ஜெயிலில் தொடரும் நளினி, முருகனின் உண்ணாவிரதம்.. உடல் சோர்வு.. மருத்துவர்கள் கண்காணிப்பு
நளினி, முருகன் இருவரும் உண்ணாவிரத போராட்டத்தை இன்றும் நடத்தி வருகிறார்கள்.
வேலூர்: தங்களை விடுதலை செய்யும் வரை போராட்டத்தை கைவிடப்போவதில்லை என்று முருகனும், நளினியும் ஜெயிலில் தீர்க்கமாக தெரிவித்து இன்றும் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். இதனால் இருவரும் உடல்சோர்வுடன் காணப்படுகின்றனர்.
ராஜீவ் கொலை வழக்கில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக தண்டனை அனுபவித்துவரும் 7 பேர் விடுதலை குறித்த விவகாரத்தில் ஆளுநர் இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை.
எனவே கடந்த 5 மாதங்களாக காலந்தாழ்த்தி வருவதாலும், தங்களை உடனே விடுதலை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தியும் நளினி சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளார். இது தொடர்பாக ஆளுநர் பன்வாரிலாலுக்கும் நளினி கடிதம் எழுதியதுடன், இந்த முறை உண்ணாவிரதத்தை கைவிடப்போவது கிடையாது" என்று உருக்கமாக பதிவிட்டிருந்தார்.

இன்று 5-வது நாள்
இன்று நளினி 5-வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார். இதே கோரிக்கையை வலியுறுத்தி முருகன் இன்று 7-வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார். இரண்டு பேருமே சாப்பாடு கொடுத்தாலும் சாப்பிட மறுத்துவிட்டனர்.

சந்திப்பு இல்லை
அதேபோல, ஜெயிலில் வழங்கப்படும் அரிசி, பருப்பு, உள்ளிட்ட பொருட்களையும் இருவருமே வாங்க மறுத்துவிட்டனர். சிறை விதிகளின்படி, தொடர்ந்து சிறையில் சாப்பிடாமல் இருந்தால், அவர்களுக்கு சிறையில் வழங்கப்படும் சலுகைகள் ரத்தாகிறது என்றும் பார்வையாளர்கள் சந்திக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் சிறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. அவர்களது வக்கீலை தவிர வேறு யாரும் சந்திக்க முடியாது என்றும் சிறை நிர்வாகம் கூறியுள்ளது.

சலுகைகள் ரத்து
உண்ணாவிரதப் போராட்டத்தை இருவருமே கைவிட்டால் மட்டுமே மீண்டும் சலுகைகள் வழங்குவது குறித்து பரிசீலனை செய்ய முடியும் என சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேபோல உண்ணாவிரதத்தை கைவிடுமாறும் முருகன், நளினியுடன் சிறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.

மருத்துவர்கள் கண்காணிப்பு
இதனிடையே தொடர் உண்ணாவிரதம் இருந்து வருவதால், நளினி, முருகன் இருவருமே உடல்சோர்வாக காணப்படுவதாக சிறை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். எனினும் உடல்நல பாதிப்பு ஏற்பட்டால், கவனிக்க சிறை வளாகத்திலேயே சிகிச்சை அளிக்க அனைத்து ஏற்பாடுகளும் தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நளினி, முருகன் இருவருமே தங்கள் உண்ணாவிரத போராட்டத்தில் உறுதியாக இருப்பதால் சிறை வளாகம் பரபரப்பாக உள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications