முகப்பு
 » 
லாலு பிரசாத் யாதவ்

லாலு பிரசாத் யாதவ்

லாலு பிரசாத் யாதவ்

பீகார் மாநிலத்தை சேர்ந்த பிரபல அரசியல்வாதியான லாலு பிரசாத் யாதவ், ராஷ்ட்ரிய ஜனதா தள் கட்சியின் தலைவர் மற்றும் முன்னாள் பீகார் முதலமைச்சர் ஆவார். மேலும் இவர் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் மத்திய இரயில்வே அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.

லாலு பிரசாத் யாதவ் சுயசரிதை

பீகார் மாநிலத்தை சேர்ந்த பிரபல அரசியல்வாதியான லாலு பிரசாத் யாதவ், ராஷ்ட்ரிய ஜனதா தள் கட்சியின் தலைவர் மற்றும் முன்னாள் பீகார் முதலமைச்சர் ஆவார். மேலும் இவர் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் மத்திய இரயில்வே அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார். பட்னா பல்கலைகழகத்தில் படிக்கும் போதே, மாணவர் அரசியலில் களமிறங்கிய லாலு, தனது 29வது வயதில் மிக இளம் பாராளுமன்ற உறுப்பினராக ஜனதா கட்சியின் சார்பாக 1977ல் தேர்வானார். 1990ல் பீகாரின் முதலமைச்சராக பதவியேற்ற லாலு, தீவன ஊழல் குற்றச்சாட்டு காரணமாக 1997ல் பதவியை இராஜினாமா செய்தார். 2013ல் இவருக்கு முதல் தீவன ஊழலில் ஈடுபட்டதற்காக 5 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ25 லட்சம் அபராதமும் விதித்து உத்தரவிட்டது சி.பி.ஐ நீதிமன்றம். மூன்றாவது தீவன ஊழலிலும் இவர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டார். இரண்டாவது தீவன ஊழலில் 3.5 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. தும்கா கருவூலத்தில் இருந்து ரூ3.13 கோடியை சூறையாடியது தொடர்பான நான்காவது தீவன ஊழல் வழக்கிலும் சிபிஐ நீதிமன்றம் இவரை குற்றவாளி என அறிவித்தது. இவ்வழக்கில் ரூ60லட்சம் அபராதத்துடன், 14 ஆண்டுகள் சிறை தண்டனையும் வழங்கப்பட்டது.

மேலும் படிக்க
By Zainab Ashraf Updated: Tuesday, February 19, 2019, 01:36:47 PM [IST]

லாலு பிரசாத் யாதவ் தனிப்பட்ட வாழ்க்கை

முழுப் பெயர் லாலு பிரசாத் யாதவ்
பிறந்த தேதி 11 Jun 1948 (வயது 75)
பிறந்த இடம் கோபால்கன்ச், புல்வாரியா மாவட்டம்
கட்சி பெயர் Rashtriya Janata Dal
கல்வி Graduate Professional
தொழில் சமூக ஆர்வலர், வழக்கறிஞர்
தந்தை பெயர் திரு குந்தன் ராய்
தாயார் பெயர் மரசியா தேவி
மதம் இந்து
இணையதளம் http://rjd.co.in/shri-lalu-prasad-yadav.html
சமூக வலைதளங்கள் சமூக வலைதளங்கள்:

