For Daily Alerts
Just In
கேரளாவில் ஆட்சியை பறிகொடுக்கிறது காங்.- மீண்டும் இடதுசாரிகள் ஆட்சி: இந்தியாடுடே எக்ஸிட்போல்
திருவனந்தபுரம்: கேரளாவில் ஆளும் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பறிகொடுக்கும் என்றும் இடதுசாரிகள் மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமருவர் என்றும் இந்தியா டுடே எக்ஸிட்போல் முடிவுகள் தெரிவிக்கின்றன.
கேரளாவின் 140 தொகுதிகளுக்கான தேர்தல் இன்று ஒரே கட்டமாக நடைபெற்று முடிந்தது. இந்த வாக்குப் பதிவு முடிவடைந்த நிலையில் இந்தியாடுடே- மை ஆக்ஸிஸ் இணைந்து தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகளை வெளியிட்டுள்ளன.
இதில் ஆளும் காங்கிரஸ் ஆட்சியை பறிகொடுக்கும் என்றும் இடதுசாரிகள் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றுவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாடுடே- மை ஆக்ஸிஸ் எக்ஸிட் போல் முடிவுகள்:
இடதுசாரிகள் முன்னணி: 88-101
காங்கிரஸ் கூட்டணி: 38-48
பாஜக அணி: 0-3
இதர கட்சிகள்: 1-4
English summary
According to India Today exit poll Left wins easily in Kerala; Congress party loses another state.