நான் ரெடி.. பாண்டே ரெடியா..?- கெட்டவன் கேட்ட கேள்விக்கு திமுக எம்.எல்.ஏவின் நறுக் பதில்!
சென்னை: நீங்க எப்போது சார் டிவிக்குப் பேட்டி கொடுக்கப் போறீங்க என்று கேட்கப்பட்ட கேள்விக்கு நான் ரெடி. பாண்டே ரெடியா என்று கேட்டுள்ளார் திமுக எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன்.
முதலில் முன்னாள் டிஜிபி நடராஜ் குழப்பம்.. அதைத் தொடர்ந்து வந்தது நாஞ்சில் சம்பத் குழப்பம்.. இரண்டு பேருக்குமே முதல் எழுத்து "ந".. ஒருவருக்கு குறில்.. இன்னொருவருக்கு நெடில்.. அவ்வளவுதான் வித்தியாசம். அடுத்து யார் சிக்கப் போவது என்ற பெரும் எதிர்பார்ப்பில் பலரும் ஸ்மார்ட் போனும் கையுமாக காத்துள்ளனர்.. மீம்ஸ் போட்டு ஜமாய்க்க.
எப்போ, எங்க வேண்டுமென்றாலும் interview கொடுக்க நான் ரெடி.💪🏻பாண்டே ரெடியா?👈🏻 https://t.co/PMs3W6Fdw8
— J Anbazhagan (@JAnbazhagan) January 3, 2016
இந்த நிலையில் திமுக எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகனின் டிவிட்டர் பக்கத்தில் கெட்டவன் என்பவர், நீங்க எப்ப சார் பேட்டி கொடுக்கப் போறீங்க என்று கேட்டு கலாய்த்திருந்தார். அதற்கு அன்பழகன் சற்றும் அசராமல், எப்போ, எங்க வேண்டுமென்றாலும் இன்டர்வியூ கொடுக்க நான் ரெடி.. பாண்டே ரெடியா என்று பதில் கேள்வி கேட்டுள்ளார்.
காக்கா முட்டையின் கருத்து
கட்சியில் உள்ள ஒவ்வொருத்தரும்,தன் சுயத்தை இழக்காமல் செயல்பட முடியும் என்பதே திமுகவின் சிறிய பலவீனம் ஆனால் பெரிய பலம்.https://t.co/iCwZZls33R
— காக்கா முட்டை! ! (@girikaalan) January 4, 2016
அன்பழகனின் இந்த டிவிட்டை மேற்கோள் காட்டி காக்கா முட்டை என்பவர் போட்டுள்ள டிவிட்டில், கட்சியில் உள்ள ஒவ்வொருத்தரும்,தன் சுயத்தை இழக்காமல் செயல்பட முடியும் என்பதே திமுகவின் சிறிய பலவீனம் ஆனால் பெரிய பலம் என்று கூறியுள்ளார்.
சூப்பரப்பு!