ரம்யா கிருஷ்ணனை பார்க்கும்போது என்னை பார்த்த மாதிரியே இருந்தது...உணர்ச்சிவசப்பட்ட ஐக்கி
சென்னை: ரம்யா கிருஷ்ணனை அருகில் பார்க்கும்போது கூலாக இருந்தது.
அப்படியே என்னை பார்த்தது போல இருந்தது என்று ஐக்கி கூறியுள்ளார்.
திருவண்ணாமலையில் மகா தீப தரிசனம் நிறைவு- அருணாச்சலேஸ்வரர் கோவிலில் அலைமோதிய பக்தர்கள்
ரம்யா கிருஷ்ணன் என்னை எலிமினேஷன் செய்ததால் எனக்கு பெரிய அளவில் பதட்டம் இல்லை என்று தன்னுடைய அனுபவத்தை சமூக வலைத்தளத்தில் ஐக்கி பகிர்ந்துள்ளார்.
மாற்றத்தில் மாட்டிக்கொண்ட ஐக்கி
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இதுவரைக்கும் இல்லாத வகையில் இந்த முறை எலிமினேஷன் நடைபெற்றுள்ளது. இதுவரைக்கும் தொகுப்பாளராக இருக்கும் கமல் தான் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறும் போட்டியாளரின் பெயரை கூறி எலிமினேஷன் செய்து வைப்பார். ஆனால் முதல்முறையாக இதில் ஏற்பட்ட மாற்றத்தில் மாட்டி இருப்பது ஐக்கி தான். ஐக்கியின் மனநிலை தற்போது எப்படி இருந்தது என்று தன்னுடைய அனுபவத்தையும் ரசிகர்களிடம் பகிர்ந்துள்ளார்.
சோகத்திலும் மாறாத குணம்
பிக் பாஸ் 5 வது சீசனில் ஒரு போட்டியாளராக அறிமுகமாகியிருக்கும் பாப் பாடகர் ஐக்கியின் வெளியேற்றம் அவருடைய ரசிகர்களை மிகவும் பாதித்துள்ளது. இவர் கடைசி வரைக்கும் இந்த நிகழ்ச்சியில் இருப்பார் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு நேற்றைய எலிமினேஷன் பெரிய அதிர்ச்சியையும், ஏமாற்றத்தையும் கொடுத்துவிட்டது. ஆனால் இதை மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்வதாக கூறியிருக்கிறார். தன்னுடைய ரசிகர்கள் இவ்வளவு நாட்களாக தனக்கு வாக்களித்து என்னை காப்பாற்றியதற்கு நன்றி கூறி உளளார். அதுமட்டுமல்லாமல் இந்த முறை அவர் வெளியேறி இருந்தாலும் எனக்கு அந்த அளவிற்கு வருத்தம் இல்லை என்று வழக்கமான சுறுசுறுப்போடு கூறியிருக்கிறார்.
ஆசை நிறைவேறவில்லை
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பு அதிகமாக மொபைல் போனில் மூழ்கியிருந்த ஐக்கி இந்த நிகழ்ச்சிக்கு பிறகு மொபைலை கையில் எடுத்ததும் பெரிய அளவில் ஈர்ப்பு எதுவும் எடுபடவில்லை என்று கூறியிருக்கிறார். ஆனால் தன்னுடைய ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்க வேண்டுமே என்றுதான் லைவில் வந்து ரசிகர்களுடன் தன்னுடைய அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டுள்ளார். அப்போது ரசிகர்கள் முதல் முறையாக கமலை மிஸ் பண்றீங்களா என்று கேட்டதற்கு ஆமாம் ரொம்பவே மிஸ் பண்ணுகிறேன். அதுவும் நான் வெளியேறும் நேரத்தில் கமல் பக்கத்தில் நின்று நிறைய பேச வேண்டும் அது ஆசைப்பட்டேன் ஆனால் அது நிறைவேறவில்லை என்று தன்னுடைய பீலிங்கை கொட்டியிருக்கிறார்.
வெளியேயும் மாறாத கேரக்டர்
அதுமட்டுமல்லாமல் முதல்முறையாக ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கும் போது நீங்கள் வெளியேறி இருப்பதால் என்ன மாதிரி ஃபீல் பண்ணுனீங்க?? என்று ரசிகரின் கேள்விக்கு நான் ரம்யா கிருஷ்ணன் மேடத்தை பார்க்கும்போது என்னையே பார்த்ததாக உணர்ந்தேன். அவருடைய இளமையும், சுறுசுறுப்பும் எனக்கு என்னை பிரதிபலிப்பதாக இருந்தது. அது மட்டுமல்லாமல் அவர் அருகில் இருக்கும் போது நான் கூலாக தான் இருந்தேன். பெரிய அளவில் வெளியே போகிறோம் என்று பதட்டம் எதுவும் ஏற்படவில்லை. ஜாலியாக நிகழ்ச்சியை விட்டு வெளியேறி இருக்கிறேன். ரசிகர்களின் அன்போடு மீண்டும் ரசிகர்களிடம் தொடர்பில் இருப்பேன் என்று அவருடைய வழக்கமான படபடப்போடு பேசியிருக்கிறார்.