For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

75. அரண்

By Staff
Google Oneindia Tamil News

ஆற்று பவர்க்கும் அரண்பொருள் அஞ்சித்தற்
போற்று பவர்க்கும் பொருள்.

(741)

விளக்கம்:

பகைவருக்கு அஞ்சாமல் மேற்சென்று போரிட வல்லவர்களுக்கு அரண் செல்வம்; அஞ்சி உள்ளே இருந்து தம்மை காத்துக் கொள்ள நினைப்பவருக்கும் அரண் செல்வம்.


மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற்
காடும் உடையது அரண்.

(742)

விளக்கம்:

நீலமணி போன்ற நீரினையுடைய அகழியும், வெளியான நிலப்பரப்பும், உயரமான மலையும், மர நிழலாற் செறிந்த காடும் கொண்டுள்ளதே, பாதுகாப்பான நல்ல அரண்.


உயர்வகலம் திண்மை அருமைஇந் நான்கின்
அமைவரண் என்றுரைக்கும் நூல்.

(743)

விளக்கம்:

உயரமும், அகலமும், உறுதியும், பகைவரால் நெருங்குவதற்கு அருமையும் என்னும் இந்நான்கும் சிறப்பாக அமைந்ததே அரண் என்று போரியல் நூல்கள் கூறும்.


சிறுகாப்பிற் பேரிடத்த தாகி உறுபகை
ஊக்கம் அழிப்பது அரண்.

(744)

விளக்கம்:

காக்க வேண்டும் இடத்தினால் சிறிதானதாகவும், உள்ளே பெரிய பரப்பை உடையதாகவும், பகைவரது மன ஊக்கத்தை முற்றிலும் அழிக்கவல்லதே நல்ல அரண் ஆகும்.


கொளற்கரிதாய்க் கொண்டகூழ்த் தாகி அகத்தார்
நிலைக்கெள்தாம் நீரது அரண்.

(745)

விளக்கம்:

பகைவராலே கைப்பற்றுவதற்கு அரியதாயும், தன்னிடத்தே கொண்டுள்ள உணவுப் பொருட்களை உடையதாயும், அகத்தாரது போர் நிலைக்கு எளியதாயும் அமைந்ததே அரண்.


எல்லாப் பொருளும் உடைத்தாய் இடத்துதவும்
நல்லாள் உடையது அரண்.

(746)

விளக்கம்:

அகத்தாருக்கு தேவையான எல்லாப் பொருட்களையும் உடையதாய், அழிவிடத்து உதவிக்காக்கும் நல்ல காவல் மறவர்களையும் கொண்டதாய் விளங்குவதே அரண்.


ணிற்றியும் ணிற்றா தெறிந்தும் அறைப்படுத்தும்
பற்றற் கரியது அரண்.

(747)

விளக்கம்:

சூழ்ந்து ணிற்றியும், திடீரெனத் தாக்கியும் வஞ்சனைகளாலே உள்ளிருப்பபோரை வசப்படுத்தியும் பகைவரால் கைப்பற்ற இயலாத அருமையுடையதே அரண்.


முற்றாற்றி முற்றி யவரையும் பற்றாற்றிப்
பற்றியார் வெல்வது அரண்.

(748)

விளக்கம்:

வந்து சூழந்துள்ள பகைவரது பெரும்படையையும், உள்ளிருப்போர் இடம் விட்டு பெயராமல் நிலைத்து நின்று வெல்லும் அமைப்பை உடையதே அரண்.


முனைமுகத்து மாற்றவர் சாய வினைமுகத்து
வீறெய்தி மாண்டது அரண்.

(749)

விளக்கம்:

முற்றுகையிட்ட பகைவர்கள் போர்முனையின் முகப்பிலேயே அழிந்துபோகுமாறு, போர்த் தொழிலில் வீறுபெற்றுச் சிறந்த காவல் மறவர்களையும் கொணடதே அரண்.


எனைமாட்சித் தாகியக் கண்ணும் வினைமாட்சி
இல்லார்கண் இல்லது அரண்.

(750)

விளக்கம்:

எத்தகைய பாதுகாவலை உடையதாய் இருந்தாலும், அரண் காக்கும் மறவர்கள் போர்வினைச் சிறப்பு இல்லாதவரானால், அந்த அரணும் பயனற்று அழிந்து போகும்.

அதிகாரங்கள்

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X