4 மணி நேரமே தூக்கம்.. சரியா சாப்பிடுவதில்லை.. தீயாய் வேலை செய்யும் செந்தில் பாலாஜி.. !
அரவக்குறிச்சி: அரவக்குறிச்சி சட்டசபை தொகுதி இடைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் செந்தில் பாலாஜி, படு மும்முரமாக பாடுபட்டு வருகிறாராம். அவரது பிரச்சார வேகத்தைப் பார்த்து பரம்பரைத் திமுகவினரே அசந்து போய் நிற்கின்றனராம்.
அதிமுகவில் முக்கியமான தள கர்த்தராக திகழ்ந்தவர் செந்தில் பாலாஜி. இன்று தான் கற்று வைத்துள்ள மொத்த வித்தையையும் அரவக்குறிச்சியில் இறக்கி வைத்து வருகிறாராம் செந்தில் பாலாஜி.
தமிழகத்தில் மக்களவை தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் முடிந்துள்ள நிலையில், அரவக்குறிச்சி, சூலூர், திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய 4 தொகுதிகளுக்கும் வரும் ஞாயிற்றுக்கிழமை இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
Exclusive: 'பிரதமரை தீர்மானிக்கும் சக்தியாக அமமுக திகழும்'.. சி.ஆர்.சரஸ்வதி
அதீத கவனம்
இடைத்தேர்தலில் கணிசமான தொகுதிகளில் வெற்றிபெற்றால் மட்டுமே ஆட்சியை பிடிக்க முடியும் என்பதால் திமுக தேர்தலில் பணிகளில் அதீத கவனம் செலுத்தி வருகிறது.
திமுக - அமமுக போட்டி
இந்நிலையில் அரவக்குறிச்சியில் திமுக வேட்பாளராக போட்டியிட்டுள்ள செந்தில்பாலாஜிக்கு அதிமுக வேட்பாளர் செந்தில்நாதனும், அமமுக வேட்பாளர் சாகுல் ஹமீதும் கடும் டப் கொடுக்கிறார்களாம்.
அமமுக திடீர் சுறுசுறுப்பு
கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் வரை அமமுக வேட்பாளருக்கு தொகுதியில் வரவேற்பு இல்லாத நிலை இருந்ததாம்.ஆனால் அவர் கடைசி நேர வித்தை காட்டியதால் சாகுல் ஹமீதுக்கு அரவக்குறிச்சியில் மவுசு ஏறிவிட்டதாம்.
உஷாரான செந்தில் பாலாஜி
இதனால் திகைத்துப்போன செந்தில்பாலாஜி ஓய்வின்றி, உறக்கமின்றி தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளாராம். செந்தில்பாலாஜி ஆதரவாளர் ஒருவரிடம் நாம் பேசிய போது, ஒரு நாளைக்கு வெறும் 4 மணி நேரம் மட்டுமே செந்தில்பாலாஜி தூங்குகிறார்.
சாப்பாடு சரியில்லை
உணவும் முறையாக சாப்பிடாமல் பிரச்சாரத்தில் சுற்றுவதால் அவ்வப்போது உடல்நிலை மோசமாகிறது. தூக்கமின்மையோடு சுற்றுவதால் சில நேரங்களில் செந்தில்பாலாஜிக்கு தலைசுற்றலும் ஏற்படுகிறதாம். இருப்பினும் அதை சட்டை செய்யாமல் வெற்றியடைய வேண்டும் என்ற முனைப்போடு அவர் சுற்றுவதை பார்த்தால் எங்களுக்கு வியப்பு ஏற்படுகிறது என்கிறார் அவர்.