Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சிறகடிக்க ஆசை: ரோகிணியால் ஜெயிலுக்கு போகும் விஜயா.. மாஸ் காட்டிய முத்து மீனா! மனோஜின் நல்ல மாற்றம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் (Siragadikka Aasai serial April 1 Episode) சிறகடிக்க ஆசை சீரியலில் 2026 ஏப்ரல் ஒன்றாம் தேதிக்கான எபிசோடில், மனோஜ் குடும்பத்திற்காக உருப்படியான ஒரு முடிவை எடுத்திருக்கிறார். தான் இதுவரைக்கும் ரோகிணியால் பட்ட கஷ்டங்கள் குறித்து மனம் திறந்து பேச, அது விஜயாவிற்கு நிம்மதியை கொடுத்திருக்கிறது. என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.

Siragadikka Aasai serial Vijay TV

சிறகடிக்க ஆசை சீரியல் இன்றைய எபிசோடு

சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய (Siragadikka Aasai serial today episode) சிறகடிக்க ஆசை எபிசோடு ஆரம்பத்தில், அண்ணாமலை வீட்டுக்கு வந்த ஸ்வேதா, அந்த மகளிர் குழு பற்றி கேட்டு விசாரிக்க ஆரம்பிக்கிறார். பிறகு அவங்க நினைச்சாங்கன்னா நம்ம வீட்டு முன்னாடி ஒரு போராட்டம் நடத்துவாங்க அப்படி நடக்கும்போது போலீஸ் கூட வரும் அப்புறம் நியூஸ் சேனலில் எல்லாம் நம்ம குடும்பத்தை பத்தி பேசுவாங்க.. அது எவ்வளவு பெரிய விஷயமா மாறும் என்று சொல்லும்போது மனோஜ் ரொம்பவே பயப்படுகிறார். விஷயம் இவ்வளவு பெருசா போயிருச்சா என்று உள்ளுக்குள் பதட்டமாக இருக்கிறார்.

அதுக்குள்ளே ரோகிணி வீட்டு வாசலிலேயே நின்று போராட்டம் நடத்த ஆரம்பித்து விடுகிறார். ரோகினியுடன் மகளிர் மன்றத்தை சார்ந்த சிலரும் சேர்ந்து கோஷம் போட்டதால சூழ்நிலை மோசமா மாறுது. போலீஸும் வந்து விஜயாவை கைது பண்ணுறாங்கன்னு நிலைமை வருது. இதைப் பார்த்த மனோஜ் ரொம்பவே அதிர்ச்சி அடைந்து உடனே அந்த பெண் அதிகாரியை நேர்ல போய் பேசணும் என்று முடிவு பண்ணுறார்.

அடுத்ததாக முத்து, மீனா, மனோஜ் மூவரும் சேர்ந்து அந்த மகளிர் அதிகாரியை சந்திக்க போறாங்க. அங்கே போனதும், "ரோகிணியை அடிச்சு வெளியேற்றிய குடும்பம் நீங்கள்தானே?" என்று அதிகாரி நேரா கேக்கறாங்க. அதுக்கு முத்து அமைதியாக "இரு தரப்போட கதையும் கொஞ்சம் கேளுங்க மேடம்"என்று சொல்றார்.

Siragadikka Aasai serial Vijay TV

மனோஜ் எமோஷனல்

அதுக்கப்புறம் மனோஜ்க்கு வாய்ப்பு கிடைக்குது. முத்து முன்பே சொல்லி கொடுத்த மாதிரி, மனோஜ் முழு கதையையும் செண்டிமெண்டாக எமோஷனலுடன் பேச ஆரம்பிக்கிறான். பேசும்போதே கண்கலங்கிடுறார். அதை பார்த்த அந்த அதிகாரியும் அவர் சொல்றதை நம்ப ஆரம்பிக்கிறாங்க. உடனே "இவ்வளவு பொய் சொல்லிட்டாளா?" என்று ரோகிணி மேல் கோபப்படுறாங்க.

அந்த நேரத்துல ரோகிணி அங்கே வருகிறார். வந்த உடனே அந்த அதிகாரி அவளை சரமாரியாக திட்டி, "இனிமேல் உனக்கு நான் சப்போர்ட் பண்ண மாட்டேன்" என்று சொல்லி அனுப்பிடுறாங்க. நீ சொன்ன கதைகள் எல்லாம் இப்போதான் புரியுது என்று கடுமையா பேசுறாங்க. மீனாவும் அதே மாதிரி கோபத்துல "உன்னை கடவுள் சும்மா விடமாட்டார்" என்று சொல்லி அனுப்புகிறார்.

இதுக்கப்புறம் வீட்டுக்கு வந்து நடந்ததை முத்து, மீனா எல்லாருக்கும் சொல்லுறாங்க. அண்ணாமலை முத்துவை பாராட்டுறார். மனோஜிடம் "இனிமேலாவது ரோகிணி பக்கம் போகாதே, இன்னும் மோசமா ஏதாவது பண்ணுவா, நாம தான் ஜாக்கிரதையா இருக்கணும்" என்று எச்சரிக்கை கொடுக்கிறார்.

Siragadikka Aasai serial Vijay TV

ரோகிணி சபதம்

இன்னொரு பக்கம் ரோகிணி வீட்டில் தனியா உட்கார்ந்து எல்லா பிளானும் கெட்டுப்போச்சு என்று புலம்பிக்கிட்டு இருக்கிறார். அவளோட அம்மா வந்து என்னாச்சு என்று கேட்கும்போது, "இந்த முத்து, மீனா இருக்கிற வர நான் நல்லா இருக்க முடியாது" என்று கோபத்துல சொல்கிறார்.

Election 2026

அதை கேட்ட அவளோட அம்மாவும் வருத்தமாக "நாளுக்கு நாள் பிரச்சனை பெருசா போயிட்டு இருக்கு, அந்த வீட்டுல உன்னை யாரும் ஏத்துக்க மாட்டாங்க போல" என்று சொல்கிறார். அதை கேட்டதும் ரோகிணி ரொம்ப கடுப்பா, "அவங்க யாரு என்ன ஏத்துக்க? நான் அந்த வீட்டோட மருமகள் தான், மனோஜ் என் கணவர்... இதை யாராலும் மாற்ற முடியாது" என்று சபதம் எடுக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

மொத்தத்தில் இன்று எபிசோடு ரோகிணிக்கு பெரிய செட் பாக்காக இருந்தாலும், அவர் மனோஜ் குடும்பத்தை இன்னும் விடாமல் பிடிக்க போற மாதிரி கிளைமாக்ஸ் வச்சு முடிஞ்சது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+