லாலு பிரசாத் யாதவ் நிகர மதிப்பு

நிகர மதிப்பு: ₹3.05 CRORE
சொத்துக்கள்:₹3.21 CRORE
கடன்கள்: ₹16.27 LAKHS

லாலு பிரசாத் யாதவ் சுவாரசிய தகவல்கள்

பாட்னா பல்கலைக்கழகத்தின் பிஎன் கல்லூரியில் சட்டப்படிப்பு மற்றும் அரசியல் அறிவியலில் முதுகலை படிப்பை முடித்த பின்னர், பாட்னாவில் உள்ள பீகார் கால்நடை கல்லூரியில் எழுத்தராக பணியாற்றினார் லாலு. இவரின் உடன்பிறந்தவர்கள் மொத்தம் 6 பேர். அதில் லாலுவின் மூத்த சகோதரர் அதே கல்லூரியில் அலுவலக உதவியாளராக இருந்தார். லாலு, ராப்ரி தம்பதிக்கு 2 மகன்கள் மற்றும் 7 மகள்கள் என மொத்தம் 9 குழந்தைகள். கால்பந்து, குத்துச்சண்டை, கிரிக்கெட், கபடி, பூப்பந்து மற்றும் இதர உள் அரங்க விளையாட்டுகளில் இவருக்கு ஆர்வம் அதிகம். 2001ல் பீகார் கிரிக்கெட் அசோசியேசனின் தலைவராக இருந்த லாலு, சாப்ரா மற்றும் பாட்னா ஸ்போர்ட்ஸ் கிளப்களிலும் உள்ளார். 23 செப்டம்பர் 1990 அன்று, அயோத்திக்கு ராம் ரத யாத்திரை மேற்கொண்ட எல்.கே அத்வானியை கைது செய்து, தன்னை மதச்சார்பற்ற தலைவராக அடையாளப்படுத்திக்கொண்டார்.

லாலுவிற்கு எதிரான முக்கிய வழக்குகள்

1) 1998 சொத்துகுவிப்பு வழக்கு
2) 1996 தீவன ஊழல் - தியோகர் கருவூலத்தில் இருந்து ரூ89.27 லட்சம் கையாடல் செய்ததாக 2வது வழக்கு : 2017ல் தண்டனை
3)1996 தீவன ஊழல் - சாய்பாசா கருவூலத்தில் இருந்து ரூ35.62 கோடி கையாடல் செய்ததாக 3வது வழக்கு : 2018ல் தண்டனை
4)1996 தீவன ஊழல் - தும்கா கருவூலத்தில் இருந்து ரூ3.97 கோடி கையாடல் செய்ததாக 4வது வழக்கு : 2018ல் தண்டனை
5)1996 தீவன ஊழல் - டொரன்டா கருவூலத்தில் இருந்து ரூ184கோடி கையாடல் செய்ததாக 5வது வழக்கு : நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது
6)2005 இந்திய இரயில்வே ஒப்பந்த ஊழல் : லாலு குடும்பத்தின் மீது சிபிஐ வழக்கு பதிவு
7)2017 - டிலைட் ப்ராபர்டிஸ் ரூ45 கோடி பினாமி சொத்து குவிப்பு மற்றும் வரி ஏய்ப்பு வழக்குகள்: லாலு குடும்பத்தின் மீது வழக்கு பதிவு
8)2017 - ஏபி எக்ஸ்போர்ட்ஸ் ரூ40கோடி பினாமி சொத்து குவிப்பு மற்றும் வரி ஏய்ப்பு வழக்குகள்: லாலு குடும்பத்தின் மீது சிபிஐ வழக்கு பதிவு
9)2017 பாட்னா பூங்கா மண் ஊழல்

லாலு பிரசாத் யாதவ் அரசியலில் கடந்து வந்த பாதை

2017
  • ஏபி எக்ஸ்போர்ட்ஸ் மூலம் ரூ40கோடி பினாமி சொத்து குவிப்பு மற்றும் வரி ஏய்ப்பு குற்றச்சாட்டு காரணமாக லாலு குடும்பத்தின் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது.
2017
  • பாட்னா பூங்கா மண் ஊழல், லாலு மற்றும் அவரது இரு மகன்களான தேஜ் பிரதாப் மற்றும் தேஜஸ்வி யாதவ் மீது எழுந்தது. தேஜ் பிரதாப்-ன் மோர் மால் கட்டுமானத்தின் அடித்தள மண்ணை விற்றதாக மூன்று பேர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
2015
  • லாலுவின் ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சி 81 தொகுதிகளில் வெற்றி பெற்று பீகார் சட்டமன்றத்தில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. ஐக்கிய ஜனதா தள கட்சியுடன் கூட்டணி அமைத்து , நிதீஸ் குமார் பீகாரின் முதலமைச்சர் ஆனார். ஆனால் இக்கூட்டணி ஜூலை 2017ல் முறிவடைந்தது.
2014
  • 2014 பொதுத்தேர்தலில் போட்டியிடவில்லை எனினும், தனது கட்சி வேட்பாளர்களுக்காக தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். ஆனாலும் 4 தொகுதிகளில் மட்டுமே அவரது கட்சி வெற்றி பெற்றது.
2013
  • மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டார் லாலு பிரசாத்.
2009
  • நாடாளுமன்ற தேர்தலில் சரன் மற்றும் பாடாலிபுத்ரா தொகுதிகளில் போட்டியிட்டு, சரன் தொகுதியில் இருந்து 15வது நாடாளுமன்றத்திற்கு மீண்டும் தேர்வானார். அங்கு ராஜீவ் பிரதாப் ரூடியை தோற்கடித்த அவர், பாடாலிபுத்ரா தொகுதியில் ஐக்கிய ஜனதா தள கட்சியின் போராசிரியர். ரஞ்சன் பிரசாத் யாதவிடம் தோற்றார். ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியின் நாடாளுமன்ற கட்சி தலைவராக பணியாற்றிய அவர், 31 ஆகஸ்ட் 2009ல் மக்களவை பணியாளர்கள், பொது குறைபாடுகள், சட்டம் மற்றும் நீதி குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.
2004
  • மத்திய இரயில்வே அமைச்சராக 23மே 2004 முதல் 22மே 2009 வரை பொறுப்புவகித்தார். கரீப் ரத ரயில், ரயில் நிலையங்களில் தேநீருக்கு மண் குவளைகள் அறிமுகம் போன்ற குறிப்பிடத்தக்க பணிகளை செய்தார்.
2004
  • பிஜேபி-ன் ராஜீவ் பிரதாப் ரூடி-யை தோற்கடித்து 14 மக்களவைக்கு 4வது முறையாக உறுப்பினரார தேர்வானார். ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியின் நாடாளுமன்ற கட்சி தலைவராகவும், 2004-09 வரை பொது விவகார குழு உறுப்பினராகவும் பதவி வகித்தார்.
2002
  • மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்ட லாலு 2004 வரை அப்பதவியில் இருந்தார். அக்காலக்கட்டத்தில் மாநிலங்களவை பொது விவகார குழு உறுப்பினர், ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சி தலைவர், ஊரக மேம்பாட்டு துறையின் அறிவுரை குழுவின் உறுப்பினர், தொழில் அறிவுரை குழு உறுப்பினர், உள் விவகார குழு உறுப்பினர் என பதவி வகித்தார்.
2000
  • 4வது முறையாக மீண்டும் பீகார் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.
1999
  • 1999 நாடாளுமன்ற தேர்தலில் சரத் யாதவை எதிர்த்து போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
1998
  • மேதாபூர் தொகுதியில் இருந்து 12வது மக்களவைக்கு 3வது முறையாக தேர்வானார். அக்காலக்கட்டத்தில், மக்களவையின் பொது விவகார குழு உறுப்பினர், உள்விவகார குழு மற்றும் அதன் சுதந்திரா சாய்னிக் சம்மன் பென்சன் திட்ட உபகுழுவின் உறுப்பினர், செய்தி மற்றும் ஒலிபரப்பு துறையின் அறிவுரை குழுவின் உறுப்பினர் என பல்வேறு பொறுப்புகளில் இருந்தார்.
