தமிழ்நாட்டில் தீவிரமாக செயல்படும் பா. ஜ.
தமிழ்நாட்டில் தீவிரமாக செயல்படும் பா.ஜ.க தலைவர்களில் ஒருவர் பொன்.ராதாகிருஷ்ணன். வழக்கறிஞரான இவர் கன்னியாகுமரியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். 2017 ஆம் ஆண்டு இவர், மத்திய நிதித்துறை இணை அமைச்சராகவும், கப்பல் துறை இணை அமைச்சராகவும் பதவி வகித்தார். 1991 முதல் தொடர்ந்து நாகர்கோவில் தொகுதியில் இருந்து ஐந்து முறை நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டுள்ளார். இருப்பினும் அந்த ஐந்து தேர்தல்களில் நான்கு முறை தோல்வியடைந்த பொன். இராதாகிருஷ்ணன் 1999 மக்களவைத் தேர்தலில் மட்டுமே வெற்றி பெற்றார். ஆயினும் 2014 ஆம் ஆண்டு கன்னியாகுமரி தொகுதியில் 16 வது மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். 1999-2004 காலகட்டத்தில் அடல் பிஹாரி வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கத்தில் இணை அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.
2019 லோக்சபா தேர்தலில் பொன். ராதாகிருஷ்ணன் குமரி தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இங்கு காங்கிரஸ் சார்பாக வெற்றிபெற்ற வசந்தகுமார் எம்பி காலமானதை அடுத்து இடைத்தேர்தல் நடக்க உள்ளது. இதனால் பொன். ராதாகிருஷ்ணன் பாஜக சார்பாக குமரி தொகுதியில் மீண்டும் போட்டியிட உள்ளார்.
முழுப் பெயர் | பொன். இராதாகிருஷ்ணன் |
பிறந்த தேதி | 01 Mar 1952 (வயது 72) |
பிறந்த இடம் | ஆலதான்கரை கிராமம், நாகர்கோவில், கன்னியாகுமரி மாவட்டம் (தமிழ்நாடு) |
கட்சி பெயர் | Bharatiya Janta Party |
கல்வி | Graduate Professional |
தொழில் | வழக்கறிஞர் |
தந்தை பெயர் | திரு.பொன்னையா ஐயப்பன் |
தாயார் பெயர் | திருமதி. தங்ககனி |
Disclaimer: The information provided on this page is sourced from various publicly available platforms including https://en.wikipedia.org/, https://sansad.in/ls, https://sansad.in/rs, https://pib.gov.in/, https://affidavit.eci.gov.in/ and the official websites of state assemblies respectively. While we make every effort to maintain the accuracy, comprehensiveness and timeliness of the information provided, we cannot guarantee the absolute accuracy or reliability of the content. The data presented here has been compiled without consideration of the objectives or opinions of individuals who may access it.