கடுமையாகும் விதிகள்.. தெலுங்கானாவில் மே 7ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு.. முதல்வர் கேசிஆர் அதிரடி!
ஹைதராபாத்: கொரோனா பாதிப்பு காரணமாக தெலுங்கானாவில் மே 7ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதல்வர் கே. சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார்.
நாடு முழுக்க மத்திய அரசு மூலம் மே 3ம் தேதி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதில் ஏப்ரல் 20ம் தேதிக்கு பின் கொரோனா பரவல் குறைவாக உள்ள இடங்களில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்த நிலையில் தெலுங்கானாவில் கொரோனா நாளுக்கு நாள் தீவிரம் அடைய தொடங்கி உள்ளது. அங்கு கொரோனா காரணமாக 809 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். மொத்தம் அங்கு 186 பேர் குணமடைந்து உள்ளனர். மேலும் 605 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இதுவரை மொத்தம் 18 பேர் தெலுங்கானாவில் பலியாகி உள்ளனர். தெலுங்கானாவில் இறப்பு விகிதம் அதிகமாகி வருகிறது. ஹைதராபாத்தில் மட்டும் 448 பேர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் தெலுங்கானாவில் கொரோனா காரணமாக விதிமுறைகள் தீவிரமாக்கப்பட்டு உள்ளது.
அதன்படி தெலுங்கானாவில் மே 7ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதல்வர் கே. சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார். தெலுங்கானாவில் மே 7-ந் தேதி வரை லாக்டவுனை நீட்டிக்க அமைச்சரவை முடிவு செய்துள்ளதாக முதல்வர் அறிவித்துள்ளார்.
லாக்டவுனை தொடர்ந்து நீட்டிப்பது தொடர்பாக மே 5-ல் தெலுங்கானா அமைச்சரவை கூடி மேலும் முக்கிய முடிவுகளை எடுக்கும் என்று முதல்வர் அறிவித்துள்ளார். அதேபோல் அங்கு விதிமுறைகளை தீவிரமாக்க போவதாக அவர் அறிவித்துள்ளார்.
அதன்படி இன்று இரவில் இருந்து தெலுங்கானாவில் ஸ்விக்கீ, சோமேட்டோ உள்ளிட்ட உணவு டெலிவரிகளுக்கு காலவரையற்ற தடை விதிப்பதாக அறிவித்துள்ளார். அதேபோல் நாளை நாடு முழுக்க சில இடங்களில் ஊரடங்கு தளர்த்தப்பட உள்ளது. ஆனால் தெலுங்கானாவில் எங்கும் ஊரடங்கு தளர்த்தப்பட மாட்டாது என்று முதல்வர் கே.சி. ஆர் அறிவித்துள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications