முதல் ஆளாக வந்தார்.. கோடி கோடியாக அள்ளிக்கொடுத்தார்.. சுஷாந்த்சிங்கின் அந்த உதவியை மறக்க முடியுமா?
தற்கொலை செய்து கொண்டு பலியான பிரபல நடிகர் சுஷாந்த்சிங் கோடிக்கணக்கில் மக்களுக்காக உதவி செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மும்பை: தற்கொலை செய்து கொண்டு பலியான பிரபல நடிகர் சுஷாந்த்சிங் கோடிக்கணக்கில் மக்களுக்காக உதவி செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மக்களுக்கு உதவி செய்வதை தன்னுடைய குணங்களில் ஒன்றாக இவர் வைத்து இருந்தார்.
Recommended Video
பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த்சிங் தனது மும்பை வீட்டில் இன்று தற்கொலை செய்து கொண்டார். வீட்டு அறையில் தூக்கு மாட்டி இவர் தற்கொலை செய்து கொண்டார்.
சுஷாந்த்சிங் மரணம் தொடர்பாக பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். இந்தியா முழுக்க எல்லோருக்கும் இந்த சம்பவம் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மோடியை விமர்சித்த மூத்த பத்திரிகையாளர் வினோத் துவாவை கைது செய்ய சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை
உதவி செய்துள்ளார்
தற்கொலை செய்து கொண்டு பலியான பிரபல நடிகர் சுஷாந்த்சிங் கோடிக்கணக்கில் மக்களுக்காக உதவி செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தன்னுடைய ரசிகர்கள் மட்டுமின்று பல ஆயிரம் மக்களுக்கு நிதி உதவியும், உணவும் கொடுத்து இவர் உதவிகளை செய்துள்ளார். தனது ரசிகர்கள் மூலம் பல இடங்களில் ஏழை மக்களுக்கு உணவு பொருட்களை கொடுத்து உதவிகளை செய்து வந்தார். மும்பையில் லாக்டவுன் நேரத்தில் இவர் பலருக்கு உதவிகளை வழங்கி உள்ளார்.
கேரளா எப்படி
இவர் செய்த உதவிகளில் மறக்க முடியாதது என்றால் அது கேரளாவிற்கு வெள்ளத்தின் போது உதவியதுதான். கேரளாவில் வெள்ளம் ஏற்பட்ட போது அதை யாரும் பெரிதாக கண்டுகொள்ளவில்லை. தென்னிந்தியாவில் மட்டும் கேரள வெள்ளம் குறித்த செய்திகள் வந்தது. முக்கியமாக வடஇந்திய பிரபலங்கள் யாரும் கேரளாவில் ஏற்பட்ட வெள்ளத்திற்காக உதவி செய்யவில்லை.
உதவினார்
அதேபோல் சில மாதங்களில் நாகலாந்தில் வெள்ளம் வந்தது. அப்போதும் இவர் நாகலாந்து மக்களுக்காக உதவிகளை செய்தார். நாகலாந்து அரசுக்கு ஒரு கோடி ரூபாய் கொடுத்து உதவினார். யாருமே கவனிக்காத நாகாலாந்திற்கு கூட இவர் இவ்வளவு கோடியை அள்ளிக்கொடுத்து உள்ளார். ஆனால் தற்போது மன ரீதியாக உதவ யாரும் இல்லாத நிலையில் இவர் தற்கொலை செய்து கொண்டார்.
அடுத்து நாகலாந்து
அதேபோல் சில மாதங்களில் நாகலாந்தில் வெள்ளம் வந்தது. அப்போதும் இவர் நாகலாந்து மக்களுக்காக உதவிகளை செய்தார். நாகலாந்து அரசுக்கு ஒரு கோடி ரூபாய் கொடுத்து உதவினார். யாருமே கவனிக்காத நாகாலாந்திற்கு கூட இவர் இவ்வளவு கோடியை அள்ளிக்கொடுத்து உள்ளார். ஆனால் தற்போது மன ரீதியாக உதவ யாரும் இல்லாத நிலையில் இவர் தற்கொலை செய்து கொண்டார்.