தயாநிதி மாறன்

தயாநிதி மாறன்
தமிழ்நாட்டைச் சேர்ந்த கொண்டாடப்படும் அரசியல்வாதியான தயாநிதிமாறன், திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னணி உறுப்பினர்களில் ஒருவர். இவர் தமிழ்நாட்டில் இருந்து இரண்டு முறை பாராளுமன்ற மக்களவைக்கு திமுக சார்பாக தேர்வானவர்.
By Ajay M V | Tuesday, February 19, 2019, 01:36:47 PM [IST]

தயாநிதி மாறன் சுயசரிதை

தமிழ்நாட்டைச் சேர்ந்த கொண்டாடப்படும் அரசியல்வாதியான தயாநிதிமாறன், திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னணி உறுப்பினர்களில் ஒருவர். இவர் தமிழ்நாட்டில் இருந்து இரண்டு முறை பாராளுமன்ற மக்களவைக்கு திமுக சார்பாக தேர்வானவர். 2009 பாராளுமன்ற தேர்தலில் மத்திய சென்னை தொகுதியில் வெற்றி பெற்று 15வது மக்களவைக்கு தேர்வானார் தயாநிதிமாறன். முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலிமாறனின் மகனான இவர், தமிழக முன்னாள் முதல்வரும் மறைந்த திமுக தலைவருமான கருணாநிதியின் பேரன். சன் குழுமத்தின் நிறுவன தலைவரும், இந்திய கோடிஸ்வரர்களில் ஒருவருமான கலாநிதிமாறன் இவரது மூத்த சகோதரர்.

மேலும் படிக்க

தயாநிதி மாறன் தனிப்பட்ட வாழ்க்கை

முழுப் பெயர் தயாநிதி மாறன்
பிறந்த தேதி 05 Dec 1966 (வயது 59)
பிறந்த இடம் சென்னை, தமிழ்நாடு
கட்சி பெயர் Dravida Munetra Kazhagam
கல்வி பட்டதாரி
தொழில் அரசியல்வாதி, தொழிலதிபர்
தந்தை பெயர் முரசொலி மாறன்
தாயார் பெயர் மல்லிகா மாறன்
துணைவர் பெயர் பிரியா தயாநிதிமாறன்
துணைவர் தொழில் நிறுவன இயக்குனர்
குழந்தைகள் 1 மகன்(கள்) 1 மகள்(கள்)
இணையதளம் NIL

தயாநிதி மாறன் நிகர மதிப்பு

நிகர மதிப்பு
₹10.94 CRORE
சொத்துக்கள்
₹10.94 CRORE
கடன்கள்
N/A

தயாநிதி மாறன் சுவாரசிய தகவல்கள்

அமெரிக்காவின் ஹார்வர்டு பிசினஸ் ஸ்கூலில் "ஓனர்/பிரசிடென்ட் மேனேஜ்மென்ட் ப்ரோக்ராம்" படித்துள்ள தயாநிதிமாறன், நடப்பு நிகழ்வுகள், அரசியல், சமூக அறிவியல், வர்த்தகம், பொருளாதாரம், சர்வதேச வணிகம் மற்றும் தகவல்தொழில்நுட்பம் போன்ற துறைகளின் புத்தகங்கள் மற்றும் ஏடுகளை விரும்பி படிப்பவர். நவநாகரீக தோற்றம் மற்றும் நேர்த்தியான உடைகளுக்கு பெயர்பெற்ற தயாநிதிமாறன், மத்திய அமைச்சரவையின் இளம் உறுப்பினராக இருந்தவர்.

