முகப்பு
 » 
வி.எஸ்.அச்சுதானந்தன்

வி.எஸ்.அச்சுதானந்தன்

வி.எஸ்.அச்சுதானந்தன்

1923ம் ஆண்டு சங்கரன்- அக்கம்மா தம்பதிக்கு மகனாக ஆலப்புழாவில் பிறந்தார் அச்சுதானந்தன். இளம் வயதிலேயே தனது பெற்றோரை இழந்தார்.

வி.எஸ்.அச்சுதானந்தன் சுயசரிதை

1923ம் ஆண்டு சங்கரன்- அக்கம்மா தம்பதிக்கு மகனாக ஆலப்புழாவில் பிறந்தார் அச்சுதானந்தன். இளம் வயதிலேயே தனது பெற்றோரை இழந்தார். படிப்பையும் பாதியில் விட நேரிட்டது. 11வது வகுப்பு வரை மட்டுமே அவர் படித்துள்ளார். ஒரு டெய்லர் கடையில் வேலை பார்த்து தனது தம்பியையும் காப்பாற்ற வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார். பின்னர் கயிறு தயாரிக்கும் தொழிற்சாலையில் வேலைக்குச் சேர்ந்தார். தொழிற்சங்க நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார் அச்சுதானந்தன். அதுதான் அவரை அரசியலுக்கு இழுத்து வர முக்கியக் காரணமாக அமைந்தது. மக்கள் தலைவராக அவர் பின்னர் உருவெடுத்தார். அரசியலில் அவர் தனி முத்திரை பதித்தார். கேரள முதல்வராக 2006 முதல் 11 வரை பதவியில் இருந்தார். 2011ல் எதிர்க்கட்சித் தலைவரானார். இளம் வயதிலிருந்தே ஒழுக்கமான வாழ்க்கையை வாழ்ந்தவர் அச்சுதானந்தன். ஊழலுக்கு எதிரானவர். எதிலும் ஆழ்ந்த ஈடுபாடு காட்டுபவர். எளிமை விரும்பி. விவசாயிகளின் பிரச்சினைக்காக முன்நின்று குரல் கொடுப்பவர். சுதந்திரப் போராட்டத்திலும் பங்கேற்றுள்ளார். இதற்காக 1946ம் ஆண்டு சிறைக்குப் போயுள்ளார். கேரளாவில் 1970ல் நடந்த நில உரிமை போராட்டங்களில் கலந்து கொண்டார். 1967ம் ஆண்டு இஎம்எஸ் நம்பூதிரிபாட் அரசு கொண்டு வந்த நில சீர்திருத்தசட்டத்தை அமல்படுத்தக் கோரி போராட்டம் நடத்தப்பட்டது.

மேலும் படிக்க
By Briti Roy Updated: Tuesday, February 19, 2019, 01:51:58 PM [IST]

வி.எஸ்.அச்சுதானந்தன் தனிப்பட்ட வாழ்க்கை

முழுப் பெயர் வி.எஸ்.அச்சுதானந்தன்
பிறந்த தேதி 20 Oct 1923 (வயது 100)
பிறந்த இடம் ஆலப்புழா
கட்சி பெயர் Communist Party Of India (marxist)
கல்வி 5th Pass
தொழில் சமூக சேவை
தந்தை பெயர் சங்கரன்
தாயார் பெயர் அக்கம்மா
சமூக வலைதளங்கள் சமூக வலைதளங்கள்:

வி.எஸ்.அச்சுதானந்தன் நிகர மதிப்பு

நிகர மதிப்பு: ₹16.1 LAKHS
சொத்துக்கள்:₹16.1 LAKHS
கடன்கள்: N/A

வி.எஸ்.அச்சுதானந்தன் சுவாரசிய தகவல்கள்

மூணாரில் அரசு நிலத்தை ஆக்கிரமித்து அமைக்கப்பட்ட ரிசார்ட்டுகள், தேயிலைத் தோட்டங்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுத்தார். 2007 டிசம்பரில் 400 வருடம் பழமையான சபரிமலைக்கு சென்று, அங்கு சென்ற முதல் கம்யூனிஸ்ட் முதல்வர் என்ற சாதனையைப் படைத்தார். 84 வயதான அச்சுதானந்தன், எந்தவிதமான மருத்துவ உதவியையும் அப்போது எடுத்துக் கொள்ளாமல் அங்கு சென்று டாக்டர்களையே அசர வைத்தார். கேரளாவில் சாப்ட்வேர் எழுச்சிக்கு ஆதரவு கொடுத்து ஊக்குவித்தார். அவரது நடவடிக்கைகளுக்கு ரிச்சர்ட் ஸ்டால்மேன் முழு ஆதரவாக இருந்தார். 40 வருட அரசியல் வாழ்க்கையில், 5.6 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்துள்ளார். நான்கரை வருடம் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்துள்ளார்.

வி.எஸ்.அச்சுதானந்தன் அரசியலில் கடந்து வந்த பாதை

2016
  • மலம்புழா தொகுதியில் பாஜக வேட்பாளர் சி. கிருஷ்ணகுமாரை வீழ்த்தி மீண்டும் வெற்றி பெற்றார். முதல்வர் பதவிக்கும் அவர் போட்டியிட்டார். இருப்பினும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமை பினராயி விஜயனை முதல்வராக அறிவித்தது. கேரள நிர்வாக சீர்திருத்த ஆணையத்தின் தலைவராக அச்சுதானந்தன் பின்னர் யமிக்கப்பட்டார்.
2013
  • அச்சுதானந்தனின் நெருங்கி ஊழியர்களான கூடுதல் முதன்மைச் செயலாளர் வி.கே.சசிதரன், தனி உதவியாளர் ஏ.சுரேஷ், பிரஸ் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் ஆகியோர் பொலிட்பீரோவிலிருந்து நீக்கப்பட்டனர். இது பெரும் அரசியல் பிரச்சினையாக உருவெடுத்தது.
2011
  • 2011 தேர்தலிலும் மலம்புழாவில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் அச்சுதானந்தன். 2011 முதல் 2016 வரை கேரள எதிர்க்கட்சித் தலைவராக செயல்பட்டார்.
2006
  • 2006 சட்டசபைத் தேர்தல் அச்சுதானந்தனுக்கு திருப்புமுனையாக அமைந்தது. அத்தேர்தலில் மலம்புழா தொகுதியில் சதீசன் பேச்சேனியை 20,071 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார் அச்சுதானந்தன். அந்த வெற்றியைத் தொடர்ந்து கேரள முதல்வராக 2006ம் ஆண்டு மே 18ம் தேதி பதவியேற்றார். 2011 மே 14 வரை பதவியில் நீடித்தார்.
2001
  • மலம்புழா தொகுதியில் போட்டியிட்டு சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். காங்கிரஸ் கட்சியின் சதீசன் பச்சேனியை அவர் தோற்கடித்தார்.
1996
  • 1996 சட்டசபைத் தேர்தலில் மராரிகுளம் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் பி.ஜே. பிரான்சிஸை எதிர்த்து போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார் அச்சுதானந்தன்.
1991
  • மராரிகுளம் சட்டசபைத் தொகுதியில் வெற்றி பெற்று மீண்டும் சட்டசபைக்குள் நுழைந்தார் அச்சுதானந்தன். காங்கிரஸ் வேட்பாளர் டி.சுகதனை அவர் தோற்கடித்தார்.
1985
  • சிபிஎம் பொலிட்பீரோ உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இருப்பினும் கட்சி ஒழுங்கு நடவடிக்கை காரணமாக 2009ம் ஆண்டு அந்தப் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார்.
1980
  • கேரள மாநில சிபிஎம் கட்சியின் செயலாளரானார்.
1977
  • அம்பலப்புழா தொகுதியில் புரட்சிகர சோசலிச கட்சியின் வேட்பாளர் கே.கே. குமார பிள்ளையிடம் தோல்வியைத் தழுவினார். இது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு பெரும் பின்னடைவாக மாறியது.
1970
  • கேரள சட்டசபைக்கு அதே தொகுதியிலிருந்து மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த முறை புரட்சிகர சோசலிச கட்சியின் வேட்பாளர் கே. கே. குமார பிள்ளையை வீழ்த்தினார்.
1967
  • கேரள மாநில சட்டசபைக்கு அம்பலப்புழா தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார் அச்சுதானந்தன். காங்கிரஸ் வேட்பாளர் ஏ அச்சுதனை அவர் தோற்கடித்தார்.
1957
  • இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கேரள செயலகத்தில் உறுப்பினரானார்
1940
  • இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் தீவிர உறுப்பினராக செயல்பட்டார்
1938
  • தொழிற்சங்க நடவடிக்கைகள் மூலமாக அரசியலுக்கு வந்தவர் அச்சுதானந்தன். பின்னர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

வி.எஸ்.அச்சுதானந்தன் சாதனைகள்

அச்சுதானந்தன் எடுத்த முயற்சிகளால் ஐடி ஏற்றுமதியில் கேரள மாநிலம் பெரும் வளர்ச்சி அடைந்தது. தேசிய அளவிலான சராசரியையும் அது தாண்டி சாதனை படைத்தது. மலம்புழா சுற்றுலாத் தளத்தைை மேம்படுத்தியதில் அச்சுதானந்தன் முக்கிய பங்காற்றினார். அதேபோல கொல்லம் அஷ்டமுடி சுற்றுலா மேம்பாட்டுக்கும் அவர் வழி வகுத்தார். சட்டவிரோதமான லாட்டரி மாபியாவை ஒழித்துக் கட்டினார். கொல்லம், கொல்லம் டெக்னோ பார்க்கை உருவாக்கினார்.

அச்சுதானந்தன் காலத்தில்தான் இந்த ஐடி பார்க் உருவாக்கப்பட்டு கட்டமைக்கப்பட்டது. அப்போது அவர் ஐடி அமைச்சராக இருந்தார். மலம்புழா, அஷ்டமுடி உள்ளிட்ட கேரளாவின் பல்வேறு சுற்றுலாத் தலங்களை மேம்படுத்தியதும் அச்சுதானந்தன்தான்.

கேரள முதல்வராக அவர் மூணாறில் அரசு நில ஆக்கிரமிப்பு ஒழிப்பு உள்ளிட்ட பல நடவடிக்கைகளை எடுத்துள்ளார். மூணாறில் ரிசார்ட்டுகள் நடத்தி வருவோராலும், டாடா டீ நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு பன்னாட்டு நிறுவனங்களாலும் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த நிலங்களை அவர் மீட்டார்.

கொச்சி எம்ஜி சாலையில் ஆக்கிரமிப்பு அகற்றம், திருட்டு வீடியோ ஒழிப்பு, லாட்டரி மாபியா ஒழிப்பு ஆகியவை மற்ற சாதனைகள். முன்னாள் அமைச்சர் ஆர். பாலகிருஷ்ண பிள்ளையின் ஊழலுக்கு எதிராக அவர் பெரும் போராட்டமே நடத்தினார். அவருக்கு தண்டனை பெற்றுத் தரும் வரையில் அவர் ஓயவில்லை. 2013ம் ஆண்டு பிரவேசி எக்ஸ்பிரஸ் விருதுள் விழாவில் அவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது கொடுக்கப்பட்டது.

Disclaimer: The information provided on this page is sourced from various publicly available platforms including https://en.wikipedia.org/, https://sansad.in/ls, https://sansad.in/rs, https://pib.gov.in/, https://affidavit.eci.gov.in/ and the official websites of state assemblies respectively. While we make every effort to maintain the accuracy, comprehensiveness and timeliness of the information provided, we cannot guarantee the absolute accuracy or reliability of the content. The data presented here has been compiled without consideration of the objectives or opinions of individuals who may access it.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X