மீனாட்சி நடராஜன் ஒரு இந்திய அரசியல்வாதி மற்றும் மண்டசூர் தொகுதியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஆவார். அவர் தனது அரசியல் வாழ்க்கையை இந்திய தேசிய மாணவர் சங்கத்தின் மூலம் தொடங்கினார். பின்னர், காங்கிரஸ் கட்சியின் இளைஞர் பிரிவின் தலைவராகவும், காங்கிரஸ் கட்சியின் மகளிர் பிரிவிலும் செயல்பட்டார். 2014ம் ஆண்டு மக்களவை தேர்தலில் தோல்வியடைந்த பிறகு, மண்டசூர் தொகுதியில் இன்னும் தீவிரமாக செயல்பட்டார். அவர் மண்டசூர் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு அளித்ததோடு அவர்களின் உற்பத்திக்கு சரியான விலை கிடைக்கவும் மற்றும் அவர்களின் கடன்களை தள்ளுபடி செய்வதற்காகவும் போராடினார். அவர் இந்தூரில் உள்ள தேவி அஹில்யா பல்கலைக்கழகத்தில் உயிர்வேதியியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றார். பின் சட்ட படிப்பையும் முடித்தார்.
| முழுப் பெயர் | மீனாட்சி நடராஜன் |
| பிறந்த தேதி | 23 Jul 1973 (வயது 52) |
| பிறந்த இடம் | நக்தா கிராமம்,ரட்லம் மாவட்டம், மத்திய பிரதேசம் |
| கட்சி பெயர் | Indian National Congress |
| கல்வி | Post Graduate |
| தொழில் | அரசியல்வாதி |
| தந்தை பெயர் | ஏ. ஆர். நடராஜன் |
| தாயார் பெயர் | திருமதி. உமா நடராஜன் |
| துணைவர் பெயர் | தகவல் இல்லை |
| துணைவர் தொழில் | தகவல் இல்லை |
| இணையதளம் | http://meenakshinatarajan.com/ |
Disclaimer:The information provided on this page is sourced from various publicly available platforms including https://en.wikipedia.org/, https://sansad.in/ls, https://sansad.in/rs, https://pib.gov.in/, https://affidavit.eci.gov.in/ and the official websites of state assemblies respectively. While we make every effort to maintain the accuracy, comprehensiveness and timeliness of the information provided, we cannot guarantee the absolute accuracy or reliability of the content. The data presented here has been compiled without consideration of the objectives or opinions of individuals who may access it.