இந்திராகாந்தி நாட்டை வழிநடத்திய மிகவும் மக்களை கவரக்கூடிய, சர்ச்சைக்குரிய அரசியல் தலைவராக இருந்தார். 1966 முதல் 1977 வரை மற்றும் 1980 முதல் 1984 ல் இறக்கும் வரை பிரதம மந்திரி பதவியில் இருந்தார்.
இந்திராகாந்தி நாட்டை வழிநடத்திய மிகவும் மக்களை கவரக்கூடிய, சர்ச்சைக்குரிய அரசியல் தலைவராக இருந்தார். 1966 முதல் 1977 வரை மற்றும் 1980 முதல் 1984 ல் இறக்கும் வரை பிரதம மந்திரி பதவியில் இருந்தார். இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் மகளான இவர்,சோகத்தினால் கட்டமைக்கப்பட்ட தனது வளர்ப்பின் காரணமாக தனிமை குழந்தை என வர்ணிக்கப்பட்டார். அவரின் வளர்ப்பு . இளம் வயதிலேயே தாயை இழந்த நிலையில், தந்தை நேருவும் சுதந்திர போராட்டத்தின் போது அடிக்கடி சிறையில் அடைக்கப்பட்டார். தனது பெரும்பாலான குழந்தை பருவத்தை வீட்டு பணியாளர்கள் துணையுடனும், பல உண்டுஉறைவிட பள்ளிகளிலும் கழித்தார். 1942 ஆம் ஆண்டில் இந்திரா ஃபெரோஸ் காந்தியை மணந்தார். பின்னர் அவரது தந்தை பிரதமரான பிறகு அவருக்கு உதவியாக பணியாற்றினார். கட்சியின் அரசியல் சச்சரவில் தன்னை தானே ஈடுபடுத்திக்கொண்ட இந்திரா, நேருவின் இறப்பிற்கு பிறகு லால் பஹ்தூர் சாஸ்திரியின் அமைச்சரவையில் தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சராகப் பணியாற்றினார்.
1966 ஆம் ஆண்டு கட்சியின் ஆதரவோடு பிரதமராக பதவியேற்ற இந்திரா, மெல்லிய தலைவராக இருப்பார் என்ற கணிப்புகளுக்கு நேர்எதிராக, அவர் கட்சி உறுப்பினர்களிடையேயை எதிர்ப்புக்கள் இருந்தபோதிலும், இந்தியாவில் உள்ள அனைத்து வங்கிகளையும் தேசியமயமாக்கினார். கட்சிக்குள்ளே இருந்த விரோதபோக்கினால் பதிவியிலிருத்து அவரை அகற்ற சிலர் முயன்றாலும், ஒவ்வொரு முறையும் அவற்றையெல்லாம் முறியடித்து, அதிகாரத்தை தக்கவைத்துக்கொண்டார். இந்திரா பிரமராக இருந்த காலக்கட்டத்தில் ஊழல் மற்றும் சர்வாதிகார ஆட்சி என்ற சர்ச்சை எழுந்ததன் விளைவாக அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டு, பின்னர் வந்த தேர்தலில் எதிர்கட்சி கூட்டணியிடம் ஆட்சியை பறிகொடுத்தார். தன் மீதான விமர்சனங்களை எல்லாம் முறியடித்து, 1980ல் மீண்டும் ஆட்சியை பிடித்து பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆயினும் அவசரமான நகர்வுகள் மற்றும் முடிவெடுப்பதில் பிழை போன்றவை அவரது மரணத்திற்கு அபாய வகுத்தன. நூற்றுக்கணக்கான சீக்கியர்களுக்கு மரணத்திற்கு காரணமான ஆபரேஷன் ப்ளூ ஸ்டார்க்கு உடந்தையாக இருந்தது, வாக்குவங்கியை பலப்படுத்த ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு வாக்களிக்கும் உரிமை வழங்கியது, நெல்லி படுகொலையில் உச்சக் கட்டம், தனது பதவிக்கு தகுதியற்றவர் என நிரூபித்தது, மக்களின் கோபம் போன்றவை 1984ல் அவரது படுகொலைக்கு வழிவகுத்தது.
முழுப் பெயர் | இந்திராகாந்தி |
பிறந்த தேதி | 19 Nov 1919 |
இறந்த தேதி | 31 Oct 1984 (வயது 64) |
பிறந்த இடம் | அலகாபாத், ஆக்ரா மற்றும் ஔத் ஐக்கிய மாகாணங்கள், பிரிட்டிஷ் இந்தியா |
கட்சி பெயர் | Indian National Congress |
கல்வி | |
தொழில் | அரசியல்வாதி மற்றும் சமூக சேவகர் |
தந்தை பெயர் | ஜவகர்லால் நேரு |
தாயார் பெயர் | கமலா நேரு |
Disclaimer: The information provided on this page is sourced from various publicly available platforms including https://en.wikipedia.org/, https://sansad.in/ls, https://sansad.in/rs, https://pib.gov.in/, https://affidavit.eci.gov.in/ and the official websites of state assemblies respectively. While we make every effort to maintain the accuracy, comprehensiveness and timeliness of the information provided, we cannot guarantee the absolute accuracy or reliability of the content. The data presented here has been compiled without consideration of the objectives or opinions of individuals who may access it.