1997
  • 5 ஜூலை 1997ல் ராஷ்ட்ரிய ஜனதா தளம் எனும் சொந்தக் கட்சியை துவங்கி, 2008ல் அதற்கு தேசிய கட்சி அந்தஸ்தையும் பெற்றார்.ஆனால் 2010ல் தேசிய கட்சி அந்தஸ்த்தை இழந்தது அக்கட்சி.
1997
  • பல்வேறு தீவன ஊழல் வழக்குகளில் குற்றஞ்சாட்டப்பட்டார் லாலு. அதன் காரணமாக ஜனதா தள கட்சியை விட்டு வெளியேறினார்.
1996
  • ஜனதா தளம் கட்சியின் தேசிய தலைவராக பொறுப்பேற்ற லாலு, அப்பதவியில் ஜனவரி 1996 முதல் ஜூலை 1997 வரை இருந்தார்.
1995
  • மீண்டும் பீகார் சட்டமன்றத்திற்கு தேர்வானார். இம்முறை ரகோபூர் மற்றும் தினாபூர் என இரு தொகுதிகளில் போட்டியிட்டார்.ரகோபூர் தொகுதியில் 54603 வாக்குவித்தியாசத்தில் சுயேட்சை வேட்பாளர் விசன்தியோ ராய்-யையும், தினாபூர் தொகுதியில் பிஜேபி வேட்பாளர் விஜய் சிங் யாதவை 23860 வாக்கு வித்தியாசத்திலும் தோற்கடித்தார்.
1990
  • பீகார் மாநிலத்தின் முதலமைச்சர் ஆனார் லாலு. 1990 முதல் 1995 வரை சட்டமன்ற உறுப்பினராகவும், மார்ச்1990 முதல் ஜூலை 1997 வரை முதலமைச்சராகவும் இருந்தார்.
1989
  • ஜனதா கட்சியின் சார்பாக 9வது மக்களவைக்கு மீண்டும் 2வது முறையாக தேர்வுசெய்யப்பட்ட லாலு, ஜெ.என்.பி கட்சியின் தேஜிவ் ரஞ்சன் சிங்-ஐ தோற்கடித்தார்.
1989
  • பீகார் சட்டசபையின் எதிர்கட்சி தலைவர், சட்டசபை நூலக குழு தலைவர்,பொது நிறுவனங்கள் குழு தலைவர் போன்ற பொறுப்புகளை வகித்தார்.
1985
  • 5 ஆண்டுகளில் இவரது வாக்கு சதவீதம் 45.56% மீண்டும் சோன்புர் தொகுதியில் வென்றார். இம்முறை காங்கிரஸ் கட்சியின் ராஜ் நரைன் சிங்-ஐ தோற்கடித்தார்.
1980
  • சோன்புர் தொகுதியில் இருந்து பீகார் சட்டமன்றத்திற்கு தேர்வான லாலு, 48.18% வாக்குகள் பெற்று காங்கிரஸ் கட்சியின் ஜவஹர் பிரசாத் சிங்-ஐ 9167 வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
1977
  • இளம் நாடாளுமன்ற உறுப்பினராக தனது29வது வயதில் 6வது மக்களவைக்கு சாப்ரா தொகுதியில் இருந்து தேர்வான லாலு, காங்கிரஸ் கட்சியின் ராம் சேகர் பிரசாத் சிங்-ஐ தோற்கடித்தார்.
1974
  • ஜெய்பிரகாஷ் நாராயணனின் பீகார் இயக்கத்தில் இணைந்த லாலு, விரைவில் ஜனதா கட்சியில் சேர்ந்தார்.
1973
  • பாட்னா பல்கலைகழக மாணவர் சங்கத்தின் தலைவரானார்.
1970
  • பாட்னா பல்கலைகழக மாணவர் சங்க பொதுச்செயலாளராக அரசியலில் அடியெடுத்து வைத்தார் லாலு.

லாலு பிரசாத் யாதவ் சாதனைகள்

2004ல் பாட்னா பல்கலைகழகம் லாலு பிரசாத் அவர்களுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்துள்ளது. 1990ல் பொருளாதார முன்னெடுப்புகளில் இவரது கட்சியின் பணியை உலக வங்கி பாராட்டியது.

Disclaimer: The information provided on this page is sourced from various publicly available platforms including https://en.wikipedia.org/, https://sansad.in/ls, https://sansad.in/rs, https://pib.gov.in/, https://affidavit.eci.gov.in/ and the official websites of state assemblies respectively. While we make every effort to maintain the accuracy, comprehensiveness and timeliness of the information provided, we cannot guarantee the absolute accuracy or reliability of the content. The data presented here has been compiled without consideration of the objectives or opinions of individuals who may access it.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X