கண்ணீர் வடிக்கும் கங்கை.. மிதக்கும் உடல்கள்.. புதைக்கப்படும் சடலங்கள்.. மயான பூமியான கரையோரங்கள்!
லக்னோ: உத்தர பிரதேசத்தின் உன்னாவ் மாவட்டத்தில் கங்கை கரையோரம் ஏராளமான உடல்கள் புதைக்கப்பட்டு வருகின்றன.
Recommended Video
பா.ஜ.க.வின் யோகி ஆதித்யநாத் ஆட்சி புரியும் உத்தர பிரதேசத்தில் நாளுக்கு நாள் கொரோனா வீரியம் அதிகமாகிக் கொண்டே செல்கிறது.
மருத்துவமனைகளில் படுக்கைகள் தட்டுப்பாடு, ஆக்சிஜன் தட்டுப்பாடு என்று உள்ளூர் பாஜக எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களே அரசை கூறும் அளவுக்கு நிலைமை மோசமாக உள்ளது.

கங்கைக்கு வந்த சோதனை
இது தவிர உத்தர பிரதேசத்தில் புண்ணிய நதியாம் கங்கையில் தொடர்ந்து மிதந்து வரும் உடல்கள் மக்களிடம் அச்சத்தை கூட்டியுள்ளன. உத்தரபிரதேச மாநிலம் பல்லியா மாவட்டத்தில் பாயும் கங்கை ஆற்று பகுதியில் சமீபத்தில் 45 உடல்கள் மிதந்தன. கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில் இது கொரோனாவால் இறந்தவர்களின் உடல்களாக இருக்குமோ? இதன் மூலம் நோய் மேலும் பரவுமோ? என்ற பீதி அனைவரையும் பிடித்துள்ளது.

மயான பூமியான கங்கை
இந்த நிலையில் கங்கையில் தொடர்ந்து உடல்கள் மிதந்து வருவதால் உத்தர பிரதேசத்தில் உன்னாவ் மாவட்டத்தில் கங்கை கரையோரங்கள் மயான பூமியாக மாறி வருகின்றன. உள்ளூர்வாசிகள் கரை ஒதுங்கி வரும் உடல்களையும், அங்கு உயிரிழப்பவர்களின் உடல்களையும் கரைகளில் புதைத்து வருகின்றனர். உன்னாவ் மாவட்டத்தில் கங்கை கரையோரம் காணும் இடமெல்லாம் உடல்கள் புதைக்கப்பட்ட மேடாக காட்சியளிக்கிறது.

உடல்கள் புதைப்பு
இது பற்றி தகவல் அறிந்ததும் மாவட்ட அதிகாரிகள் அங்கு விரைந்து சென்று புதைக்கப்பட்ட உடல்களை தோண்டி எடுத்து அதே இடத்தில் ஆழமான குழிகளை தோண்டி புதைத்து வருகின்றனர். இது தொடர்பாக மாவட்ட கலெக்டர், ' எனக்கு தகவல் கிடைத்ததும், நான் அதிகாரிகளை சம்பவ இடத்திற்கு அனுப்பினேன். விசாரணையை மேற்கொள்ளுமாறு அவர்களிடம் கேட்டுள்ளேன், நாங்கள் நடவடிக்கை எடுப்போம்" என்று கூறினார்.

கொரோனா நோயாளிகளா?
பொதுவாக இந்து முறைப்படி உடல்களை எரிப்பது வழக்கம். ஆனால் எரிப்பதற்கு தேவையான விறகுகள் பற்றாக்குறை காரணமாக உடல்களை புதைத்து இருக்கலாம் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். அங்கு புதைக்கப்பட்ட பல உடல்கள் அருகிலுள்ள கிராமங்களில் உயிரிழந்த கொரோனா நோயாளிகளா என்று கேட்டபோது, ''இதுவரை இவர்கள் கொரோனாவால் இறந்தவர்களா? என்பது தெரியவில்லை. இது பற்றி விசாரணை நடந்து வருகிறது என்று அதிகாரிகள் கூறினார்கள்.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications