்கப்படவில்லை.

ஊரடங்கு
எனவே தற்போது கொரோனா 2வது அலையால் நாடு முழுவதும் அதிக பாதிப்பு ஏற்பட்டு இருப்பதால் பல மாநிலங்களில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முதல் அலையைவிட இரண்டாவது அலை பொருளாதார ரீதியாகவும், உடல் ரீதியாகவும் மோசமான பாதிப்பை பல குடும்பங்களில் ஏற்படுத்தி உள்ளது,.

அவகாசம் இல்லை
இதனால் மீண்டும் கடன் தவணை செலுத்த 6 மாத கால அவகாசம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. ஆனால் இதுவரை மத்திய அரசோ, ரிசர்வ் வங்கியோ எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.

அவகாசம் கோரி வழக்கு
இந்நிலையில் வழக்கறிஞர் விஷால் திவாரி என்பவர் கடந்த வாரம் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அவர் தனது மனுவில், "கொரோனா 2வது அலை பாதிப்பால் இந்தியாவில் ஒரு கோடி பேர் வேலை இழந்துள்ளனர். பண புழக்கமும் இல்லை. எனவே வங்கி கடன் தவணை செலுத்துவதற்கு புதிய கால அவகாசத்தை மக்களுக்க வழங்க உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்,

உத்தரவு பிறப்பிக்க முடியாது
இந்த மனுவை நீதிபதிகள் அசோக் பூஷன், எம்.ஆர்.ஷா அமர்வு நேற்று விசாரித்தது. இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், "கொரோனா 2வது அலையை காரணம் காட்டி வங்கி கடன் தவணையை செலுத்துவதற்கு புதிய கால அவகாசம் வழங்க உத்தரவிட முடியாது. இந்த விவகாரத்தில் எந்த உத்தரவையும் பிறப்பிக்க விரும்பவில்லை. இதில் தலையிட நாங்கள் பொருளாதார நிபுணர்கள் இல்லை. எனவே மனு தள்ளுபடி செய்யப்படுகிறது" என்றார்.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications