Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சுப்ரமணியன்சாமி

சுப்ரமணியன்சாமி
பொருளாதார மற்றும் புள்ளியியல் வல்லுநரும், இந்திய அரசியல்வாதியான டாக்டர். சுப்ரமணியன்சாமி, தற்போது மாநிலங்களவை உறுப்பினராக உள்ளார்.
By Moumi Majumdar | Tuesday, February 19, 2019, 01:36:47 PM [IST]

சுப்ரமணியன்சாமி சுயசரிதை

பொருளாதார மற்றும் புள்ளியியல் வல்லுநரும், இந்திய அரசியல்வாதியான டாக்டர். சுப்ரமணியன்சாமி, தற்போது மாநிலங்களவை உறுப்பினராக உள்ளார். இவர் திட்டக்குழு உறுப்பினராகவும், சந்திரசேகர் அரசில் மத்திய அமைச்சராகவும் இருந்தார். ஜனதா கட்சியின் நிறுவனர்களில் ஒருவரான சுப்பிரமணியசாமி, அக்கட்சியை பாஜகவுடன் இணைக்கும் முன்பு 1990 முதல் 2013 வரை அதன் தலைவராக இருந்தார். இவர் 1974 முதல் 1999 வரை மக்களவைக்கு 5 முறை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

மேலும் படிக்க

சுப்ரமணியன்சாமி தனிப்பட்ட வாழ்க்கை

முழுப் பெயர் சுப்ரமணியன்சாமி
பிறந்த தேதி 15 Sep 1939 (வயது 86)
பிறந்த இடம் மயிலாப்பூர், சென்னை, தமிழ்நாடு
கட்சி பெயர் Bharatiya Janta Party
கல்வி Doctorate
தொழில் போராசிரியர், கல்வியாளர், பொருளாதார வல்லுநர்
தந்தை பெயர் சீதாராமன் சுப்ரமணியன்
தாயார் பெயர் பத்மாவதி
துணைவர் பெயர் ரோக்ஸானா
துணைவர் தொழில் வழக்கறிஞர்/இல்லத்தரசி
குழந்தைகள் 2 மகள்(கள்)
மதம் இந்து
இணையதளம் NIL

சுப்ரமணியன்சாமி நிகர மதிப்பு

நிகர மதிப்பு
₹1.75 CRORE
சொத்துக்கள்
₹1.75 CRORE
கடன்கள்
N/A

சுப்ரமணியன்சாமி சுவாரசிய தகவல்கள்

மாபெரும் 2ஜி அலைகற்றை ஊழலை வெளிப்படுத்தியதில் முக்கிய காரணியாக இருந்தார் சுப்பிரமணியசாமி. உலகின் மிகவும் கடினமான மொழியான சீன மொழியை ஓராண்டிற்குள் கற்க வேண்டும் சாவலை ஏற்று, வெறும் 3 மாதங்களில் அதை முடித்து தனது திறமையை மெய்பித்தார். இந்து வம்சாவளியில் இருந்து வந்ததாக இசுலாமியர்கள் ஒப்புக்கொள்ளவில்லை எனில் அவர்களின் வாக்குரிமையை பறிக்க சுப்பிரமணியசாமி பரிந்துரைத்ததால், அவர் கற்பித்த 2 பொருளாதார பாடங்களை பாடத்திட்டத்தில் இருந்து ஹார்வர்டு பல்கலைகழக நீக்கியதன் காரணமாக அப்பல்கலைகழகத்தை விட்டு வெறியேறினார் சாமி.சட்டத்துறையில் சாமி பயிற்சிபெற முக்கிய பங்காற்றினார் அவரது மனைவி ரோக்ஸான்னா. கொச்சியில் உள்ள ஸ்கூல் ஆப் கம்யூனிகேசன் அண்ட் மேனேஜ்மெண்ட் ஸ்டடீஸ்-ன் சேர்மேனாக உள்ள சுப்பிரமணியசாமி, 1963ல் ஐக்கியநாடுகள் சபையின் பொருளாதார வல்லுநராகவும், 1986ல் உலகவங்கியின் ஆலோசகராகவும் இருந்தார்.

சுப்ரமணியன்சாமி அரசியலில் கடந்து வந்த பாதை

  • 2016: மாநிலங்களவையின் நியமன உறுப்பிரானார் சுப்பிரமணியசாமி.
  • 2013: ஜனதா கட்சியை நிறுவியவர்களில் ஒருவராகவும், 2013 வரை அதன் தலைவராக இருந்த சுப்பிரமணியசாமி, தனது கட்சியை பாஜகவுடன் இணைத்தார்.
  • 2012: 2ஜி வழக்கில் பிரதமருக்கு எதிரான சுப்பிரமணியசாமியின் வழக்கை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. இவ்வழக்கில் சிபிஐஆல் கைதுசெய்யப்பட்ட ஆ.ராசா, 15 மே 2012ல் ஜாமீன் பெற்றார். இறுதியில் 21 டிசம்பர் 2017 ஆ.ராசா உள்ளிட்ட குற்றஞ்சாற்றப்பட்ட அனைவரையும் விடுவித்து தீர்ப்பளித்தது சிபிஐ சிறப்பு நீதிமன்றம்.
  • 2008: 2ஜி அலைக்கற்றை வழக்கு தொடர்பாக அப்போதைய தொலைதொடர்பு அமைச்சர் ஆ.ராசா மீது வழக்குதொடர அனுமதிகோரி, பிரதமர் மன்மோகன்சிங் அவர்களுக்கு 5 கடிதங்கள் எழுதினார்.
  • 1998: தமிழ்மாநில காங்கிரஸ் வேட்பாளர் ஏ.ஜி.எஸ். ராம்பாபுவை தோற்கடித்து மதுரை நாடாளுமன்ற உறுப்பினரானார். மேலும் துணை சட்டமன்ற உறுப்பினர் குழு, பாதுகாப்புக்குழு மற்றும் அதன் துணைக்குழு, நூலக குழு, மத்திய விமானபோக்குவரத்து துறை ஆலோசனை குழு போன்றவற்றின் உறுப்பினராகவும் இருந்துள்ளார்.
  • 1994: 1994 முதல் 1996 வரை தொழிலாளர் தரநிலைகள் மற்றும் சர்வதேச வர்த்தக குழு உறுப்பினராகவும் பணியாற்றினார்.
  • 1990: 1990 முதல் 91 வரை திட்டக்குழு உறுப்பினராகவும், மத்திய வர்த்தக மற்றும் சட்ட அமைச்சராகவும் பணியாற்றினார். 1990ல் ஜனதா கட்சியின் மத்திய பாராளுமன்ற குழு தலைவராக இருந்தார்.
  • 1988: உத்திரபிரதேசத்தில் இருந்து மீண்டும் மாநிலங்களவை உறுப்பினராகி, 1994 வரை அப்பதவியில் தொடர்ந்தார்.
  • 1980: மீண்டும் மும்பை வடகிழக்கு தொகுதியில் ஜனதா கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.
  • 1977: பம்பாய் வடகிழக்கு தொகுதியில் காங்கிரஸின் குல்கர்னி ராஜாராம் எனும் ராஜகோபலை தோற்கடித்து நாடாளுமன்ற உறுப்பினரானார்.
  • 1974: ஜன சங்க கட்சியின் சார்பாக உத்திரபிரதேசத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினரான சுப்பிரமணியசாமி, இரு ஆண்டுகள் அப்பதவியில் இருந்தார்.
  • 1960s: 1960களின் இறுதியில் சர்வோதயா இயக்கத்தில் இணைந்து தனது அரசியல் பயணத்தை துவங்கினார் சுப்பிரமணியசாமி.
  • : நாட்டில் நெருக்கடிநிலை அமலில் இருந்தபோது, ஜனதாதள் கட்சியை துவங்கியவர்களில் இவரும் ஒருவர்.

முந்தைய வரலாறு

  • 2011: 2011 வரை ஹார்வர்டு பல்கலைகழகத்தில் பொருளாதார பாடங்களை கோடைகாலத்தில் கற்பித்தார்
  • 1980–82: ஐஐடி கவுன்சிலின் ஆட்சிமன்ற குழுவில் பணியாற்றினார்.
  • 1977–80: டெல்லி ஐஐடியின் ஆட்சி மன்ற குழுவின் பணியாற்றினார்.
  • 1969: டெல்லி ஐஐடியில் சேர்ந்த சுப்பிரமணியசாமி, 1969 முதல் 1970வரை முழுநேர கணித பொருளாதார பேராசிரியராக இருந்தார்.
  • 1966: ஹார்வர்டு பல்கலைகழகத்தில் படிக்கும் போது, அங்கு கணிதத்தில் முனைவர் பட்டம் பெற பயின்றுவந்த பார்சி இனத்தை சேர்ந்த இந்திய பெண்ணான ரோக்ஸான்னாவை சந்தித்தார். அவர்கள் ஜூன் 1966ல் திருமணம் செய்துகொண்டனர்.
  • 1965: டெல்லி பல்கலைகழகத்தின் இந்து கல்லூரியில் இளங்கலை கணிதம்(ஹானர்ஸ்) பட்டம் பெற்ற சுப்பிரமணியசாமி, கொல்கத்தாவில் உள்ள இந்திய புள்ளியியல் நிறுவனத்தில் முதுகலை புள்ளியல் பட்டம் பெற்றார். பின்னர் ஹென்றிக்.எஸ்.ஹவ்தாக்கர்-ன் பரிந்துரையில் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் ராக்கேபெல்லர் ஸ்காலர்ஷிப்பில் படித்து, 1965ல் பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.

சுப்ரமணியன்சாமி சாதனைகள்

ஹார்வர்டு பல்கலைகழகத்தில் முனைவர் பட்டம் பெறும்போது சுப்பிரயணியசாமியின் வயது 24 மட்டுமே. நெருக்கடி நிலைக்கு பிறகு வெற்றிபெற்ற அரசியல்கட்சியின் நிறுவன உறுப்பினர்களில் ஒருவரான இவர், எதிர்கட்சிதலைவராக இருந்தபோதும் அமைச்சராக்கப்பட்டவர். இந்திய இந்துக்கள் கைலாஷ் மானசரோவர் செல்வதை சாத்தியமாக்கியதில் இவர் முக்கிய பங்காற்றினார். சீனாவை பற்றிய இவரது ஆய்வு மிக வலுவானது என்பதால், மன்மோகன்சிங் மற்றும் இந்திராகாந்தி இவரது கருத்துக்களை கேட்டனர். சேது சமுத்திர திட்டத்தின் பாதை இராமசேதுவை பாதிக்கும் என்பதால் அத்திட்டத்தை இரத்து செய்ய உச்சநீதிமன்றத்தில் மனு செய்து, அதில் வெற்றியும் பெற்றார். இவரது ஆய்வுக்கட்டுரையான "நோட்ஸ் ஆன் ப்ராக்டைல் கிராபிகல் அனாலிசில்" 1963ஆம் ஆண்டு எகனோமெட்ரிகாவில் வெளியானது. தனது 24 வயதில் ஹார்வர்டு பல்கலைகழகத்தில் முனைவர் பட்டம் பெற்ற சுப்பிரமணியசாமி, பால் சாமுவேலுடன் இணைந்து 1974ல் குறியீட்டு எண்களின் தத்துவம் தொடர்பான ஆய்வுக்கட்டுரையை வெளியிட்டனர். 1994ல் அப்போதைய பிரதமர் நரசிம்மாராவால், தொழிலாளர் தரம் மற்றும் சர்வதேச வர்த்தக குழுவின் தலைவராக சாமி நியமிக்கப்பட்டார். கேரளாவில் உள்ள எஸ்சிஎம்எஸ் கல்வி நிறுவனங்களின் நிர்வாக குழு தலைவராகவும் இருந்த இவர், சீனா, பாகிஸ்தான் மற்றும் இஸ்ரேல் உடனான இந்தியாவின் வெளியுறவுக்கொள்கை தொடர்பாகவும் எழுதியுள்ளார்.

Disclaimer:The information provided on this page is sourced from various publicly available platforms including https://en.wikipedia.org/, https://sansad.in/ls, https://sansad.in/rs, https://pib.gov.in/, https://affidavit.eci.gov.in/ and the official websites of state assemblies respectively. While we make every effort to maintain the accuracy, comprehensiveness and timeliness of the information provided, we cannot guarantee the absolute accuracy or reliability of the content. The data presented here has been compiled without consideration of the objectives or opinions of individuals who may access it.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+