தயாநிதி மாறன் அரசியலில் கடந்து வந்த பாதை

  • 2014: சென்னை மத்திய தொகுதியில் இருந்து தேர்தலில் போட்டியிட்டு அதிமுக வேட்பாளர் எஸ்.ஆர். விஜயகுமாரிடம் தோல்வியடைந்தார்.
  • 2009: திமுக கட்சி வேட்பாளராக தமிழ்நாட்டின் மத்திய சென்னை தொகுதியில் இருந்து லோக்சபாவிற்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • 2007: டினகரன் தாக்குதல் வழக்கு காரணமாக ஏற்பட்ட குடும்பப் பிரச்சனை காரணமாக அவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார். மேலும், டிசம்பர் 2007 முதல் டிசம்பர் 2010 வரை 250 மில்லியன் இணைப்புகள் என்ற இலக்கை அவரது அமைச்சகம் நிர்ணயித்து அடைந்தது, இது மே 2004 இல் 75 மில்லியனாக இருந்தது.
  • 2004: ஏப்ரல் – மே 2004 இல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல்களில், தமிழ்நாட்டின் சென்னையில் உள்ள மத்திய சென்னை தொகுதியில் இருந்து திராவிட முன்னேற்றக் கழக (திமுக) கட்சி வேட்பாளராக 14வது மக்களவைக்கு போட்டியிட்டார். 2004 தேர்தல்களின் போது, அவரது வெற்றி வித்தியாசம் 134,000 வாக்குகளுக்கு மேல் இருந்தது மற்றும் அவர் பதிவான மொத்த வாக்குகளில் 62% பெற்றார்.
  • 2003: தயாநிதி மாறன் தனது தந்தை முரசொலி மாறனின் மறைவுக்குப் பிறகு அரசியலில் நுழைந்தார்.
  • மே 2004: 26 மே 2004 அன்று மத்திய தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை மத்திய அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

முந்தைய வரலாறு

  • 80களின் ஆரம்பம்: இவர் டோன் பாஸ்கோ, எழும்பூர், சென்னையில் தனது பள்ளிப் படிப்பை முடித்தார். இவர் தமிழ்நாட்டில் ஆரம்பக் கல்வியைப் பெற்று, சென்னையில் உள்ள லயோலா கல்லூரியில் பொருளாதாரத்தில் பட்டம் பெற்றார். இவர் ஹார்வர்ட் பிசினஸ் ஸ்கூல் (அமெரிக்கா) யில் "ஓனர் / பிரசிடென்ட் மேனேஜ்மென்ட் ப்ரோக்ராம்" (OPM) யிலும் பயின்றார்.

தயாநிதி மாறன் சாதனைகள்

மொபைல் கம்யூனிகேஷனில் இந்திய அரசின் சாதனைகளை பாராட்டி 13 பிப்ரவரி 2007ல் ஜிஎஸ்எம்ஏ கவுரவித்தது. பாரத் அஸ்மிதா ஜன பிரதிநிதி ஸ்ரஸ்தா விருது எம்ஏஇஇ ஆல் வழங்கப்பட்டது. 3 பிப்ரவரி 2005ல் ஜனநாயகத்தை ஊக்குவித்து பாராளுமன்ற நடைமுறைகளை பின்பற்றும் சிறந்த இளம் பிரதிநிதி எனும் விருது பூனே மகாராஷ்டிரா இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி ஸ்கூல் ஆப் மேனேஜ்மென்ட் ஆல் வழங்கப்பட்டது. ஸ்விட்சர்லாந்தில் 24 ஜூன் 2005ல் நடைபெற்ற மைடன் சப்மிட்டில் இளம் சர்வதேச தலைவர் விருது வழங்கப்பட்டது. 25 ஆகஸ்ட் 2015ல் இந்தியா டுடே நிறுவனம் இந்திய அரசியலில் சாதனையாளர் பிரிவில் சிகரம்-15 விருது தரப்பட்டது.

தமிழ் வார இதழான குங்குமத்தில் பல்வேறு தலையங்கங்கள் எழுதியுள்ள இவர், கடந்த 13 ஆண்டுகளாக அச்சு ஊடகம் மற்றும் தகவல்தொழில்நுட்பத் துறையில் உள்ளார். தகவல்தொழில்நுட்பம் மற்றும் தொலைதொடர்புத்துறை அமைச்சராக இவர் பதவி வகித்த காலத்தில், மொபைல் மற்றும் லேண்ட்லைன் கட்டணங்கள் வெகுவாக குறைந்து சந்தாதாரர்கள் எண்ணிக்கை உயர்ந்தது. நாடு முழுவதும் இவரது அமைச்சகம் அமல்படுத்திய "ஒரு ரூபாய் ஒரு இந்தியா" திட்டம் காரணமாக, இந்தியா முழுவதும் ஒரு நிமிடத்திற்கு ஒரு ரூபாய் கட்டணத்தில் அழைப்புகள் மேற்கொள்ள முடிந்தது.

Disclaimer:The information provided on this page is sourced from various publicly available platforms including https://en.wikipedia.org/, https://sansad.in/ls, https://sansad.in/rs, https://pib.gov.in/, https://affidavit.eci.gov.in/ and the official websites of state assemblies respectively. While we make every effort to maintain the accuracy, comprehensiveness and timeliness of the information provided, we cannot guarantee the absolute accuracy or reliability of the content. The data presented here has been compiled without consideration of the objectives or opinions of individuals who may access it.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+